முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசுத் துறைகளில் உள்ள பெயர்களை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவதை மட்டுமே தடை செய்யலாம் அதுவே உண்மையான மோசடி

அணைத்துத் துறைகளிலும் போலியானவர்களும் மோசடிப் பேர்வழிகளும் உண்டு .

நான் பத்திரிகையாளன். அதனால் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் உள்ள ஜனநாயக உரிமை.

ஒருவர் வழக்கறிஞர் அவர் பயன்படுத்தும் வாகனத்தில் வழக்கறிஞர் என்ற அடையாளத்தை பொறித்துக்கொள்வது அவர் உரிமை.

ஒருவர் மருத்துவர்.என அவரை அடையாளப்படுத்திக் கொள்வது அவரது உரிமையும் கடமையும்.

இதுபோன்று அரசு சாராமல் தனது துறைகளை அடையாளப்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது அதற்கு உரிமையுமில்லை.

தீவிபத்து நேர்ந்து விட்டது என்பதால் யாரும் வீட்டில் சமையல் செய்யக்கூடாது என்பதைப்போல இருக்கிறது சென்னை காவல்துறையின் இந்த அறிவிப்பு.


PRESS, ADVOCATE, DOCTOR, ENGINEER  என்று வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாத பகுதியில் எழுதி வைத்துப் போனால்  காவல்துறை நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று நினைப்பதாக யார் சொன்னது?

இதனால் சிறப்பு சலுகை எங்காவது கிடைக்கிறதா.      சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதிலையா?

காவலர்கள் எப்போது வேண்டுமானாலும் உண்மைத்தன்மையை சோதனையிடலாம்.


சோதனை செய்யக்கூடாது என்று யார் சொன்னது?

போலியாக இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு சுற்றுபவர்களுக்கு ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை என்று கூட அறிவிக்கலாம்.

உண்மையாக தனது தொழிலை அடையாளப்படுத்துவதை தடுப்பது என்பது ஜனநாயக விரோதம்.


வருடத்துக்கு ஒருமுறை வாகனங்களை வைத்து எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறை திட்டம் வகுப்பதே மக்களாட்சியை மீறி நடத்தும் செயலாகும்.

வழக்குப் பணிக்காக நீதிமன்றத்துக்கு தடங்கல் இல்லாமல் செல்லும் வழக்கறிஞர்களுக்கும், 

விரைவாகச் செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களுக்கும்,

அவசர சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களுக்கும் 


தங்களது துறையின் பெயரை வாகனங்களில் பொறித்துச் செல்வது குற்றம் என்றால்,

அரசுப் பேருந்து முழுக்க விளம்பர ஸ்டிக்கர் ஒட்டி உள்ளதை அப்புறப்படுத்துங்கள். அதில் ஒரு நெய் கடை விளம்பரம் வண்டி முழுவதும் வண்டி அடையாளம் தெரியாத நிலையில் 


தனியார் வாகனங்களில் POLICE என்று ஒட்டிக்கொண்டு சிக்னல்களில் நிற்காமலும், ஹெல்மெட் போடாமலும் செல்வோர் மீது நடவடிக்கை எடுங்கள் ஏன் என்றால் அது அரசு பணி அதை தனியார் வாகனங்கள் பயன் படுத்தி நடந்தால் அது மோசடி,

PRESS, அல்லது ADVOCATE என்பது அரசாங்கப் பெயர் இல்லை.

அது தொழிலின் நிமித்தம் உள்ள பெயர்.முறையாக RNI வாங்கி நடத்தும் பத்திரிகை நிறுவனத்திலும் மற்றும் மெடிக்கல் கவுன்சில், பார் கவுன்சில், பதிவு பெற்ற நபர்கள் தங்கள் அடையாளத்தை நீக்குவதற்கும், Police, ஆர்மி, வருவாய் துறை, நீதித்துறை என அரசு பணியில் இருந்து கொண்டு பயன் படுத்தி வருவதற்கும் வித்தியாசம் உண்டு 


POLICE என்பதே அரசாங்கத் துறை சார்ந்த பெயர்.

அதுபோன்ற அரசாங்கப் பெயர்களை எழுதக்கூடாது என்பதே விதி.

காவல்துறை அறிவிப்பில் மறு பரிசீலனை தேவை.

அனைத்துத் துறைகளின் பிரதிநிதிகளை அழைத்து விளக்கமளிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.வாகனங்கள் சோதனை செய்து பரிசோதித்து அதில் போலியான நபர்கள் பயன்படுத்தி இருந்து அதற்கு நடவடிக்கைகள் எடுத்தால் பாராட்டலாம் ஆனால் சரியான நபர்கள் சரியான இடத்தில் உள்ள பெயர் அவரது அடையாளம் ... குறிப்பாக இராமசாமி என்பவர் வண்டியில் அவர் பெயர் இருந்தால் எப்படிக் குற்றம் ஆகும், பாத்திரம் பெயர் வெட்டுவது போலவே இதுவும்,    தற்போது சென்னையில் வாகன பதிவு எண்கள் நம்பர் பிளேட் முறையாக அரசு விதிக்குட்பட்டு இல்லாத வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அப்போது சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட்டுகளையும், நம்பர் பிளேட்டுகளே இல்லாத வாகனங்களையும் தடுத்து நிறுத்தி முதல் முறையாக 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபடும் வாகனங்களுக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இதுபோல் வாகனங்களை  இயக்கினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் ஹர்ஸ் சிங் தெரிவித்தார் இரு சக்கர மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு வெள்ளை நிற பலகையில் கருப்பு நிறத்தில் பதிவெண் எழுதி இருக்க வேண்டும்

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கார்கள் மற்றும் கனரக வாகனங்களில் மஞ்சள் நிற பலகையில் கருப்பு நிறத்தில் பதிவெண் எழுதியிருக்க வேண்டும்

பதிவெண் பலகை வண்டியின் முன்னும் பின்னும் பொருத்தியிருக்க வேண்டும்

புரியும்படி தெளிவான எழுத்துகளில் எழுதியிருக்க வேண்டும். மற்ற படம், பெயர் இடம் பெறக்கூடாது

இருசக்கர, இலகு ரக நான்கு சக்கர வாகனத்தின் முன்பக்கம் ஒரே வரிசையிலும், பின்பக்கம் இரண்டு வரிசையாகவும் பதிவெண் எழுதி இருக்க வேண்டும்.

உதாரணமாக முன்பக்கத்தில் 'TN 01 X 0XX0' எனவும்

பின்பக்கத்தில்

'TN 01

X 0XX0'

எனவும் எழுதி இருக்க வேண்டும்.


இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் பதிவெண் பலகை 200 x 100 மில்லி மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும்

இதில் பின்பக்க எழுத்தின் உயரம் 35 மில்லி மீட்டராகவும், தடிமன் 7 மில்லி மீட்டராகவும், இரண்டு எழுத்துக்கு இடையே 5 மில்லி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

அதே போல பின்பக்க பலகையில் வரும் எண்களின் உயரம், தடிமன், இடைவெளி முறையே 40 x 7 x 5 என்ற அளவில் இருக்க வேண்டும்


முன்பக்க பலகையில் வரும் எண்களும், எழுத்துக்களும் 30 x 5 x 5 என்ற அளவில் அதன் உயரம், தடிமன், இடைவெளி இருக்க வேண்டும்

இதே போல ஒவ்வொரு வாகனங்களுக்கு அதன் திறனுக்கேற்ப வெவ்வேறு அளவில் பதிவெண் பலகைக்கான அளவுகள் உள்ளன. அதனை பின்பற்றி பலகைகளை பொருத்த வேண்டும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

விரைந்து செய்தி சேகரிக்கவும், கேமரா உள்ளிட்ட  ஒளிப்பதிவு கருவிகளை பாதுகாப்பாக வாகனத்தில் கொண்டு செல்லவும்,  தங்களை அடையாளப் படுத்தும் வகையிலும் செய்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் பிரஸ், மீடியா என ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் போலீஸ், பிரஸ், வழக்கறிஞர் மருத்துவர், தலைமை செயலகம் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை சுற்றறிக்கை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போலீஸ், பிரஸ், வழக்கறிஞர் மருத்துவர், தலைமை செயலகம் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சிலர் சமூகவிரோதக் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை முறையாக வாகனப் பரிசோதனை செய்து இதை தடுக்க முடியும். அதை விடுத்து பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஓட்டக் கூடாது என்ற அறிவிப்பு பத்திரிகையளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு சிலர் எந்தச் சம்மந்தமும் இல்லாமல் போலீஸ், பிரஸ், தலைமை செயலகம், வழக்கறிஞர் மருத்துவர் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சமூகவிரோத குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு காவல்துறை தடுக்க வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறான செயல்களால் உண்மையானவர்களும் பாதிக்கக் கூடிய இந்த அறிவிப்பை சென்னை போக்குவரத்துக் காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

பத்திரிகைத் துறைக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி முறைக்கேடு செய்தால் அவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பரிசோதனையில் போக்குவரத்துக் காவல்துறைக்கு பத்திரிகையாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாகன ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்களிக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த