தற்காலிகமாக பணியமர்த்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகமாக பணியமர்த்திய பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யும் படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தற்காலிகப் பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் பரிந்துரை செய்து உத்தரவிட்டனர்.
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் 1997 ஆம் ஆண்டு கணிப்பொறி உதவியாளராக தினக் கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர் சத்யா தனக்கு பணி வரன் முறை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த WA 251/2025 தமிழ்நாடு மற்றும் 2 மாநிலங்கள். /எதிர்/ எஸ்.சத்தியா மற்றும் ஒருவருக்கு எதிராக. மனுதாரர் சார்பில் M/S M.ALAGU GOUTHAM R2 க்கு M/S K.ARUMUGAM R1 க்கு வழக்கறிஞர் ஆஜரான நிலையில் மேலும் சி.எம்.பி 1819/2025 வழக்கும் இணைந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையைபா பரிசீலித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாதென தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வாரா ? எனக் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில், தற்காலிகப் பணி நியமனங்களைக் கைவிடுவதென 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிகமான ஊழியர்களையும் பணியிலிருந்து உடன் விடுவிக்கும் படி உத்தரவிட்டனர். மேலும், தற்காலிகப் பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்காலிகப் பணியாளர்களை நீக்கம் செய்தது மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் மாதம் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் மாதம் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கருத்துகள்