தமிழ்நாடு வி சி க கட்சியினர் மத்தியில் பலமாகப் பேசப்படும் ஆதவ் அர்ஜூனா. கட்சியின் அடுத்த தலைவரா? யார் இந்த ஆதவ் அர்ஜுனா. தீடீரென ஏன் இந்த அரசியல் பிரவேசம்
இவர் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் என்ற கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்.
ஆதவ் அர்ஜுன் என்ற தெலுங்கு பூர்வீக கொண்ட ரெட்டியாரின் மாமனார் உறவினர் ஒரு காலத்தில் "லாட்டரி" சீட்டு மொத்த விற்பனை செய்யும் போது பல கோடிகள் சுருட்டி பல அடித்தளத்தில் வாழும் மக்களை லாட்டரி அடிக்க விட்டவர் மார்ட்டின். குடியை விட லாட்டரி தான் மிகவும் மோசமாகி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் கருவி, காலஞ்சென்ற திமுக தலைவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியியுடன் வர்த்தக உறவிலிருந்தவர் லாட்டரி மார்ட்டின்.
மேலும் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனத்தில் "இளைஞன்" எனும் திரைப்படத்தைத் தயாரித்தவர் லாட்டரி சீட்டு மார்ட்டின் ஆவார்.
மார்ட்டின் மனைவி "லீமா ரோஸ்" என்பவர் பச்சை முத்து உடையார் எனும் பாரி வேந்தர் என்பவர் நடத்தும் IJK என்ற கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளர்
லாட்டரி மார்ட்டின் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்.
மற்றொரு மகன் டைசன் மார்ட்டின். மே 17 என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர்.
லாட்டரி சூதாட்டம் மூலம் தனவந்தர்கள் ஆகி அரசியல் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் பாரதிய ஜனதா கட்சி ஒரு பக்கம் திமுகவைத் தோற்கடிக்க இரண்டு விதமான சூத்திரங்களை அதிமுகவிற்கு கொடுத்துள்ளது. அதில் சூத்திரம் 1.அதிமுக தனித்து பாஜகவை விட்டு தனியாக நின்று திமுக கூட்டணிக் கட்சிகளை உடைப்பது. சூத்திரம் 2. அதிமுக + பாஜக+ பாமக+ தேமுதிக கூட்டணி இதனால் அதிமுக சார்பாக உள்ள தவறுகள் செய்தவர்கள் மேல் எந்த விதமான வழக்கும் போடாத நிலையை இப்போது காணலாம், பாஜக சொல்லும் சூத்திரம் 1 ஐ ஆதவ்அர்ஜுனா மூலம் பாஜக நிறைவேற்றுகிறது. என்று அறிவார்ந்தவர்கள் மத்தியில் எழும் குற்றச்சாட்டில் ஆதாரங்கள் உண்டா ? என்பது தெரியாது. நான் கணக்குப் போட்டேனா..? தேர்தலை வைத்து இந்த மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தையே திசை திருப்பி விட்டார்கள். வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் ஆவேசமாகப் பேசும் திருமாவளவன். 26.01.2024 ஆம் தேதியில் தான் ஆதவ் அர்ஜூனை விசிக-வில் சேர்க்கிறார்.
15.02.2024 ஆம் தேதியில் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆகிறார்.
23.09.2024 ஆம் தேதியில் ? கருத்து திருமாவளவன் கூறியுள்ளார் ஆதவ் அர்ஜுன் பேசியது நான் சொல்ல வந்தது அல்ல என்கிறார் ஆனால் ஆதவ் அர்ஜூனா பேசுவதற்கு முன்பு லாட்டரி மார்ட்டினைச் சந்தித்து நீண்டநேரம் பேசியுள்ளார் திருமாவளவன் அதற்குப் பிறகு தான் ஆதவ் அர்ஜூனா பேசினார். ஆதவ் அர்ஜூனா பேசிய தவறான கூட்டணி விரோத வார்த்தைகள் பற்றி எந்த விளக்கமும் ஆதவிடமிருந்து இதுவரை வரவே இல்லை. மௌனம் சம்மதம்!திருமாவளவன் அனுமதி இல்லாமலா முன்னாள் வைஸ்ராய் ராஜகோபாலாச்சாரியார் மற்றும் மஹாத்மா காந்தியடிகள் உள்ளிட்ட இந்த கட்அவுட்டை ஆதவ் அர்ஜூன் வத்திருப்பார் ? என்பது கட்சி நபர்கள் பேசும் வார்த்தைகள் தான் . அதற்கு முன்னர் ஒரு முன் கதை உண்டு அது லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து கடந்த காலத்தில் இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை முன்பே சோதனை நடத்தியுள்ளது. மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அலுவலர்கள் அமலாக்கத்துறை உயர் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். மார்ட்டினின் ரூபாய்.457 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது அதில் துவங்கியது அரசியல் ஆட்டம், குற்றச்சாட்டுக்களில் இருந்து தற்போது தப்பிக்க வழி தேடியவர்களின் கடைசி புகலிடமாக உள்ளது யார்? யாரோ? அவர்கள் காய் நகர்த்தி இப்போது இவர் இலக்கு விசிக கட்சி அது பலமாக அல்லது பலவீனமாக இவர் காரணமாக இருப்பாரோ! என்ற பயம் அக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் உள்ளது.
ஆனால் இந்த நிலையில் ஆதவ் அர்ஜுன் பெயரை சொன்னவுடன் விசிக வின் ஒட்டுமொத்த மது ஒழிப்பு மாநாட்டில் அரங்கமும் அதிர்கிறது இது அவரது பலம். அந்த மாநாட்டில் 2.பாஜக கூட்டணி கட்சி ஆளும் பீகார் மாநிலத்தில் மது தடை செய்யப்பட்டதை தமிழ் நாட்டுடன் ஒப்பிட்டு ஒரு தரமான சம்பவத்தை நடத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த கால பாமக மது ஒழிப்பு மாநாட்டை நினைவூட்டிய போதும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி இதுவரை சேரிப் புயலாக வந்த விசிக கட்சி மற்ற குடியானவர் வாழும் தெருவில் இதுவரை தடம் பதிக்க வில்லை அல்லது பதிக்க விடவில்லை என்ற நிலையில் பாமக இரண்டு ஆதிதிராவிடர்ளை ஏற்கனவே மத்திய அமைச்சர் பதவி கொடுத்து அதன் பின்னர் இதே திருமாவளவன் குடி தாங்கி என்ற பட்டம் மருத்துவர் இராமதாசுக்கு வழங்கியதை பிற தலைவர்கள் இன்னும் மறக்க வில்லை
மேலும் கட்சியின் வாக்கு வங்கி தனியே போட்டி இடும் போது தான் உண்மையான வாக்கு வங்கி நிலை தெரியும். வன்னியர் சங்கம் +108 ஜாதிகள் இணைந்து கட்சி அமைத்த பாமக வரலாறை எட்டிப் பிடிக்க திருமாவளவன் பல ஜாதிகள் இணைந்த இயக்கமாக விசிக மாற வேண்டும் அதற்கு இன்னும் காலம் கனியவில்லை அப்போது தான் அவர் மீதான ஜாதிக் கட்சி என்ற முத்திரை விலகும். மேலும் மது ஆலைகளை நடத்தும் கட்சியின் பிரதிநிதிகளை அழைத்து மாநாடு நடத்தும் விசிக, மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் எதிராகக் கடந்த 40 ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வரும் மருத்துவர் ச.ராமதாசை அழைக்காதது பற்றி கேள்வி எழுந்துள்ளது. உண்மையில் இது மது ஒழிப்பு மாநாடா? அல்லது கூட்டணிக் கட்சிகளின் கூட்டமா? என்று சமூக ஆர்வலர்களே கேட்கத் தொடங்கி உள்ளனர்.மது ஒழிப்பு என்பதை அரசியல் களத்திற்கு வந்த காலம் முதலே திருமாவளவன் பேசி வருகிறார். ஆனால், இப்போது அவரது மாநாடு தொடர்பான செயல்பாடு மீது லேசாக சந்தேகம் வரவழைத்திருக்கிறார்
திருமாவளவன். மது ஒழிப்புக்குச் ஜாதி, மதம் கிடையாது. எல்லா ஜாதிக்காரர்களும் குடிக்கிறார்கள். எல்லா மதத்தில் குடிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். இதில் விதிவிலக்கு கிடையாது.அப்படி என்றால் திருமாவளவன் என்ன செய்திருக்க வேண்டும்? ஜாதி,மதங்களைக் கடந்து எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். மேலும் அதிமுகவின் உதவி இல்லாமல் மதுவை ஒழித்துவிட முடியுமா?
ஒரு வருடத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துகொண்டுள்ளது. அப்படி என்றால் அரசுக்கு ஏற்படும் இந்த வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது? அதற்கு விளக்கம் வேண்டுமா? வேண்டாமா? தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில் மது ஒழிப்பு கொண்டுவர வேண்டும் என நினைத்தால், அதற்கு மத்திய அரசும் உதவ வேண்டுமா வேண்டாமா? அப்படி என்றால் மோடி பிரதமராக உள்ள கட்சியின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமா? வேண்டாமா? அதே போன்று காங்கிரஸ் கட்சியையும் அழைத்திருக்க வேண்டும்.
இந்த மது ஒழிப்பு விவகாரத்தில் திருமாவளவன் பல இடங்களில் சறுக்கிவிட்டார் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன். தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில் மது ஒழிப்பு கொண்டுவர வேண்டும் என நினைத்தால், அதற்கு மத்திய அரசும் உதவ வேண்டுமா வேண்டாமா? அப்படி என்றால் நரேந்திர மோடி பிரதமராக உள்ள கட்சியின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமா? வேண்டாமா? அதே போன்று காங்கிரஸ் கட்சியையும் அழைத்திருக்க வேண்டும்.
இந்த மது ஒழிப்பு என்பது சாத்தியமா என்று கேட்டால் முடியாது என்பதை முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டதால் தான், ஆண்டுக்கு 500 கடைகளை மூடுவேன் என்றார். அதன் படி அவர் ஆட்சிக்கு வந்ததும் 500 கடைகளை மூட உத்தரவும் போட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் அமைச்சர் செந்தில் பாலாஜி 500 கடைகளை மூடினார். அதை ஏன் தொடர்ந்து செய்யவில்லை?
விடியற்காலை 5.45 க்கு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதாக வீடியோவே வெளியானது. முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார். மற்ற வீடியோக்கள் வெளியானால் உடனே நடவடிக்கை எடுத்து எக்ஸ் தளத்தில் டேக் செய்து வெளியிடுகிறாரே? ஏன் இதை டேக் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை? " என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஒருவர். .
கருத்துகள்