சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அப்பம்மா சமுத்திரம்
ஊராட்சிக்குட்பட்ட இராமநாயகன் பாளையம் கிராமம். காரமடை திட்டு பகுதி விவசாயி கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். ஆகியோரின் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இலக்கிய அணி சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் தொடர்ந்து பல அச்சுறுத்தல் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுவது தொடர்பாக காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குகளும் நடைபெறுகிற நிலையில், சில மாதங்களுக்கு முன் அமலாக்கத் துறையிலிருந்து சம்மன் வந்ததில் அவர்களின் ஜாதிப்பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சென்னைக்குச் சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். உணவிற்கே வழியில்லாத தங்களுக்கு சொத்து அதிக அளவில் இருப்பதாகவும் பணம் வைத்துள்ளதாகவும் நோட்டீஸ் வழங்கியுள்ளது வேடிக்கையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாய நிலத்திற்கும் அமலாக்கத் துறைக்கும் என்ன சம்பந்தமெனவும், முகவரியில் ஜாதிப் பெயருடன் சம்மன் அனுப்பிய நோக்கம் என்ன? எனவும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வைரலாகிறது.
கருத்துகள்