நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும்
நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் விசாரணை நடத்தப்பட்டது வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதம் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் 2022-ஆம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாகப் பதிவிட்டனர். இருவரும் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரினர். இந்த HMOP மனு முதன்மை குடும்ப நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்த போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை, வழக்கறிஞர்கள் மட்டுமே வாய்தா கேட்டதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் மாதம் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகர் தனுஷ் தரப்பில், வழக்கறிஞர் கெளதம் S ராமனும் ஐஸ்வர்யா தரப்பில் வழக்கறிஞர் இளம் பாரதியும் ஆஜராகினர்.
ஐஸ்வர்யாவை அவருடைய வழக்கறிஞர் இளம்பாரதி உள்ளே கூட்டிச் சென்ற நிலையில் தனுஷ் படப்பிடிப்பு முடித்து வந்துக் கொண்டிருப்பதாகவும் ஆஜராக கால அவகாசம் வேண்டுமென நடிகர் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதையடுத்து பகல் 12 மணிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டதையடுத்து தனுஷ் சென்னை குடும்ப நீதிமன்றத்திற்கு வந்தார் அவரை வழக்கறிஞர் கௌதம் எஸ். ராமன் உள்ளே கூட்டிச் சென்றார். இருவரும் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகம், சென்னை1-ல் அமைந்துள்ள குடும்ப நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, எஸ்.சுபாதேவி, முன்னிலையில்ஆஜரான நிலையில் அவர்கள் இருவரையும் தனியே பேச அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறினர். இதையடுத்து இருதரப்பிடமும் கையெழுத்து பெறப்பட்டு இந்த வழக்கில் வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து முதலில் தனுஷும் , பிறகு ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தனர்.
சேர்ந்து வாழ இருவரும் விரும்பாததால் நவம்பர் மாதம் 27ஆம் தேதி தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து தீர்ப்பு கிடைத்துவிடும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்