நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க கனிம வளத் துறையின் உதவி இயக்குநர் வள்ளல் (வயது 54), மணல், கல் குவாரி உரிமையாளர்
களிடமிருந்து இலஞ்சம் வாங்கிய பணத்தை காரில் கொண்டு செல்வதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று முன்தினம் இரவு நல்லிபாளையம் சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில். நாமக்கல்லில்லிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற புவியியல் சுரங்கம் மற்றும் கனிம வளத் துறையின் உதவி இயக்குநர் வள்ளலின் காரை நிறுத்தி சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி ரூபாய்.12.50 லட்சமிருந்தது தெரியவந்ததையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்