முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறால் பாதிப்பு பைலட் திறமையால் காப்பாற்றப்பட்ட 141 உயிர்கள். திருச்சி திகில்

விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறால் பாதிப்பு பைலட் திறமையால் காப்பாற்றப்பட்ட 141 உயிர்கள்.


திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் திடீரென குவிந்த ஆம்புலன்சுகள். தரையைத் தொட முடியாமல் ஆகாயத்திலேயே வட்டமடித்துச் சுற்றும் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம்.



தரையிறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நடுவானில் தவித்த விமானம் காரணமாக 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்க 

பதறிய பயணிகளை பெரும் பாடுபட்டு உயிரைப் பணயம் வைத்து பத்திரமாகக் காப்பாற்றிய பைலட். திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது விமானம். தரையிறங்க முடியாமல் தடுமாறிய விமானம் தரையிறங்கியது குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் 


141 பயணிகள் குறிப்பாக ஆறு குழந்தைகளோடு திருச்சிராப்பள்ளியிலிருந்து சார்ஜாவுக்குப் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் 2:30 மணி நேரமாக வானில் வட்டமடித்து பயணம் செய்த அனைவருடைய மனதிலும் பயத்தை ஏற்படுத்திய நிலையில், 

அந்த விமானம் பத்திரமாக தரை இறங்கியது காரணமாக பயணிகள் நிம்மதியடைந்தனர்.


விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் மட்டுமல்ல.

மொத்த மக்களின் இறை வேண்டுதலுக்கு ஏற்ப விமானம் பத்திரமாக தரையிறங்கி இருப்பது பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

விமானத்தை திறம்பட இயக்கிய விமானி டேனியல் பெலிசோவைத் தான் இந்தப் பாராட்டுக்கள் சேரும். 


திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக வானத்திலேயே சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடிக்க நேரிட்ட நெருக்கடியைக் கருதி, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றியது.




வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானம், பிறகு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாகத் தரையிறங்கியது.விமானத்திலிருந்த பயணிகளும், விமான நிலையத்தில் கூடியிருந்த அவர்களின் உறவினர்களும் நிம்மதியடைந்தனர். மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது.

விமானத்தில் 140-க்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகவும்.

விமானம் மேலே புறப்பட்ட பிறகு விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், பாதுகாப்புக் கருதி விமானத்தை மீண்டும் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து, திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படவே பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர்.





சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் உதவுவதற்கு வசதியாக மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.


அதேநேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக அதிலிருந்த எரிபொருளைக் குறைக்கும் பொருட்டு, வானத்திலேயே விமானம் வட்டமடிக்கத் தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக திருச்சிராப்பள்ளி விமான நிலையப் பகுதியில் அந்த விமானம் வானில் வட்டமடித்தது. 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அன்னவாசல், முக்கணமலைப்பட்டி, கீரனூர், அம்மாசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் விமானம் வானில் நீண்ட நேரம் வட்டமடித்ததை பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர்.   திருச்சிராப்பள்ளி விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது:- "திருச்சிராப்பள்ளியிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலேயே விமானத்தைத் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டதற்கு முன்னதாக, விமானத்திலுள்ள எரிபொருளைக் குறைக்க வானத்திலேயே விமானம் வட்டமடிக்கச் செய்யப்படுகிறது.



பெரிய அளவில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 20 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வண்டிகளும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. " என ஏ.என்ஐ. செய்தி முகமை தெரிவித்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானத்தை இரவு 8.15 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த திட்டத்தின் படியே, விமானம் சரியாக 8.10 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தை மீண்டும் நெருங்கியது. மெல்ல மெல்ல உயரத்தைக் குறைத்த அந்த விமானம் சரியாக 8.15 மணிக்கு திட்டமிட்டபடி ரன்வே ஏப்ரான் ஓடுபாதையைத் தொட்டது. அதன் சக்கரங்கள் ஓடுபாதையை உரசியபடி பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியது. இதனால், திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த பரபரப்பும் பதற்றமும் தணிந்த நிலையில். அதுகுறித்து சிவில் ஏவியேசன் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளதில், "திருச்சிராப்பள்ளியிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீண்டும் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலேயே பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானப் போக்குவரத்துத் துறை ஆணையம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விமானத்தின் லேன்டிங் கியர் வழக்கம் போல் சரியாக இயங்கியது. இதனால், விமானம் எந்தச் சிக்கலும் இல்லாமல் இயல்பான முறையில் தரையிறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக விமான நிலையம் முழுவதும் முழுமையான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது." என கூறப்பட்ட தகவல் ஏ.என்.ஐ. செய்தி முகமை மூலம் வந்தது. முன்னாள் விமானப்படை உயர் அலுவலர் ராம் தெரிவித்த தகங ‘‘விமானம் ‘டேக் ஆஃப்’ ஆக ஆரம்பித்ததும் முதலில் நடப்பது, அதன் சக்கரங்கள் உள்ளே செல்வது தான். வெறும் நுாறடியில் பறக்கும் போதே சக்கரங்கள் உள்ளே போவதற்கான தொழில்நுட்பச் செயல்பாடுகளைத் துவக்கி விடுவோம். இது சில நிமிடங்களில் நடந்து விடும். அதற்கு மேலும் சக்கரங்கள் உள்ளே செல்லாத பட்சத்தில் விமானத்தை இயக்காமல் கீழே மீண்டும் இறக்கி விட வேண்டும். ஆனால் விமானத்தை ‘டேக் ஆஃப்’ செய்யும் போது இருக்கும் விமான எடையுடன் கீழே இறக்க முடியாது. அதனால் எரிபொருள் எடையைக் குறைக்க வேண்டும். ஒரு சில பெரிய ரக விமானங்களில் எரிபொருளை வெளியில் விட்டு, காற்றில் ஆவியாக்குவதற்கான சிறப்புத் தொழில் நுட்பம் இருக்கும். ஆனால் இந்த விமானத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமலிருக்கலாம். அதனால் விமானத்தைத் தொடர்ந்து இயக்கி, எரிபொருளைக் குறைக்கும் முயற்சி நடக்கிறது. ஷார்ஜாவுக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து 1500 ‘நாட்டிக்கல் மைல்’ (2800 கி.மீ.,) இருக்கும் என்பதால், முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். அதனால் பெருமளவில் எரிபொருளைத் தீர்த்த பின்பே, விமானத்தை இறக்குவதற்கு முயற்சி செய்வார்கள். இதில் விமானத்தை கீழே இறக்கும் போது, அந்தச் சக்கரங்கள் மீண்டும் உள்ளே போய் விடக் கூடாது. அதற்கு Down & Lock என்று பச்சை சிக்னல் வரும். அந்த சிக்னல் வந்து விட்டால் எந்தப் பிரச்னையுமில்லை. ஷார்ஜாவுக்கு நான்கு மணி நேரம் விமானம் செல்லும். ஆனால் அவ்வளவு நேரம் பறக்கவோ, எரிபொருளைக் குறைக்கவோ தேவையில்லை. கொஞ்சம் எரிபொருளைக் குறைத்து விட்டாலும் போதுமானது.’’ விமானம் வானில் பறக்கையில் அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாவிட்டால் விமானம் சீராக பறப்பதில் சிக்கல் ஏற்படும். காற்றின் எதிர்ப்பு சக்தி காரணமாக, விமானம் இழுக்கப்படுவதால் விமானம் தொடர்ந்து பறக்கம் அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால், விமானம் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னதாகவே எரிபொருள் தீரும் நிலை நேரிடும். இந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டியே, அதீத முன்னெச்ரிக்கை நடவடிக்கையாக விமானம் புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்படும். இதுவே, சென்னை - மதுரை, சென்னை - கோயம்புத்தூர் போன்ற குறுகிய தூர விமானம் என்றால் பெரியளவில் பிரச்னையின்றி விமானத்தை சேருமிடம் நோக்கி இயக்கிவிடலாம். ஆனால், திருச்சிராப்பள்ளி - ஷார்ஜா போன்ற தொலைதூர விமானங்களில் அது சாத்தியமில்லை என்பதால் ஆபத்தைத் தவிர்க்க வேண்டிய இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன " என்றார்.  ஆக ஆபத்தில் இருந்து விமான பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...