முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் சண்டாளர் எனும் ஜாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாதென மாநில அரசுக்கு பட்டியலினத்தோர் மாநில ஆணையம் பரிந்துரை

தமிழ்நாட்டில் சண்டாளர் எனும் ஜாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாதென மாநில அரசுக்கு பட்டியலினத்தோர் மாநில ஆணையம் பரிந்துரை


செய்தது.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய நிலையில்  பல்வேறு எதிர்வினைகள் வந்ததால் தமிழ்நாடு அரசுக்கு  கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைமுறையில் பஞ்சமா பாதகம் செய்தவர்கள் பற்றி குறிப்பிடும் வார்த்தையாவே சன்டாளர் எனும் சொல் இருந்து வந்தது ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குறித்து திரிந்து சர்ச்சைக்குரிய ஒரு பாடலைப் பாடி நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் என்ற நபர் பிரச்சாரம் செய்த  பாடலில் இடம்பெற்ற சண்டாளன் எனும் வார்த்தை தீண்டத்தகாதவராக ஒரு காலத்தில் கருதப்பட்ட ஒரு ஜாதி மக்களை சுட்டிக் காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக சாட்டை துரைமுருகன் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,


சண்டாளன் என்ற வார்த்தை சினிமா பாடல்களில் உள்ளன. முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அதிகம் பயன்படுத்தியுள்ளார். அதிமுக பாடலை பாடிய சாட்டை துரைமுருகன் மீது கைது நடவடிக்கை எடுத்தவர்கள், அதிமுக மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சண்டாளன் என்ற ஒரு ஜாதி இருப்பது எனக்குத் தெரியாது.வழக்கு மொழியாகத் தான் பேசினேன். இந்த வார்த்தை கந்த சஷ்டி கவசத்திலிருப்பதால், அதை எழுதியவர் மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் வழக்கு போட முடியுமா? என வினா எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னர் சண்டாளர் எனும் ஜாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாதென தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மனிதர்கள் உயிர் வாழத் தேவையான அடிப்படைப் பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகத்தின் பயனுள்ள பணிகளைச் செய்யும் சமூக குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்கு பயன்படுத்துவது, கலை இலக்கியங்களிலும் திரைப்பட நகைச்சுவை காட்சிகளிலும், பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.

இது அப்பெயர்களில் உள்ள மக்களையும், அவர்களை போன்ற மக்களையும் புண்படுத்தும் செயல். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணம் பொதுச் சமூகத்தில் இல்லை. பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 ன் படி, பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்


. தமிழகத்தில் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் சண்டாளர் என்ற பெயரில் மக்கள் இருக்கின்றனர் தமிழ்நாடு பட்டியல் ஜாதியினர் அட்டவணையில் 48 ஆம் இடத்தில் உள்ளது. சமீப காலமாக இந்தப் பெயர் பிறரை இழிவுப்படுத்தும் நோக்கில் பொதுவெளியில் பேசப்படுவதைக் காண முடிகிறது. எனவே இனி சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாதென்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது.

மீறிப் பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் சங்க இலக்கியங்களில், மந்திரங்களில் சண்டாளர்கள் என்ற வார்த்தை இருக்கிறது. கந்த சஷ்டி கவசத்தில் சண்டாளர்கள் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது ஒரு சமூகம் இருப்பதே தெரியாதென்று சீமான் கூறியுள்ளார். தமிழில் மட்டும் தான் ஒரு அழகு என்றால் முருகு அதற்கு நம் பக்கத்தில் வசிக்கும் முருகன் மகிழ்ச்சி அடைகிறேன் என நினைப்பது எவ்வளவு தவறு அது போலவே வார்த்தைகள் பல அர்த்தம் தரும் அதை பயன்படுத்தும் வகையில் உபயோக இடத்தில் மாறுபடும், அதாவது நாகர்கோவில் பகுதியில் 'தட்டில் சாப்பிட்டு தட்டில் தூங்கினான்" என்றால் தட்டில் என்பது வீட்டில் மேல் தளமாகும். அதுபோலவே சரடு என்பது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சணல் என்பதைக் குறிப்பதாகும். இப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பேசி வரும் நடைமுறையில் உள்ள வார்த்தை தற்போது தவறானது தான் இங்கு வேடிக்கை..  இனி அதுவே வாடிக்கை. இனி எல்லா வார்த்தைகளும் தமிழ் இலக்கிய இலக்கண உரை தேடல் நடந்த பிறகு உயர்நீதிமன்றம் வழக்கில் விசாரணை நடத்தி முடிவு செய்யும் நிலை வரும் என்பதே இங்கு பொது நீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...