பிள்ளையார்குளம் ஊராட்சிச் (உதவியாளர்) செயலா் தங்கப்பாண்டியன் ஊழல் சொத்துக்களை ஆய்வு செய்த அலுவலர்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பிள்ளையார்குளம் ஊராட்சி பணியிடை நீக்கம்
செய்யப்பட்ட ஊராட்சி செயலரின் (உதவியாளர்) சொத்துகளை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை, மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மதிப்பீடு செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையாா்குளம் ஊராட்சி மக்களிடமிருந்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினருக்கு வந்த புகாா்களின் படி ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற தங்கப்பாண்டியன், பிள்ளையாா் குளம் ஊராட்சியில் தொடா்ந்து பணிபுரிந்தாா். 2023-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில், அதுகுறித்து கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியன் எழுந்து தாக்கினாா். அது குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் ஊராட்சிச் செயலா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ததையடுத்து தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பசுவைத்தான்பட்டியிலுள்ள ஊராட்சிச் செயலா் தங்கபாண்டியனுக்கு சொந்தமான வீடுகள், கடைகள், திருமண மண்டபம், பண்ணை வீட்டுடன் கூடிய 2.5 ஏக்கா் தோட்டம், மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ் சாலையில் உள்ள வணிகக் கட்டடம் ஆகியவற்றை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையின் ஏ.டி.எஸ்.பி இராமச்சந்திரன் தலைமையில் மதுரை பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளா் செந்தூரான், வருவாய்த் துறை, மின்வாரியத்தை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டதற்கிடையே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிள்ளையாா்குளம் ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள் தகவல்கள் கேட்டதற்கு, ஊராட்சிச் செயலா் தங்கப்பாண்டியன் அதை எடுத்துச் சென்றுவிட்டதாக வட்டார வளா்ச்சி அலுவலா் மாநிலத் தகவல் ஆணையத்தில் தெரிவித்தாா். இதுகுறித்து தங்கபாண்டியன் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் விசாரணை நடைபெற்று வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்