முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாளை பதவியேற்கும் பிரதமர் தலைமையிலான கூட்டணி அமைச்சரவை

குடியரசுத் தலைவர் செயலகம் சார்பில் பத்திரிகைகளுக்கான அறிவிப்பில் ஜூன் 09, 2024 அன்று மாலை 07:15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மற்றும் கூட்டணி மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைப்பார். 


என்பதாகும். நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது தங்களை ஈன்றெடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கிய தங்கள் தாய் தந்தை செய்த புண்ணியம் அது.


21 வயதில் எங்கோ அலைந்து திரிந்து ஏதோ மூலையிலிருந்த தங்களை அன்புடன் அரவணைத்து அன்னமிட்டு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஓர் ஆளாக்கிய தங்களது முதல் குரு லக்ஷ்மண் ராவ் மாதவ் ராவ் இனாம்தார் அவர்கள் செய்த புண்ணியம்.


ஒரு சமயத்தில் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சிப் பூசல் காரணமாக தங்களை குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி இருக்க வேண்டுமென்ற கட்டளைக்கு ஆட்பட்டு டில்லியில் தங்கி வாழ வேண்டியிருந்த நேரத்தில் தங்களுக்கு  உண்ண உணவும், உறங்க உறைவிடமுமளித்து தாய்க்கு தாயாகக் காத்து குருவுக்கு குருவாக இருந்து அரசியல் அறிவூட்டி தங்களை தன் பிரதான சிஷ்யனாக ஆளாக்கி ஆதரித்து யாரும் எதிர்பாராத வகையில் கட்சி மரபுகளையும் மற்றும் விதிகளையும் மீறி அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய  அமைப்புப் பொதுச் செயலாளராக இருந்த தங்களை குஜராத் மாநிலத்தில் முதல்வராக்கி அழகு பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் பிதாமகன் லால் கிருஷ்ண அத்வானி செய்த புண்ணியம்.


கால நேரம் கனிந்து ஆர்எஸ்எஸ் பாஜக  பேராதரவால் 2014 ஆம் ஆண்டில்  தாங்கள் முதன் முறையாக பிரதமரானது பாரதிய ஜனதா கட்சியினர் செய்த புண்ணியம். 

மீண்டும் இரண்டாவது முறை பிரதமரானது இந்திய மக்கள் செய்த புண்ணியம்.‌ 

தற்போது இறைவன் அருளால் இந்தியத் திருநாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவி ஏற்பது யார் செய்த புண்ணியமோ?

நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கியவனுக்கு தண்ணீர் எப்படித் தப்பிக்க மூன்று வாய்ப்புகள் வழங்குமோ அது போல இறைவன் தங்களுக்கு மூன்றாவது வாய்ப்பை அளித்துள்ளார் என்பதை நினைவிலேந்தி ஏழைத்தாயின் மகனாக பிறந்த தாங்கள் இம்முறையாவது ஏழை எளிய வறிய நடுத்தர வர்க்க மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே பாரத மக்களின் மிகுந்த பேரவாவையும் பூர்த்தி செய்வார் என நம்பலாம்.ஜவகர்லால் நேருவுக்குப் பின் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்ற ஒருவர் நரேந்திரமோடி என்றே பல ஊடகங்கள் தகவல் தருகிறார்கள். 

இந்திராகாந்தி 1966, 1967, 1971 மற்றும் 1980 -ஆம் ஆண்டு என 4 முறை பிரதமராக இருந்தார்.

அடல் பிகாரி வாஜ்பேய் 1996, 1998, 1999 - என  மூன்றுமுறை பிரதமராக இருந்தார்.

ஜவகர்லால் நேருவைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியேற்கும் ஒரே மனிதர் என் நரேந்திர மோடியை மீடியாக்கள் சொல்கின்றன. அதற்கு காரணம் வரலாறு அறியாமல் வந்த செய்தி ஆசிரியர்களில் பலர் 

வழக்கம் போல நடிகர் ரஜினிகாந்த் இதைச் சொல்வது குறித்து சொல்லவேண்டுமானால் அவர் அடுத்தவர் எழுதிய வசனம் தான் இதுவரை பேசி நடித்தார் அதுவே இதிலும் நமக்கேதும் கருத்தில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்