பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா டில்லி பாஜகவின் முதல்வராவாரா ? சரியான எதிரிகள் இல்லாத களம் ஈரோடு திமுக வெற்றி
பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா (வயது 47) பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்த ஒரு முக்கிய அரசியல் தலைவரான.
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் சாஹிப் சிங் வர்மா மகனாவார் மேற்கு டெல்லி தொகுதியிலிருந்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். அவர் நவம்பர் 7, 1977 ஆம் ஆண்டு அன்று டெல்லியில் பிறந்தார், டெல்லியில் கல்வி பயின்றார், வணிக நிர்வாகத்தில் (MBA) முதுகலைப் பட்டம் பெற்றவர்.
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவியது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என இன்று பிற்பகலில் தெரிந்துவிடும் என்ற நிலை இல்லை. பாஜகவினர் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது புதுடெல்லி
தொகுதியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் களம் கண்டார். இத்தொகுதியில் பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீக்ஷித் போட்டியிட்டனர். கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷிக்கு எதிராக அல்காலம்பா (காங்கிரஸ்), ரமேஷ் பிதுரி (பாஜக) போட்டியிட்டார். ஜாங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஷகுர் பஸ்தி தொகுதியில் சத்யேந்தர் ஜெயின் போட்டியிட்டார்.காங்கிரஸ் பத்து சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி தோல்விக்கு இதுதான் காரணம்..
கோவா, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் காங்கிரசை ஆம் ஆத்மி கட்சி குளோஸ் செய்தது இப்போது அதற்கு பதிலாக டெல்லியில் ஆம் ஆத்மி காங்கிரஸை க்ளோஸ் செய்து விட்டது. டில்லி சாந்தினி சௌக் தொகுதியில் பிரவீன் கண்டேல்வால் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் எதிர்தரப்பில் ஜெய் பிரகாஷ் அகர்வால் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வி 89325 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது
கிழக்கு டெல்லி ஹர்ஷ் மல்ஹோத்ரா பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் குல்தீப் குமார் (மோனு) ஆம் ஆத்மி கட்சி தோல்வி 93666 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது
புது டில்லி பன்சூரி ஸ்வராஜ் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் சோம்நாத் பாரதி ஆம் ஆத்மி கட்சி தோல்வி 78370 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது
வடகிழக்கு டெல்லி மனோஜ் திவாரி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார்
கன்ஹையா குமார் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வி 138778 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது
வடமேற்கு டெல்லி யோஜெண்டர் சந்தோலியா பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார். உதித் ராஜ் இந்திய தேசிய காங்கிரஸ் தோல்வி அடைந்தார் 290849 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது
தெற்கு டெல்லி ராம்வீர் சிங் பிதுரி பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார்
சாஹி ராம் ஆம் ஆத்மி கட்சி தோல்வி 124333 வாக்குகள் முடிவு அறிவிக்கப்பட்டது
மேற்கு டெல்லி கமல்ஜீத் செஹ்ராவத் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றார் மஹாபல் மிஸ்ரா ஆம் ஆத்மி கட்சி தோல்வி 199013 வாக்குகள் .
இந்த நிலையில் டில்லி பொது நிர்வாகத் துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்..
ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்த பின் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அதாவது அவசர அறிக்கை..
டெல்லி மாநில தலைமைச் செயலகத்திலிருந்து எந்த ஒரு கோப்பும் மற்றும் கம்ப்யூட்டர் பாகங்கள் - ஹார்ட் டிஸ்க் பென்டிரைவ் போன்றவற்றை எவரும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை..
காரணம் தோல்வி அடைந்த பிறகு திருட வாய்ப்பு உள்ளதால் அரசாங்கத்தின் கோப்புகளை அழிக்கக் கூடும் என்பதற்காக முதன்முறையாக இந்திய அரசியலில் 10 ஆண்டுகள் கொள்ளையடித்து சிறை சென்றவர் குவித்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை மறைப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுக்க நடந்த சிறப்பான நிகழ்வு. ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி பயில்வானுக்கும் பாஜகவின் அசைன்மென்ட் மூலம் பரிட்சை எழுதிய சப்பாணி நாம் தமிழர் கட்சிக்கும் நடந்தது
பலப்பரீட்சை அல்ல அது ஈ.வே.ராமசாமி என்ற பெரியார் வாக்கு வங்கி காரணமாக மற்ற கட்சிகள் போட்டியில்லாமல் செய்து சீமான் மட்டுமே போட்டியிட வைத்து பரிசோதனை பாஜகவால் நடத்தப்பட்டது. அதில் சீமான் தோல்வி அடைந்தார் இனி பாஜகவின் அரசியல் களம் துரிதமாக மாற்றம் அடையும் எல்லாம் ஜெ.ஜெயலலிதா விட்ட இடத்தில் பாஜக காலூன்ற நடத்தும் முயற்சி பாகம் 5 இது
ஈரோட்டில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கிறார் சீமான்.இருபது பவுன்சர்களுடன் தான் வெளியே வருகிறார். பெரியார் திராவிடர் கழகம் கொளத்தூர் மணி ஈரோட்டுக்கு வந்த போது பவுன்சர்கள் எண்ணிக்கை அதிகமானதாம்! அவ்வளவு பயம்!பெரியார் 96 வயது வரை கடுமையான எதிர்ப்பலைக்கு நடுவே பவுன்சர்களுடன். சுற்றவில்லை! ஈவெராவை தொட்டால் உதை என்று திராவிடர் அமைப்பு செயல்பட்ட தே அதற்கு காரணம். 1 பவுன்சருக்கு தினமும் சம்பளம் சாப்பாடு 3000 ரூபாய் 20 x 3000 = 60,000 எனில் 1 மாதத்திற்கு 18,00,000
18 லட்சம் செலவு செய்யும் அளவிற்கு சீமானுக்கு பணம் எங்கிருந்து வந்தது பொன்னமராவதி உள்ளிட்ட பல ஊர்களில் புதிய சொத்துக்கள் குவிப்பு
தேர்தல் ஆணையம் இதை செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளுமா தெரியவில்லை. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும்,
உள்ளூர் காவல் துறையினரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டு திமுக வேட்பாளர் சந்திரகுமார் 115709 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 24151 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியதுடன் ஜாமீன் தொகை இழந்தார். இந்தத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்ளில் திமுக, நாதக தவிர மற்றவர்கள் சுயேச்சைகள், சிறிய கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும் நோட்டா 6,109 வாக்குகளைப் பெற்று நோட்டா மூன்றாமிடத்தை பிடித்தது.ஈரோடு தேர்தலில் போட்டியிட்ட தோழர் தமிழா தமிழா பாண்டியன் 150 ஓட்டுகள் மட்டுமே வாங்கியுள்ளார். ஆயிரகணக்கான ஓட்டுகள் சீமானுக்கு போவதையும் தடுத்துள்ளார். அவரது x ray பார்வையில் பாஜகவின் 12ஆயிரம் ஓட்டுகளை சீமான் வாங்கியுள்ளார்.அதில் எட்டாயிரம் வாக்குகள் பெரியாரை வெறுக்கும் ஈரோட்டின் பிராமணர்கள் ஓட்டு"
கருத்துகள்