இந்தியாவின் அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோஷலிச' என்ற வார்த்தைகளை நீக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் மனுவளித்திருந்தநிலையில் இது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது. 1976 ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசால் பாராளுமன்றத்தில் உரிய விவாதமே நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டது செல்லாது. அவ்வாறு செல்லுமென்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கேற்ப முகவுரையைத் தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. முகவுரையை எழுதிய போது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால், மக்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலேயே அதை பீமாராவ் அம்பேத்கர் மற்றும் உறுப்பினர்கள் அதைச் சேர்க்கவில்லை. எனவே 42 வது சட்டத் திருத்தம் செல்லாதென்று அறிவித்து, சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கி
1949 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முகவுரையைத் தொடர உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதன் பிறகு பேசிய நீதிபதிகள், உங்களுக்கு இந்தியா மதச்சார்பற்றிருப்பது பிடிக்கவில்லையா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை. அரசியலமைப்பு முகவுரையில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வார்த்தைகளும் மதச்சார்பின்மை என்பதையே குறிக்கின்றன.
எனவே அதை நீக்க உத்தரவிட விட முடியாது. அதே நேரம் மனுதாரர் சுட்டிக்காட்டியபடி முகவுரையை சட்டத் திருத்தம் வாயிலாக திருத்தம் செய்ய முடியுமா? என்பது குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்தனர். வழக்கு மறு தேதி விசாரணைக்கு வரும்.
இதற்கிடையே ஹிந்துத்துவா என்ற வார்த்தையை இந்திய அரசியலமைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்பதாக மாற்ற தாக்கல் செய்த மற்றொரு மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்