முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுக்கடுக்காகப் பொய் வழக்கு உலகம் முழுவதும் தெரியவைத்த பின் பெங்களூருவில் உயிர்துறந்தார் ஐடி ஊழியர் மக்கள் கொதிப்பு

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தின் மேலாளர் குடும்ப விவகாரத்தில் தற்கொலை,


24 பக்க இறுதி வாக்குமூலம் சட்டம் ஆண்களை வஞ்சிப்பதாகக் கருத்து உத்திரப் பிரதேச மாநிலத்தின் அதுல் சுபாஷ் (வயது 34) பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியாற்றினார்.  திங்கள்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

அதற்கு முன்னதாக, அவர் 24 பக்கத்தில் கடிதம் எழுதியதுடன் 90 நிமிடங்கள் பேசி வீடியோவையும் வெளியிட்டார். தனது மரண வாக்குமூலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உள்ளிட்டோரை X தளத்தில் டேக் செய்து,

சர்வதேச அளவில் விவாதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார். எழுதிய கடிதத்தில், ‘‘எனக்கும் என் மனைவி நிகிதா சிங்காரியாவுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அடுத்த சில தினங்களில் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில் என் மாமனார் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆனால் நான் வரதட்சணை கேட்டதால் தான் அவர் மாரடைப்பால் இறந்தார் என மனைவியின் வீட்டார் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்தனர்.

என் மனைவி தனியார் நிறுவனத்தில் மாதம் ரூபாய்.1 லட்சம் சம்பாதித்த போதும் என்னிடம் ஜீவனாம்சமாக ரூபாய்.3.3 கோடி கேட்டார். எனது 3 வயது மகனைப் பராமரிக்க மாதம் ரூபாய்.4 லட்சம் கேட்டார். ஆனால் என் மகனைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்து வழக்கு உத்திரப் பிரதேசத்தின் ஜான்பூர் நீதிமன்றத்தில் நடந்த போது அதனை விசாரித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், பராமரிப்புத் தொகையைகா குறைப்பதற்கு ரூபாய்.5 லட்சம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டார். நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆண்களை வஞ்சிப்பதாக உள்ளன. என் வழக்கில் எனக்கு நீதி கிடைத்தால் மட்டுமே என்னுடைய அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும். இல்லாவிடில் நீதிமன்ற வாசலில் ஓடும் சாக்கடையிலேயே கொட்டி விடுங்கள். என் மனைவியின் துன்புறுத்தலால் என் வயதான பெற்றோர் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கருணைக் கொலை செய்யக் கோரினால், அதை அனுமதிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்


சுபாஷின் இந்தக் கடிதமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது,. அவரது மனைவி நிகிதாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என ஏராளமானோர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.இது குறித்து அவரது சகோதரர் பிகாஸ் குமார் கூறுகையில், தங்கள் குடும்பத்தினர் மீது அதுல் சுபாஷின் மனைவி பல்வேறு பொய் வழக்குகளை தாக்கல் செய்ததாகவும், அதனால் அதுல் சுபாஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் எனத் தெரிவித்துள்ளார். அதுல் சுபாஷின் அறையில் பெங்களூருவில் காவல்துறை சோதனை செய்த போது, "நீதி கிடைக்க வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அவர் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வகையில் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அதில் நாட்டில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் பொய் வழக்குகள் குறித்து அதுல் சுபாஷ் விமர்சித்துள்ளார். தன் மீது தனது மனைவி சுமத்திய வரதட்சனைக் கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை என்றும், தனது பெற்றோரை தயவு செய்து துன்புறுத்த வேண்டாம் என்றும் அந்தக் கடிதத்தில் அதுல் சுபாஷ் எழுதியுள்ளார். அதுல் சுபாஷ் 2019-ஆம் ஆண்டு திருமண வரன் தேடும் இணையதளம் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்துள்ளார். அடுத்த ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன் பிறகு அதுல் சுபாஷிடம் அவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும்,



அவர் பணம் கொடுக்க மறுப்புத் தெரிவித்ததால் 2021-ஆம் ஆண்டு அவரது மகனை அழைத்துக் கொண்டு அதுல் சுபாஷின் மனைவி பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தனது மகனைச் சந்திக்கவும் மனைவியின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிடுள்ள அதுல் சுபாஷ், "நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், என்னிடம் உள்ள பணத்தைப் பிடுங்கப் போகிறார்கள். அதற்கு நீதித்துறை அமைப்பும் துணையாக இருக்கிறது. நான் சென்ற பிறகு, பணமும் இருக்காது, என் பெற்றோரை துன்புறுத்துவதற்கான காரணமும் இருக்காது. எனது உடலை அழித்து அனைத்தையும் நான் காப்பாற்றுகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்"என் சாவுக்குப் பிறகும் எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து அதன் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்" 


அதுல் சுபாஷின் இறுதி வரிகள், கோடிக்கணக்கான மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.

இவர் சாவுக்கு காரணமாக ஐந்து பேர்களைக் குறிப்பிட்டுள்ளார் 

ஒரு பெண்  நீதிபதி, அவரது மனைவி, அவரது மைத்துனர்,  மாமியார், அவர் மனைவியின் மாமன், 

லட்சகணக்கில் மனைவிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அவர் உதவியுள்ளார், எந்தளவுக்கு என்றால் மனையின் தாய் தந்தையர் சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்கு, 

ஒரு கட்டத்திற்கு மேல் அவர் அதை அவர் நிறுத்தி விடுகிறார்.

அதன் பிறகு தான் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுப்படுகிறார்.

அவர் மீது மிக மோசமான எட்டு பொய் வழக்குகள் பதியப்படுகிறது, 

கணவர் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார், வரதட்சணைக் கொடுமை செய்துள்ளார், மாமனாரை கொலை செய்தார், இயற்கைக்கு மாற்றமான முறையில் நடந்து கொள்கிறார், என ஏகப்பட்ட மனச்சாட்சி இல்லாத பொய் வழக்குகள் பதியப்படுகிறது.

ஒவ்வொரு வழக்கிற்கும் பல மாதங்கள் பெங்களூருக்கும் உத்திரபிரதேசத்திற்கும் அலைகிறார்,

ஒவ்வொன்றையும் பொய் என நிரூபிக்கிறார், ஆனால் இவர்கள் வழக்குப் போடுவதை மட்டும் நிறுத்தவில்லை, 


நாற்பதுக்கும் அதிகமான முறை ஜான்பூர்  நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்   நீதிபதியிடம் வாதாடுகிறார், மாமனார் உடல்நிலை மோசமாக இருந்தால் தான் திருமணமே விரைவாக நடத்தினார்கள், அவர் இயற்கையாக மரணித்ததை பொய்யாகக் குழப்பி கொலை குற்றம் சாட்டினார்கள், 

இயற்கைக்கு மாறாக எந்த செயலும் செய்யவில்லை, அதற்கான எந்த மருத்துவ ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை, 

மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக எந்தக் காயமும் ஆதாரமாக இல்லை, 




வரதட்சணைக் கொடுமை செய்தேன்  என்கிறார்கள், அது உண்மையில்லை, லட்சக்கணக்கில் அவர்களுக்கு நான் உதவியுள்ள ஆதாரம் தன்னிடம் உள்ளது,

என் ஒரே பிள்ளையை என் கண்ணில் காட்டாமல் நீதிமன்றத்திற்குக் கூட அழைத்து வராமல் வைத்துக்கொண்டு விரட்டுகிறார்கள்,

என் மீதுள்ள எல்லா வழக்குகளும் நீதி பரிபாலன முறையில் விசாரித்தால் பொய் எனத் தெரியும், 



தயவு செய்து வழக்குகளைத் தள்ளுப்படி செய்யுங்கள், இப்படி மன ரீதியாக அழுத்தம் கொடுப்பதால் தான் பலர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என கடிதம் மூலம் கண்ணீர் வடிக்கிறார் சுபாஷ்,

அதற்கு நீதிமன்றத்திலே அவரின் மனைவி அப்போ ஏன் உயிர் வாழ்கிறாய் செத்து தொலைய வேண்டியது தானே எனச் சொல்கிறார், அதற்கு அந்த பெண் நீதிபதியும் ஆமோதிப்பது போல் சத்தமாக சிரிக்கிறார்.


பின்பு நீதிபதி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு இந்த வழக்கை எல்லாம் முடிப்பதாக பேரம் பேசுகிறார், இல்லை எனில் வழக்கிற்காக அலைய வேண்டியது தான் என மிரட்டுகிறார்.

தான் எந்தத் தவறும் செய்யாமல், இந்த மோசமான பெண்ணைத் திருமணம் செய்தது ஒன்று மட்டுமே தவறு, நேர்மையாக வரி கட்டி உழைத்துச் சேர்த்த பணத்தை நீதிபதியும் மனைவியும் அவரின் குடும்பத்தார்களும் இப்படி பேய்களாக தன்னை சூழ்ந்து பணத்திற்காக எவ்வளவு மன உளைச்சலை தருகிறார்களே என கவலைக்கொள்கிறார்.





மேற்கூறிய விஷயங்களை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வீடியோ காட்சிகள் மற்றும் நாற்பது பக்கங்களுக்கு கடிதத்தை எழுதி வைத்து சுபாஷ் தற்கொலை செய்துக்கொள்கிறார், 

நீதிமன்றம் இந்திய சட்டப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றும், பெண்களுக்கு வழங்கப்பட்ட பிரதேயக சட்டங்கள் தவறாக வழி நடத்தப்படுகிறது என்றும், அப்பாவி ஆண்களுக்கு இந்தச் சட்டம் நீதியைப் பெற்றுத் தரவில்லை என்றும், இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றும் கூறி அவர் உயிரை விட்டுள்ளார்.





இந்தியா எங்கும் இதை குறித்த விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளது.

குடும்ப வன்முறைச் சட்டமும் பாலியல் வன்புணர்வும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சில இடங்களில் நடக்கிறது என்பது அதுல் சுபாஷ் விஷயம் நிதர்சனமான உண்மை இவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடக்கிறது என்பது பெங்களூரில் கண்ட உண்மை..இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு காவல் துறையினர் விசாரணை நடத்துகின்ற நிலையில் 


இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ள நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகிய மூவரும் கைது.  மேலும் ஒரு குற்றவாளியான சுஷில் சிங்கானியா கைது செய்யப்படவில்லை.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களை, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...