முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தீர்மானம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தீர்மானம்  பீஹார் மாநிலம் தானே ஜாதி வாரிக் கணக்கெடுப்பு. நடத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் 

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும். அந்த நோக்கத்தோடு தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சமநிலையைக் கொண்டுவருவதற்காக இடஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தாழ்த்தப்பட்டோர், பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து அதனை கடைப்பிடித்து வருகிறோம். சமீபகாலமாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதே பேரவையில் நேற்று முன் தினம் கூட பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஜிகே மணி, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் எனப் பேசினார். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணமும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசுகிறேன். தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் 1948 ன் கீழ் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பணி. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சிக் காலத்திலிருந்து நூறாண்டுகளுக்கும் மேலாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் பணி. மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.                   மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டப்பிரிவு 3-ன் படி மத்திய அரசு தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால் புள்ளி விவரச் சட்டம் 2008 ன் அடிப்படையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என பொது வெளியில் பரவலாகவே சொல்லப்படுகிறது. மேலும் இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூக பொருளாதார புள்ளி விவரங்களை சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுளளதே தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3 (அ)-ன் படி இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 7 வது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பாக புள்ளி விவரங்கள் சேகரிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 7 வது அட்டவணையில்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 69 வது இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்தச் சட்டப்பிரிவு 32-ன் படி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சட்டம் 1948 ன் கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள் தொகை தொடர்பான விவரங்களைச் சேகரிக்க இயலாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளநிலையில் பொதுவெளியில் தவறாகச் சொல்லப்படும், புள்ளிவிவரச் சட்டம் 2008 ன் கீழ் மாநில அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த இயலாது. சட்டப்படி, நிலைக்க கூடிய கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ள வேண்டும்.  எனவே தான் இப்பணியை மத்திய அரசு மேற்கொள்வது தான் முறையாக இருக்கும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.  அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 246 ன் படி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளாமல் மத்திய அரசு இன்று வரை காலம் தாழ்த்தி வருகிறது. முதல் ஆண்டு கோவிட் தொற்றைக் காரணமாகச் சொன்னார்கள். கோவிட் தொற்று முடிந்து மூன்றாண்டுகள் கடந்தும் அப்பணியை மேற்கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு தனது கடமையைப் புறக்கணிக்கும் செயல். மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரிகா கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளும் போது கிடைக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகள், இயற்றும் சட்டங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கும். மாறாக அந்தந்த மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரித்து அதனை சட்டமாக மாற்றினால் நீதிமன்றங்களில் அது ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானத்தை முன்மொழிகிறேன்.” எனக் கூறினார்.    சட்ட மன்றப்பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் விபரம்:          "இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமஉரிமை, வாய்ப்பை கிடைக்க உறுதி செய்யும் வகையில் திட்டங்களை தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம் என்று இந்த பேரவை கருதுகிறது  எனவே, 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்"

இதற்கிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் நிறைவேறியதென அறிவிக்கப்பட்ட நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது " அய்யோ... பாவம் அவர்கள் எதுவும் அறியாவதவர்கள்.

சமுக அநீதி குறித்து ஸ்டாலினிடம் பாடம் படித்திருக்கலாம்!

ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டும் தான் நடத்த முடியும்; மாநில அரசால் நடத்த முடியாது என்ற அரிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்து சட்டப்பேரவையில்  தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  ஆஹா... என்னவொரு கண்டுபிடிப்பு.  சமூக அநீதியில் முனைவர் பட்டம் பெற்ற இவரைப் போன்றவர்களால் தான் இப்படியெல்லாம் பேச முடியும்.

இந்தியாவில் பிஹார், கர்நாடகம், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  அய்யோ பாவம்... இவர்களுக்கு எல்லாம் சமூக அநீதி குறித்து எதுவும் தெரியவில்லை. 

 அவர்கள் வேண்டுமானால் சமூக அநீதிக் காவலர் மு. க.ஸ்டாலினை சந்தித்து  சமூக அநீதி ஆலோசனை  பெற்றிருக்கலாம். அவ்வாறு கேட்டிருந்தால்  அந்த மாநிலங்களிலும்  ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தடுத்தி நிறுத்தியிருப்பார் நமது முதல்வர்.

வாழ்க சமூக அநீதிக் காவலர்,  வளர்க சமூக அநீதி! எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியது .   இதில் பொது நீதி யாதெனில்: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தத் தீர்மானத்தில் ஜாதிவாரி மொழிவாரிக் கணக்கெடுப்பு என மாற்றிடக் கோரி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களும் அரசியல் கட்சிகளும் அழுத்தம் தர வேண்டும் என்பதே நமது அவா !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு