இந்தியாவிலுள்ள கிராமப்புற வங்கிகளில் விவசாயிகள் அடமானம் வைத்துப் பெறும் ALJ தங்க நகைக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் சம்பந்தப்பட்ட பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) தங்களது கடன் கொள்கையின் ஒரு பகுதியாக தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களைப் பிணையாக வைத்து பல்வேறு
நோக்கங்களுக்காகக் கடன்களை வழங்குகின்றன. தற்போதுள்ள RBI சுற்றறிக்கை அறிவுறுத்தல்களின் படி (மே மாதம் 27 ஆம் தேதி, 2002 ஆம் ஆண்டு தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை:- RPCD.RRB.BC.96/03.05.34/2001-02 ), ன் படி விவசாய முன்பணங்களைத் தவிர, கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கு வங்கிகள் மாதாந்திர வட்டியை வசூலிக்கின்றன. 2. மறுஆய்வின் போது, கூடுதல் விருப்பமாக ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தங்கக் கடன்களை புல்லட் எனும் திட்டமாக அறிவித்தது ஒரு வருடம் வரை திருப்பிச் செலுத்தும் காலம் வரை வரையறை என அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பின்வரும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, புல்லட் திருப்பிச் செலுத்தும் விருப்பத்துடன் தங்க நகைக் கடனை அனுமதிப்பதற்கான கொள்கைகளை RRBகள் தங்கள் வாரியத்தின் ஒப்புதலுடன் வகுக்க அனுமதிக்கப்படுகின்றன: (புல்லட்:- தங்க நகைக்கடன் என்பது, தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குபவர், கடன் காலத்தின் முடிவில் மொத்தத் தொகையை ஒரே தவணையில் செலுத்துவதாகும்.
(i) எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட தங்கக் கடனின் தொகை ரூபாய். 1.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
(ii) கடன் காலம் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
(iii) மாதாந்திர ஓய்வு நேரத்தில் கணக்கில் வட்டி வசூலிக்கப்படும், ஆனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களின் இறுதியில் மட்டுமே அசல் தொகையுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
(iv) அத்தகைய கடன்களின் போது பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச லாப வரம்பை வங்கி நிர்ணயிக்க வேண்டும், அதன்படி, பாதுகாப்பின் சந்தை மதிப்பு (தங்கம் மற்றும் தங்க ஆபரணம்), எதிர்பார்க்கப்படும் விலை ஏற்ற இறக்கங்கள், கடனின் காலத்தில் சேரும் வட்டி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கடன் வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.
(v) அத்தகைய கடன்கள், அசல் மற்றும் வட்டி செலுத்த வேண்டிய காலம் கடந்தவுடன் பொருந்தக்கூடிய, தற்போதுள்ள வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு மற்றும் வழங்கல் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும். -விளம்பரம்-
-விளம்பரம்-(vi) நிர்ணயிக்கப்பட்ட வரம்பு பராமரிக்கப்படாவிட்டால், திருப்பிச் செலுத்தும் தேதிக்கு முன்பே கணக்கு NPA (துணை தரநிலை வகை) ஆகவும் வகைப்படுத்தப்படும். 3. தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் பிணையப் பிணையத்தின் மீது அனுமதிக்கப்பட்ட பயிர்க் கடன்கள், அத்தகைய கடன்களுக்கான தற்போதைய வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு மற்றும் வழங்கல் விதிமுறைகளால் தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.' என்பது தான் அந்த சுற்றறிக்கை கூறுவதாகும். இந்த நிலையில் இந்த சுற்றறிக்கை சாமானிய மக்கள் மீது திணிக்கப்பட்ட நடவடிக்கை என குரல்கள் வந்த நிலையில் தான் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசியுள்ளார். "நகைக்கடன் என்ற பெயரில், குறிப்பிட்ட நபர்களிடம் பணம் முடங்குவதை தவிர்க்க, நகைக்கடன் வாங்கியவர்கள், அதற்குரிய தொகையை முழுமையாக கட்டிய பின்தான், புதிதாக நகையை அடகு வைக்க முடியும்,'' எனத் தெரிவித்தார்.
தற்போது கூட்டுறவு வங்கி உட்பட அனைத்து வங்கிகளிலும், நகைகளை அடமானம் வைப்போர், அதை ஓராண்டுக்குள் முழுத்தொகை செலுத்தி திருப்ப முடியாவிட்டால், வங்கியில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், சில நிமிடங்களில், அந்த நகையை மீண்டும் அடமானம் வைத்தது போல காண்பித்து விடுவர்.
இனிமேல் அவ்வாறு செய்ய முடியாது. நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தி, அந்த நகையை மீட்டு, மறுநாள் தான் நகையை மீண்டும் அடகு வைக்க வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் அறிவுரை வழங்கியது.
அதனால், நகையை அடமானம் வைத்த ஏழை மக்கள், மற்றும் அடகுக் கடை நடத்தி வரும் மேல் அடமானம் வைத்து பணம் பெறும் வட்டிக்கடைக்காரர்கள் முழு தொகையை கடன் பெற்றுத்தான் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: விவசாயத்திற்காக AJL நகைக்கடன் வைத்திருப்போர் தவிர்த்து, பெரும்பாலானோர் கட்டிடம் கட்டுவது உட்பட பல்வேறு காரணங்களுக்காக, நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர். குறிப்பிட்ட நபர்களிடம் தொடர்ந்து பணம் தேங்குவது, வங்கியின் செயல்பாடுகளை பாதிக்கிறது.
நகைக்கடன் என்ற பெயரில் பணம் முடங்குகிறது. புதிய நபர்களுக்கு வேறு தேவைகளுக்கு, கடன் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. நகைக்கடன் என குறிப்பிட்ட நபரிடம் மட்டும் பணம் முடங்கக் கூடாது.
எனவே, பணத்தை திரும்ப செலுத்த கால நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது. வங்கிப்பணி நடந்து கொண்டே இருக்க வேண்டும். பணி நின்று விட்டால், அனைவரும் பாதிக்கப்படுவர். பணம் முடங்குவதை தவிர்க்கவே, ரிசர்வ் வங்கி இந்த அறிவுரையை வழங்கி உள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி KYC விதிமுறைகளை மீறியதாகக் கூறி பல கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் மீதும் மத்திய வங்கி பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு மட்டுமின்றி, பல வங்கிகளுக்கு ரூபாய்.50,000 வரை அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக பல வங்கிகள் கடன் தொடர்பான விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய் விசாரணையின்போது விதிமீறல்களை கண்டறிந்த வங்கிகளுக்கு அபராததும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வங்கிளும் அடங்கும. அதில் காரைக்குடி நகரில் உள்ள கூட்டுறவு வங்கியும் அடங்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் 9 ஆம் தேதின்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விதிமுறைகளைப் பின்பற்றாத வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. -விளம்பரம்-
-விளம்பரம்-அதில் நான்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஒரு NBFC மீது பண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேற்கு வங்காளத்தின் 10 நிறுவனங்களின் உரிமம் (CoR) ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதில் பொது நீதி யாதெனில்:- இதனால் தனியார் நகை அடமானக் கடை நடத்தி லாபமீட்டும் முத்தூட், கொசமட்டம்,மனப்புரம், கௌதம் சந்த், பாபு லால் சேட் போன்ற நிறுவனங்கள் வளம் கொழிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் விளையாத சாவி அறுக்கும் நிலை வந்து படுகின்ற துன்பம்!குறித்த பாடலிது
“ஆசன மழை பொழிய இல்லம் விழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாசரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க
விவசாயப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!
மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
ஆப்பிலா சகடு போல அழியும் என்று உரைக்கலாமே!"
- - விவேக சிந்தாமணி கூறும் நயமிது
கருத்துகள்