முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐடி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறி வரும் பணியாளர்கள்

கொரோனா தொற்று பரவிய காலத்தில் வழங்கப்பட்ட அதிகப்படியான வேலை பளுவை சலுகையில் அனுபவித்த ஐடி ஊழியர்கள்,


கொரோனா அச்சம் முடிந்து  மூன்றாண்டுகள் ஆகியும் அலுவலகத்திற்கு வர மறுக்கின்றனர். இது ஐடி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறி வருகிறது, ஒருபக்கம் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதால் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்து வரும் அதே வேளையில் ஊழியர்கள் செயல்திறன் குறைவாக உள்ளதாக பல நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளதனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருவது கட்டாயமாக்க டெக் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.


இதற்கேற்ப நிறுவனங்களும் அலுவலக சூழல் மாறி வருகிறது. டெக் நிறுவனங்கள் பணியாற்றும் இடத்தின் சூழலை மேம்படுத்தவும், பணியாற்றும் தரத்தை மெருகேற்றவும் பல்வேறு ஊக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் ஊழியர்கள் நிறுவனங்களின் அலுவலக வேலை விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திலுள்ளனர், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.  காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரவி குமார், மேலாளர்கள் தேவைக்கேற்ப பணியாளர் அலுவலகம் வந்து பணியாற்றும் ஊழியர்களின் பட்டியலை உருவாக்க உதவும் புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.   இது ஏற்கனவே இருக்கும் FlexiSeat செயலியுடன் இணைந்து செயல்படும், FlexiSeat செயலி என்பது நிறுவன வளாகம் முழுவதும் இருக்கைகள் முன்பதிவு செய்ய உதவுகிறது.இந்த புதிய செயலி நிறுவனத்தின் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் கொள்கைகளை மேற்பார்வை செய்யும். இதன் மூலம் ஊழியர்களின் வருகையை துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.TCS: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் அளிக்கும் வேரியபிள் பே தொகையை அவர்களின் அலுவலக வருகையுடன் இணைக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தியுள்ளது.



60 சதவீதத்துக்கும் குறைவான நேரம் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேரியபிள் பே வழங்கப்படாது. 60 முதல் 75 சதவீதம் வரை அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு 50 சதவீத வேரியபிள் பே வழங்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் டிசிஎஸ் ஊழியர்கள் அலுவலகத்திற்கு உடனே ஓடி வருகின்றனர்.DELL: அமெரிக்க நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ், மின்னணு பேட்ஜ் ஸ்கேன், வி.பி.என் மற்றும் வண்ணக் குறியீட்டு முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஊழியர்களின் வருகையை கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெல் தனது ஊழியர்களின் அலுவலக வருகையை நான்கு வண்ணங்களில் வகைப்படுத்துகிறது: நீலம் (தொடர்ச்சியாக அலுவலகத்திற்கு வருபவர்), பச்சை (வழக்கமாக அலுவலகத்தில் வருபவர்), மஞ்சள் (பகுதி நேரம் அலுவலகத்திற்கு வருபவர்), மற்றும் சிவப்பு (குறைவான நேரம் அலுவலகத்திற்கு வருபவர்) என வகைப்படுத்தியுள்ளது.Infosys: இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஊழியர் அனுபவ தளமான "InfyMe," மூலம், குறிப்பிட்ட வணிக பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் மாதத்திற்கு 11 நாட்கள் வரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி கோரும் வாய்ப்பை வழங்கியுள்ளது.



இதைத் தவிர மற்ற நாட்களில் அலுவலகத்திற்கு கட்டாயம் வர வேண்டும்.Wipro: இந்தியாவில் வொர்க் ப்ரம் ஹோம் கட்டுப்பாட்டில் இன்னும் அதிகப்படியான தளர்வுகளோடு இயங்குவது விப்ரோ நிறுவனம் தான். சமீபத்தில் விப்ரோ தலைமை மனித வள பிரிவு அதிகாரியான சௌரப் கோவில் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் ஊழியர்களுக்கான ஆன் கேம்பஸ் ஆக்டிவிட்டிகளை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.இதுநாள் வரை ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க கெஞ்சிய ஐடி நிறுவனங்கள் தற்போது வேரியபிள் பே, ப்ரோமோஷன், சம்பள உயர்வு ஆகியவற்றில் கைவைக்கத் துவங்கியுள்ளது. இனி வரும் காலத்தில் வொர்க் ப்ரம் ஹோம் விவகாரத்தில் ஊழியர்களின் ஆதிக்கம் குறைந்து, நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்க உள்ளது என்பது தான் உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்