முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி


பெற்று புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.


மற்ற நாடுகளின் பொதுத் தேர்தலைப் போலல்லாமல், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் தேர்தல், உலக அரங்கின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் பெற்றது.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப்,  மீண்டும் களமிறங்கி வெற்றியை தன்வசமாக்கினார்.


அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஸ்தாபகத் தந்தைகள் அமெரிக்காவின் அரசியலமைப்பை எழுதியபோது, நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுக்க எலெக்டோரல் காலேஜ் அமைப்பை உருவாக்கினர். அதிபர் தேர்த்லில் வெற்றி பெற  538 எலெக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270 வாக்குகளைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையிலுள்ள பிரதிநிதித்துவத்திற்கு சமமான பல வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு 7 ஸ்விங் மாகாணங்கள் உள்ளன. தெற்கிலும் மையப் பகுதியிலும் (டெக்சாஸ், அலபாமா, ஆர்கன்சாஸ்) குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகும் மற்றும் கடற்கரைகள் கொண்ட நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக உள்ள ஏழு மாகாணங்கள் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கின்றன.               மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 பிரதிரிகளைத் தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற 270 பிரதிநிதிகள் தேவை. காலை 8.30 நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சியின் 188 வேட்பாளர்களும், ஜனநாயகக் கட்சியின் 99 வேட்பாளர்களும் முன்னிலையில் இருந்தனர்.




இதுவரை வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதில், இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, ஓக்லஹோமா, மிஸௌரி, டென்னிஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், தெற்கு டகோடா, வடக்கு டகோடா உள்ளிட்ட 17 மாகாணங்களை டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.

வெர்மோன்ட், மேரிலாண்ட், மசாசுசெட்ஸ், கொலம்பியா, இல்லினொய்ஸ், நியூ ஜெர்ஸி, நியூ யார்க் உள்ளிட்ட 9 மாகாணங்களில் கமலா ஹரீஷ் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 52.4 சதவிகிதமும், கமலா ஹாரிஸ் 46.4 சதவிகிதமும் பெற்றுள்ளனர்.



கலிஃபோர்னியா, வாஷிங்டன், அரிசோனா, ஓரிகான் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில்வாக்கு எண்ணிக்கை முடியவடையும் முன்.53.9 சதவீதம் வாக்குகளை பெற்றதால் டெக்சாசின் 40 எலக்டோரல் வாக்குகளையும் டிரம்ப் கைப்பற்றினார் அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு முற்போக்காளர்கள் வசிக்கும் பகுதியாகிறது. ஆனால், எலான் மஸ்க் உள்ளிட்ட பலர் சமீப காலமாக பழமைவாதியான டிரம்பை ஆதரிக்கிறார்கள்.தொழிலதிபர்களுக்கு டிரம்ப் அள்ளித் தரும் வரி விலக்குகளும்  காரணமாகும். அமெரிக்காவின் பிரபல டெக் தொழிலதிபர் மார்க் கியூபன் வெளிப்படையாகவே கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார்.  2015 ஆம் ஆண்டு இவர் டிரம்பை ஆதரித்திருந்தார். ஆனால், இந்த முறை டிரம்பிற்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார். டிரம்ப் மீண்டும் அதிபரானால் சிறு குறு தொழில்களுக்கு நல்லதல்ல என்பது கியூபன் கருத்தாகிறது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்யும் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவர் வினோத் கோஸ்லா. அவரும் இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். அதேபோல மெட்டாவின் முன்னாள் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க்கும் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். ஜோ பைடன் அதிபர் ரேஸில் இருந்த வரை ஷெரில் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேநேரம் பைடன் விலகி கமலா ஹாரிஸ் உள்ளே வந்த உடனேயே அவரை ஆதரிப்பதாக ஷெரில் அறிவித்தார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு சுமார் 50 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 420 கோடி ரூபாய் நன்கொடை அளித்து, அவரை ஆதரித்துள்ளார். அதேபோல பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டாவும் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். தற்போதைய சூழலில் கமலா ஹாரிஸே சரியான வேட்பாளர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அவர்கள் தவிர நெட்பிளிக்ஸ் நிர்வாகத் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ், லிங்க்ட் இன் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளனர். சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற போதிலும் அவர் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு நன்கொடை கொடுத்துள்ளார்.


மறுபுறம் டிரம்பை பொறுத்தவரை எலான் மஸ்க் வெளிப்படையாக அவரை ஆதரிக்கிறார். ட்விட்டர் எக்ஸ் தளத்திலும் கூட எலான் மஸ்க் பிரச்சாரம் செய்கிறார். டிரம்ப் ஆட்சியைப் பிடித்தால் அமைச்சர் பதவி ஏற்கக் கூடத் தயாராக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு முழு வீச்சில் இறங்கி டிரம்பிற்காக எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வருகிறார்.


அதேபோல பேபால் இணை நிறுவனர் பீட்டர் தியேல், டெக் முதலீட்டாளர்கள் மார்க் ஆண்ட்ரீசன் மற்றும் பென் ஹோரோவிட்ஸ், செக்வோயா கேபிடல் என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் டக்ளஸ் லியோன் ஆகியோர் வெளிப்படையாகவே டிரம்பை ஆதரித்துள்ளனர். பைடன் ஆட்சியை விமர்சிக்கும் இவர்கள், அதிபராக டிரம்ப் சரியான ஆள் என்று குறிப்பிட்டுள்ளனர்.  பார்ச்சூன் 500 நிறுவனங்களில் எலான் மஸ்க் தவிர வேறு எந்த நிறுவனத்தின் CEO வும் வெளிப்படையாக தங்கள் முடிவை எடுக்கவில்லை. இருப்பினும், கூகுள் CEO சுந்தர் பிச்சை, ஆப்பிள் தலைவர் டிம் குக், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் தன்னை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசியதாக டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனாலும், இதை யாரும் உறுதி செய்யவில்லை. ஆக மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை, டிம் குக், ஆண்டி ஜாஸ்ஸி, ஜெஃப் பெசோஸ், சத்யா நாதெல்லா ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...