முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிலுக்குச் சொந்தமில்லாத பொது இடத்தில் மதச் சடங்குகள் செய்து வரும் புரோகிதர்களைத் தடுக்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் மற்றும் அதிகாரத்தை கோவிலுக்கு உள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள் - உயர்நீதிமன்றம் கறார். 

கோவிலுக்குச் சொந்தமில்லாத பொது இடத்தில் மதச் சடங்குகள் செய்து வரும் புரோகிதர்களைத் தடுக்கக்கூடாது என உத்தரவு

ஹிந்துக்களில் புரோகிதர்கள்  சடங்குகள் மற்றும் பரிகாரம் கோவிலுக்கு அருகில் வெளியே பொது இடத்தில் செய்ய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமா ? 

கோவில் வளாகத்துக்கு வெளியே, சடங்குகள் மற்றும் மந்திரங்களை வேதங்கள் நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதைத் தடுக்கக்கூடாது' என, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த, புரோகிதர் பி.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில் 

பவானி கூடுதுறையிலுள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே, கிரிகை மற்றும் பூஜைகள் மற்றும் பரிகாரங்களை, கடந்த எட்டு ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். சடங்குகள் செய்வதற்குரிய தகுதியை கொண்டுள்ளேன்.


தென்னிந்தியாவின் திருவேணி சங்கமம் என நம்பப்படும் பவானி கூடுதுறை  ஹிந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலம், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில், பித்ரு பரிகாரம், கிரியை திதி தர்ப்பணம் மற்றும் நவக்கிரக தோஷம் செய்ய இந்த இடம் உகந்தது.

சங்கமேஸ்வரர் கோவிலுடன், எனக்கு எந்தவிதமான தொடர்புமில்லை. அவ்வாறு இருக்கும் போது, கோவிலின் நிர்வாக அலுவலர், என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு, பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் இங்கு செய்யக்கூடாது என்று தடுக்கிறார். இவ்வாறு தடுக்க, இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தில் எந்த விதிகளும் இல்லை.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்.மாதம் 24 ஆம் தேதி முதல், கோவில் நிர்வாக அலுவலர், புரோகிதம் செய்வதைத் தடுத்து வருகிறார். இது தொடர்பாக, 2024 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியில் அளித்த மனுவை பரிசீலிப்பதோடு, புரோகிதம் செய்வதை தடுக்க, கோவில் நிர்வாக அலுவலருக்குத் தடை விதிக்க வேண்டும். என  அந்த மனுவில் கூறப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் ஆஜராகி: கோவில் வளாகத்திற்குள் நடக்கும் பூஜைகளை ஒழுங்குப்படுத்துவது, கோவில் நிர்வாக அலுவலரின் கடமை. தகுதி பெறாத, அங்கீகரிக்கப்படாத நபர்கள், பக்தர்களை ஏமாற்ற அரசு  அனுமதிக்க முடியாது.

முறையான சடங்குகள் நடத்தப்படுவதையும், மந்திரங்கள் மற்றும் பிற சடங்குகள் குறித்து, போதுமான அறிவு பெற்றிருக்கின்றனரா என்பதை உறுதிசெய்த பிறகு தான், புரோகிதர்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன. அவர்களை சடங்குகள் செய்ய அனுமதிக்கிறோம். கோவில் வளாகத்துக்குள், கோவில் சார்ந்த நிலங்களில், அனுமதி பெற்றவர்கள் தவிர, வேறு எவரும் சடங்குகள் செய்ய அனுமதி கிடையாது. என  அவர் வாதாடினார்.


பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவிலில் வழிபாடு, சடங்கு செய்ய விரும்பும் பக்தர்களை, அங்கீகரிக்கப்படாத நபர்கள் ஏமாற்ற அனுமதிக்க முடியாது என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் நடக்கும் பூஜை, சடங்கை ஒழுங்குப்படுத்த கோவில் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

ஆனால், உரிய தகுதி பெற்றிருக்கும் புரோகிதர்களை வைத்து, பக்தர்கள், கோவில் வளாகத்திற்கு வெளியே, பூஜைகள் மற்றும் பரிகாரங்களைச் செய்யும் போது, அதில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தலையிடத் தேவையில்லை.

மனுதாரரைப் போன்ற புரோகிதம் செய்துவரும் நபர்கள், கோவிலின் ஒப்புதல் பெற்ற பின்னரே, பூஜைகள் மற்றும் பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கூறுவது, கோவில் நிர்வாக அலுவலர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

மனுதாரர் போன்றோர், கோவிலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறிக்கொள்ளாத வரை, கோவிலுக்குச் சொந்தமில்லாத, வேறு எந்த நிலத்திலும், தாங்களாகவே காரியங்களைச் செய்யும் போது, அதில் கோவில் அலுவலர்கள் தலையிடத் தேவையில்லை.

அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே, கோவிலுக்குள் பூஜை, சடங்குகளை நடத்துகின்றனர் என்ற அறிவிப்புப் பலகையை, அறநிலையத்துறை ஆலயத்தில் வைக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...