முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்சநீதிமன்றத்தில் சீமான் வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் நிர்னிமேஷ் துபே'.ஆஜராகி இடைக்காலத் தடை பெற்றார்.

விஜயலட்சுமி சீமான் மீது தொடுத்த பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!


நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான நடிகர் சீமானுக்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றி விட்டதாக, 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி, பிப்ரவரி மாதம்.17-ஆம் தேதி சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என அவரது மனு தள்ளுபடி ஆனது 

மேலும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால், சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென வளசரவாக்கம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்தார்.



இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “மனுதாரரான சீமானுக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த பாலியல் புகார் அரசியல் காரணங்களுக்காக மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளது. சீமானுக்கு எதிராக புகார் அளித்த அந்த நடிகையே மூன்று முறை வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்.


விஜயலட்சுமியுடன் பழக்கமிருந்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவரே கடிதமும் கொடுத்துள்ளார். தற்போது சீமானை துன்புறுத்தும் நோக்கில் பழைய புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சீமானின் அரசியல் பொதுவாழ்வுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்றார்.



குறுக்கிட்ட நீதிபதிகள், “புகார் அளித்த அந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார் தானே? அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்பட்டுள்ளதா?” என்றனர். அதற்கு சீமான் தரப்பில், “விஜயலட்சுமியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்,” என தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதிகள், சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கும் தடை விதித்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை மே மாதத்துக்கு தள்ளி வைத்தார். மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக இருதரப்பிலும் சமரசமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கில் மூத்த வழக்கறிஞர்  நிர்னிமேஷ் துபே'.. இவர் RSS பின்புலம் கொண்ட வழக்கறிஞர் இவர் ஆஜரான ஆன வழக்குகள் அர்னாப் கோஸ்வாமி வழக்கு, ஒரு கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் வழக்கு, இன்னும் சில பாஜகவினர் தொடர்புடைய வழக்குகளாகும். அர்னாப் கோஸ்வாமிக்கு அவசரமாக ஜாமீன் வாங்கியது இந்த வழக்கறிஞர் தான். அதிக வழக்கு சம்பளம் வாங்கக் கூடிய பிரீமியர் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் வேடிக்கை விஜயலட்சுமியை  தூண்டி விடுவதும் சீமானை காப்பாற்றுவதும் ஒரே அமைப்பு தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.நடிகர் சீமான் - நடிகை விஜயலஷ்மி வழக்கில் ஏற்கனவே சீமானை விசாரித்துவிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை இல்லாமல் விட்டது அரசு தரப்பில் நடந்த நிலையில்!

நடிகை விஜயலஷ்மியும் நடிகர் சீமானின் அரசியல் செல்வாக்கின் முன்பு ஒன்றும் எடுபடவில்லை…என்று அழுதவாறு சொல்லிவிட்டு பெங்களுர் சென்றார்.

தற்போது உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை  உள்வாங்கி, இந்த வழக்கை 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை கொடுங்கள். விரைந்து முடிவுக்கு கொண்டு வரலாம் என்று சொன்னதால் தான் காவல்துறை சீமானை விசாரிக்கத் துணிந்தது!

ஆனால், சீமான், ’திமுக அரசு தன்னைப் பழி வாங்குவதாக’ பிரச்சாரம் செய்தார் 

உச்ச நீதிமன்றத்தில் சீமான் தன்னை விசாரிக்கத் தடை கோரிய வழக்கில் இன்று அரசு தரப்பில் முன் கூட்டியே கேவியட் மனு போட்டு, இந்த வழக்கின் தன்மையைக் கூறி, ''உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூறியதால் தான் நாங்கள் விசாரிக்கிறோம். இந்த வழக்கை நியாயப்படி விசாரித்து, சட்டப்படி தான் செயல்படுவோம். இதில் அரசியல் பழி வாங்கல் எதுவும் இல்லை'' எனச் சொல்லி இருக்க வேண்டும்.

மேலும், ''சீமான் தரப்பில் சமரசம் மேற்கொள்ளப்படுகிறது என்று சொல்வது அப்பட்டமான பொய்யா உண்மையா. தெரியவில்லை நேற்று கூட இவர் சம்பந்தப்பட்ட பெண்ணை பாலியல் குற்றவாளி என்று பேசினார்'' என்பதை விளக்கி இருந்தால்,  தற்போது சீமானுக்கு தடை கிடைத்திருக்காது.

சீமானைப் பற்றி பொதுவெளியில்  சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிடுவதே போதுமானது.  பாதிக்கப்பட்ட  பெண்ணுக்கு நியாயம் செய்வது என்பது முக்கியமே இல்லை. அதில் நமக்கு லாபமில்லை என்று பார்ப்பது அரசியல் கணக்கு 


இதை இன்னும் எத்தனை நாளுக்கு தான் பேசு பொருளாகவே வைத்து மக்களை திசை திருப்பும் அரசியல் நடக்கும் விடை தெரியவில்லை. உச்சநீதிமன்றம்

சீமான் தரப்பு வாதத்தை வைத்து இடைக்காலத் தடை விதித்தது 

தமிழ் நாடு காவல் துறை மற்றும் எதிர் தரப்புக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் நாடு அரசும் மற்றும் நடிகை விஜயலட்சுமியின் தரப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்.

பின்னர் விரிவான விசாரணை நடக்கும். இதுவே உண்மை நிலை உயர் நீதிமன்றம் 12 வாரங்கள் விசாரணை அவகாசம் வழங்கியது அதை. உச்சநீதிமன்றம் 8 வாரங்களில் பேசி முடிவு செய்யக் கூறியுள்ள நிலையில் இதில் நிச்சயமாக 12 வாரத்தில் முடிவு எட்டப்படும்.இதில் பொது நீதி யாதெனில்:- "வெடி வெடித்து கொண்டாடும் நாம் தமிழர் கட்சியினர் அடுத்த தலைவரை திட்டுவதற்கோ நாங்கள் தான் ஜெயிச்சுட்டோம்னு இதில் மார்தட்டுவதற்கோ இதில் ஒன்றும் நடக்கவில்லை. புகார்தாரர் விஜயலெக்ஷ்மி விடம் இன்னமும் சமாதானமும்  ஏற்படவில்லை மாறாக என்னை மிரட்டுகிறார்கள் என்று கூறி விஜயலெக்ஷ்மி ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து.

தமிழ்நாடு அரசு தரப்பில் வொகேட் ஸ்டே மனுவை தாக்கல் செய்து.

உச்சநீதிமன்றம் அதை அனுமதித்தால். மீண்டும் வழக்கு விசாரணைக்கு உடனேவந்துவிடும்.

குட்டி குலைத்து தாய் தலையில் வைத்த கதையாக நாம் தமிழர் தம்பிகள் மிதமிஞ்சி ஆட்டமாடி அவர்கள் அண்ணனை உள்ளே அனுப்பி விடுவார்களோ என்ற நிலையை அவர்கள் உணரவில்லை"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...