தமிழ்நாடு பாஜக வில் 261 குற்றவாளிகள் இருப்பதாக கூறிய காங்கிரஸ் மாநிலத் தலைவருக்கு பாஜக மாநிலத் தலைவர் ஆதாரங்களுடன் பதிலடி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் பழிக்குப் பழியாக படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி,
துயரில் வாடும் அவரது மனைவி. பொற்கொடிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து
"கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.
இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இந்த நிலையில், .பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழிக்கு பழியாக படுகொலையான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், ஆரூத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளாதா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரிக்க வேண்டும் -என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறிய கருத்து
"தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் 261 குற்றவாளிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது 1977 வழக்குகள் உள்ளதாகவும்" நேற்றுத் தெரிவித்தார். இந்த நிலையில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாங்கள் யாரையும் குற்றவாளிகள் என்று தெரிவிக்கவில்லை. ஆருத்ராவுக்குத் தொடர்பிருப்பதாக மக்கள் மத்தியில் பேசி வருவதால், அது குறித்தும் விசாரிக்கக் கோரினோம். ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை என்று ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற முன்னாள் முதல்வர்களே புகழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கொண்டேயுள்ளார். குற்றப் பட்டியலிலுள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன.கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார். எழுத்தாளர்கள் உள்பட பல கொலைகள் நடந்தது குறித்து அடுத்ததாக கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவுள்ளேன். அண்ணாமலை எதற்காக திடீரென ராஜினாமாவைச் செய்தார் என்பதை ஆராய வேண்டும்.
அண்ணாமலையைத் தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். துக்க வீட்டில் போனால் என்ன பேசவேண்டும், திருமண வீட்டில் என்ன பேச வேண்டும் எனத் தெரியவில்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பற்றி பேசும் அண்ணாமலை, இந்திரா காந்தியை துர்கா தேவி என்று வாஜ்பாய் புகழ்ந்ததை ஏன் பேசவில்லை. மருத்துவத்துக்காக என்னை அமெரிக்கா அனுப்பியதற்கு ராஜிவ் காந்திக்கு, வாஜ்பாய் நன்றி தெரிவித்த வரலாற்றை ஏன் பேசவில்லை?
என்னை குற்றப் பின்னணி கொண்டவர் என்று பேசிய அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து மன்னிப்புக் கோர வேண்டும்.”
எனத் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/share/v/TsK3fgme7oMn5w8W/?mibextid=oFDknk நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து
தகவலாக:- "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி வழி வந்த திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி
2001 ஆம் ஆண்டு வழக்கு குற்ற எண்: 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988 ன் படி, பிரிவு 13(2) r/w 13(1) (e)
2003 ஆம் ஆண்டு வழக்கு குற்ற எண்: 136/2003 ன் கீழ் இபிகோ 307 – கொலைமுயற்சி ஆகிய பிரிவுகளிலும்
2003 ஆம் ஆண்டு வழக்கு குற்ற எண் 138/2003 –ன் படி தாக்குதல்
2003 ஆம் ஆண்டு வழக்கு குற்ற எண்: 277/03 – ன் படி கொலை மிரட்டல்
2003 ஆம் ஆண்டு வழக்கு குற்ற எண்: 451/2003 ன் படி இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. பிரிவுகளில்
இந்த வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில்டைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 ஆம் ஆண்டு வழக்கு குற்ற எண்: 1464/2003 ன் படி பிரிவுகள் இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்
கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள் தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.
குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் இலாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளிலிருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்குத் தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்
கருத்துகள்