நாட்டின் 5வது சிறந்த காவல் நிலையமாக கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள, ஆலத்தூர் காவல் நிலையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்தது. கேரளா மாநிலம், பாலக்காடு, ஆலத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் தகவல்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மதிப்பாய்வு இறுதிக் கட்டத்தில், 76 காவல் நிலையங்களிலிருந்து ஆலத்தூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு தரப்பிலுள்ள குற்ற விசாரணை, சட்ட அமலாக்கம், மற்றும் அடிப்படை வசதிகள், அணுகுமுறை, லாக்கப் மற்றும் பதிவு அறை உள்ளிட்ட வசதிகள் மற்றும் லஞ்சம் பெறாத பணியாளர்கள் என, நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் சிறந்த காவல் நிலையங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மீது எடுத்த நடவடிக்கை, வழக்கு விசாரணையின் வளர்ச்சி, புகார் தீர்வு, புகார்தாரர்களிடம் உள்ள அணுகுமுறை, குற்றச் செயல்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவையிலுள்ள சிறப்பு மற்றும் பிற பொது நலச் செயல்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டுகளில், மலப்புரம் மாவட்டத்திலுள்ள குற்றிப்புரம், கண்ணூர் நகரில் உள்ள வளப்பட்டிணம் ஆகிய காவல் நிலையங்கள், நாட்டின் சிறந்த 10 சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்திருந்தது. இந்தப் பட்டியலில், நடப்பாண்டு ஆலத்துார் காவல் நிலையம் இடம் பிடித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்