முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாளை உலகம் எதிர்நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்

உலகம் எதிர்நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.


கடைசி நேரத்துக் கருத்துக் கணிப்புகளில் டொனால்டு ட்ரம்ப்பை, கமலா ஹாரிஸ் முந்திய நிலையில்  நாளை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் இறுதி நேரப் பரபரப்பு முன்னிலை யார் .

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நான்காண்டுக்கு ஒருமுறை நடைபெறும். 2020-ஆம் ஆண்டு தேர்தலில், அப்போது அதிபரான குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபரானார். அவரது ஆட்சி காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

ஜோ பைடனின் உடல்நிலையால், அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே சலசலப்பு காரணமாக, போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகினார். அதையடுத்து, ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக கடந்த தலைமுறை இந்திய வம்சாவழியைச் சார்ந்தவரும், தற்போது துணை அதிபருமான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதற்கு முன்பு வரை போட்டியில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில், கமலா ஹாரீஸின் வருகையால் நிலைமை தலைகீழானது. இவர்களுக்கிடையேயான விவாதத்தில் கமலா ஹாரிஸ், இயல்பாக, வேகமாகக் கூறிய பதில்கள் பலரையும் கவர்ந்தன. அமெரிக்காவின் பல்வேறு பிரபலங்களும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளிட்ட பல  தொழிலதிபர்களும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளித்தனர்.

இந்நிலையில், உலகப் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து அவரது கை ஓங்கியது.  பரப்புரையில் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பைச் சுட்டுக் கொல்ல முயற்சி  பரபரப்பை ஏற்படுத்தியது. பரப்புரையில் தீவிரம் கட்டிய டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்ததுடன், இனவாதத்தையும் கையிலெடுத்தார்.

பணவீக்கத்தை விட எல்லைப் பாதுகாப்பே முக்கியமானது என முழங்கிய டொனால்ட் ட்ரம்ப், முதியோருக்கு வரிச்சலுகை வழங்கப்படுமென வாக்குறுதி அளித்தார். டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சுக்கு தனது பரப்புரையில் பதிலடியாக கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சர்வாதிகாரி என்றும், மனித உரிமைகளையும், பெண் உரிமைகளையும் மதிக்காதவர் எனச் சாடினார். மேலும், நடுத்தர மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் விலைவாசிகளைக் குறைப்பேன், வரி சீர்திருத்தத்தைச் செய்வேன் எனவும் கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளித்தார்.

நாளை செவ்வாய்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க 18 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தகுதியானவர்கள். தேர்தல் நாளன்று பணி நிமித்தமாகவும், வேறு காரணங்களுக்காகவும் வாக்களிக்க முடியாதவர்களுக்காக, முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி இருப்பதால், அதைப் பயன்படுத்தி 4 கோடியே 70 லட்சம் பேர் ஏற்கனவே வாக்களித்து விட்டனர்.


வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கிய நிலையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், கடும் போட்டி இருந்தாலும், டொனால்ட் ட்ரம்ப்பை விட கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், 290 ஆண்டு கால, அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாகும். அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் நுழையும் முதல் பெண் என்ற பெருமையையும், அதிபராகும் முதல் இந்திய வம்சாவழி குடியேற்ற நபர் என்ற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெறுவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...