அசல் பதிவு நில ஆவணங்களை வழங்குவதற்காக ரூபாய்.35,000 லஞ்சம் வாங்கியதாக சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளரை ஊழல் தடுப்பு இயக்குநரக ( டிவிஏசி ) அலுவலர்கள் புதன்கிழமை மாலை கைது செய்தனர்.
புலன் விசாரணை செய்து, புகார்தாரரிடம் லஞ்சத் தொகையை வசூலிக்குமாறு இளநிலை உதவியாளர் பூபதிராஜாவிடம் சார் பதிவாளர் அறிவுறுத்த அதன் படி .வாங்கிய இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையுடன் கைது செய்தனர்.
விசாரணையில், நான்சி நித்யா கரோலின் கூறியதன் பேரில் தான் லஞ்சம் வாங்கியதை அவர் ஒப்புக் கொண்டார். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் பயன்படுத்திய அவரது காரிலிருந்த கணக்கில் வராத லஞ்சப் பணம் 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. புகார்தாரர்
கருப்புசாமி புதன்கிழமை காலை DVAC அலுவலர்களை அணுகினார், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பூபதிராஜா கொண்டு வந்த பணத்தை பெற்றுக் கொண்டு அரசு தரப்பில் சாட்சிகள் முன்னிலையில் பினாப்தலின் இரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்தனர். அவர் அதை "லஞ்சம் வாங்கிய பூபதிராஜாவிடம் கொடுத்த போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து, பின்னர் விசாரணை முடிவில் நான்சியும் கைது செய்யப்பட்டார். மேலும், நான்சியின் காரில் வைத்திருந்த ரூபாய்.13 லட்சத்தை பறிமுதல் செய்த நிலையில் அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை, என அலுவலர் ஒருவர் தெரிவித்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருவரும் சிறைக்காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கருத்துகள்