முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவசாய நகைக் கடன் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை குறித்து நிதியமைச்சர் கருத்து

இந்தியாவிலுள்ள கிராமப்புற வங்கிகளில் விவசாயிகள் அடமானம் வைத்துப் பெறும் ALJ தங்க நகைக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் சம்பந்தப்பட்ட பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) தங்களது கடன் கொள்கையின் ஒரு பகுதியாக தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களைப் பிணையாக வைத்து பல்வேறு


நோக்கங்களுக்காகக் கடன்களை வழங்குகின்றன. தற்போதுள்ள RBI சுற்றறிக்கை அறிவுறுத்தல்களின் படி (மே மாதம் 27 ஆம் தேதி, 2002 ஆம் ஆண்டு தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை:- RPCD.RRB.BC.96/03.05.34/2001-02 ), ன் படி விவசாய முன்பணங்களைத் தவிர, கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கு வங்கிகள் மாதாந்திர வட்டியை வசூலிக்கின்றன.                                      2. மறுஆய்வின் போது, ​​கூடுதல் விருப்பமாக ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தங்கக் கடன்களை புல்லட் எனும் திட்டமாக அறிவித்தது ஒரு வருடம் வரை திருப்பிச் செலுத்தும் காலம் வரை வரையறை என அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பின்வரும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, புல்லட் திருப்பிச் செலுத்தும் விருப்பத்துடன் தங்க நகைக் கடனை அனுமதிப்பதற்கான கொள்கைகளை RRBகள் தங்கள் வாரியத்தின் ஒப்புதலுடன் வகுக்க அனுமதிக்கப்படுகின்றன: 
(புல்லட்:- தங்க நகைக்கடன் என்பது, தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குபவர், கடன் காலத்தின் முடிவில் மொத்தத் தொகையை ஒரே தவணையில் செலுத்துவதாகும். 
வட்டி:
புல்லட் தங்க நகைக்கடனில், வட்டித் தொகை மாதந்தோறும் செலுத்தப்படலாம் அல்லது கடன் காலத்தின் முடிவில் மொத்தமாக செலுத்தப்படலாம்)விவசாயப் பெருங்குடி மக்களை புயலை விட மோசமாக பாதிக்கும் தற்போது இந்த புல்லட் கடன் திட்டம்

(i) எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட தங்கக் கடனின் தொகை ரூபாய். 1.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(ii) கடன் காலம் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(iii) மாதாந்திர ஓய்வு நேரத்தில் கணக்கில் வட்டி வசூலிக்கப்படும், ஆனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களின் இறுதியில் மட்டுமே அசல் தொகையுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.




(iv) அத்தகைய கடன்களின் போது பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச லாப வரம்பை வங்கி நிர்ணயிக்க வேண்டும், அதன்படி, பாதுகாப்பின் சந்தை மதிப்பு (தங்கம் மற்றும் தங்க ஆபரணம்), எதிர்பார்க்கப்படும் விலை ஏற்ற இறக்கங்கள், கடனின் காலத்தில் சேரும் வட்டி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கடன் வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.

(v) அத்தகைய கடன்கள், அசல் மற்றும் வட்டி செலுத்த வேண்டிய காலம் கடந்தவுடன் பொருந்தக்கூடிய, தற்போதுள்ள வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு மற்றும் வழங்கல் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும்.                                                                  -விளம்பரம்-

                           -விளம்பரம்-

(vi) நிர்ணயிக்கப்பட்ட வரம்பு பராமரிக்கப்படாவிட்டால், திருப்பிச் செலுத்தும் தேதிக்கு முன்பே கணக்கு NPA (துணை தரநிலை வகை) ஆகவும் வகைப்படுத்தப்படும். 3. தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் பிணையப் பிணையத்தின் மீது அனுமதிக்கப்பட்ட பயிர்க் கடன்கள், அத்தகைய கடன்களுக்கான தற்போதைய வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு மற்றும் வழங்கல் விதிமுறைகளால் தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.' என்பது தான் அந்த சுற்றறிக்கை கூறுவதாகும். இந்த நிலையில் இந்த சுற்றறிக்கை சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்ட நடவடிக்கை என குரல்கள் வந்த நிலையில் தான் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசியுள்ளார்.  "நகைக்கடன் என்ற பெயரில், குறிப்பிட்ட நபர்களிடம் பணம் முடங்குவதை தவிர்க்க, நகைக்கடன் வாங்கியவர்கள், அதற்குரிய தொகையை முழுமையாக கட்டிய பின்தான், புதிதாக நகையை அடகு வைக்க முடியும்,'' எனத் தெரிவித்தார்.


தற்போது கூட்டுறவு வங்கி உட்பட அனைத்து வங்கிகளிலும், நகைகளை அடமானம் வைப்போர், அதை ஓராண்டுக்குள் முழுத்தொகை செலுத்தி திருப்ப முடியாவிட்டால், வங்கியில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், சில நிமிடங்களில், அந்த நகையை மீண்டும் அடமானம் வைத்தது போல காண்பித்து விடுவர்.


இனிமேல் அவ்வாறு செய்ய முடியாது. நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தி, அந்த நகையை மீட்டு, மறுநாள் தான் நகையை மீண்டும் அடகு வைக்க வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் அறிவுரை வழங்கியது.

அதனால், நகையை அடமானம் வைத்த ஏழை மக்கள், மற்றும் அடகுக் கடை நடத்தி வரும் மேல் அடமானம் வைத்து பணம் பெறும் வட்டிக்கடைக்காரர்கள் முழு தொகையை கடன் பெற்றுத்தான் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.




இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: விவசாயத்திற்காக AJL நகைக்கடன் வைத்திருப்போர் தவிர்த்து, பெரும்பாலானோர் கட்டிடம் கட்டுவது உட்பட பல்வேறு காரணங்களுக்காக, நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர். குறிப்பிட்ட நபர்களிடம் தொடர்ந்து பணம் தேங்குவது, வங்கியின் செயல்பாடுகளை பாதிக்கிறது.

நகைக்கடன் என்ற பெயரில் பணம் முடங்குகிறது. புதிய நபர்களுக்கு வேறு தேவைகளுக்கு, கடன் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. நகைக்கடன் என குறிப்பிட்ட நபரிடம் மட்டும் பணம் முடங்கக் கூடாது.

எனவே, பணத்தை திரும்ப செலுத்த கால நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது. வங்கிப்பணி நடந்து கொண்டே இருக்க வேண்டும். பணி நின்று விட்டால், அனைவரும் பாதிக்கப்படுவர். பணம் முடங்குவதை தவிர்க்கவே, ரிசர்வ் வங்கி இந்த அறிவுரையை வழங்கி உள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி KYC விதிமுறைகளை மீறியதாகக் கூறி பல கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் மீதும் மத்திய வங்கி பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு மட்டுமின்றி, பல வங்கிகளுக்கு ரூபாய்.50,000 வரை அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக பல வங்கிகள் கடன் தொடர்பான விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய் விசாரணையின்போது விதிமீறல்களை கண்டறிந்த வங்கிகளுக்கு அபராததும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வங்கிளும் அடங்கும.  அதில் காரைக்குடி நகரில் உள்ள கூட்டுறவு வங்கியும் அடங்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் 9 ஆம் தேதின்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விதிமுறைகளைப் பின்பற்றாத வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.                                               -விளம்பரம்-

                         -விளம்பரம்
அதில் நான்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஒரு NBFC மீது பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேற்கு வங்காளத்தின் 10 நிறுவனங்களின் உரிமம் (CoR) ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதில் பொது நீதி யாதெனில்:- 
இதனால் தனியார் நகை அடமானக் கடை நடத்தி லாபமீட்டும் முத்தூட், கொசமட்டம்,மனப்புரம், கௌதம் சந்த், பாபு லால் சேட் போன்ற நிறுவனங்கள் வளம் கொழிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் விளையாத சாவி அறுக்கும் நிலை வந்து படுகின்ற துன்பம்!குறித்த பாடலிது

    “ஆசன மழை பொழிய இல்லம் விழ

         அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ

    மாசரம் போகுதென்று விதை கொண்டோட

         வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்

    கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

         குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்

    பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க

         விவசாயப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!

    மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்

        காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி

    கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்

        ஆப்பிலா சகடு போல அழியும் என்று உரைக்கலாமே!"

        -    - விவேக சிந்தாமணி கூறும் நயமிது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...