முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லை நடராஜர் கோவில் தீட்சிதரதகளின் யாக வேள்வி வசூல் குறித்து நீதிமன்றத்தில் விவாதம்

தில்லை நடராஜர்  கோவில் பக்தர்களுக்குச் சொந்தமானது;


தனிப்பட்ட யாரும் உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்துக்குள் நந்தவனம் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை பொது தீட்சிதர்கள் அரசின் எந்த வொரு அனுமதியும் பெறாமல் மேற்கொண்டு வருவதாகக்கூறி இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும், மற்றும் எம்.என்.ராதா என்பவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில்  நடைபெற்ற போது மனுதாரர் எம்.என்.ராதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ள மாட்டோமென உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டு கட்டுமானப்பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று கூட ஜேசிபி இயந்திரம் கோயிலுக்குள் நிற்கிறது. அதற்கான புகைப்படங்கள் உள்ளதெனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், திருவண்ணாமலை கோயிலுக்கு வெளியே கட்டுமானங்கள் கட்டப்படுவதாக பலரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால் சிதம்பரத்தில் எந்த அனுமதியும் பெறாமல் கோயிலுக்குள்ளேயே கட்டுமானம் கட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானது. பாரம்பரியமிக்க புராதனச் சின்னமான சிதம்பரம் கோவில் மீது கை வைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். சிதம்பரம் நடராஜர் கோவில் பக்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதன் மீது யாரும் உரிமை கோர முடியாது என்றனர். அப்போது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிசங்கர், சிதம்பரம் கோவில் வளாகத்துக்குள் எந்தவொரு விதிமீறலும் நடைபெறவில்லை. 150 ஆண்டுகள் கடந்த உயர் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதுபோலத்தான் இதுவும் என்றார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருன் நடராஜன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கிலும் சிதம்பரம் கோவிலில் முறையற்ற நிர்வாகம் நடைபெற்றால் அதில் அரசு தலையிடலாம் என்று தான் உள்ளது. கோவில் மீதான உரிமைகள் அனைத்தையும் தனிநபர்களுக்குக் கொடுத்து விடவில்லை. சட்டவிரோதக் கட்டுமானங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்தக் கோவிலை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அந்தக்குழு எப்போது வேண்டுமென்றாலும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் சென்று ஆய்வு நடத்துமென்றார்.


அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், வழக்குத் தொடர்ந்த நடராஜ தீட்சிதர் பக்தர்களைத் தாக்கியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர். அந்த வழக்கே உள்நோக்கமானது. தவறான தகவலை நீதிமன்றத்துக்குத் தெரிவித்து அந்த உத்தரவைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், அதுதொடர்பாக தலைமை நீதிபதி அமர்வில் தான் முறையிட வேண்டும். எங்களைப் பொருத்தமட்டில் சிதம்பரம் கோவிலுக்குள் கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோமென உத்தரவாதம் அளித்துவிட்டு அதை மீற முடியாது. அதுதொடர்பான ஆதாரங்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு செய்யக் குழுவும் அமைக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், சிதம்பரம் கோவிலில் தற்போது உண்டியல் இல்லை. பக்தர்கள் அளிக்கும் நன்கொடை யாருக்குச் செல்கிறது. நன்கொடையை வசூலிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது, எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இடையீட்டு மனுதாரரும், ஆலய வழிபாட்டுக்குழுத் தலைவருமான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ், 1951-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இந்த கோவிலில் உண்டியல் கிடையாது. பக்தர்கள் அளிக்கும் நன்கொடை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தனிப்பட்ட முறையில் தரப்படும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் சி.கனகராஜ், இந்த கோவிலுக்குள் அனுமதியின்றி யாகங்கள் நடத்தப்படுகிறது. அதற்கு பக்தர்களிடம் ரூபாய். 5 லட்சம் முதல் ரூபாய். 10 லட்சம் வரை பணம் வசூலிக்கப்படுகிறதென்றார். அதற்கு நீதிபதிகள், பொத்தாம் பொதுவாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறக்கூடாது. அப்படி பணம் வசூலித்தால் அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள் எனக் கூறி வழக்கை டிசம்பர் மாதம் .20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...