அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலை குண்டு வீசித் தகர்க்க பாக்கிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு சதி உ.பி ஆட்டோ ஓட்டுனர் கையெறி குண்டுகளுடன் கைது
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலை குண்டு வீசித் தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு சதி உ.பி ஆட்டோ ஓட்டுனர் கைது.
அவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் 500 ஆண்டுகள் கடந்து புணரமைப்பு செய்து புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முதல் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதுமிருந்து வந்து தரிசனம் செய்கின்றனர்.
இங்கு 1529-ஆம் ஆண்டு முகலாயர் ஆட்சியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சர்ச்சைகுறிய மசூதி 1992-ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் கரசேவகர்கள் மூலம் இடிக்கப்பட்ட வழக்கில் 2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கவும், அயோத்தியில் தானிப்பூர் என்ற இடத்தில் புதிய மசூதி கட்ட நிலம் ஒதுக்கும்படியும் உத்தரவிட்டதையடுத்து 2020-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால், இங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்ததாக தெரிகிறது.
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில், உத்தர பிரதேசத்திலுள்ள அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை உளவு பார்க்கும் பணி அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு தீவிரவாத அமைப்பின் நெட்வொர்க் ஒன்றின் மூலம் இரண்டு கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் வழங்கியுள்ளனர்.இறைச்சி கடை நடத்தி வந்தவரும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டியவருமான ரெஹ்மான், தனது அடையாள அட்டையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸால் அவர் தயார்படுத்தப்பட்டதாக காவல்துறை விசாரணை மூலம் தெரிகிறது.
இது குறித்த தகவல் குஜராத் மாநிலத்தில் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்தது. அவர்கள் ஹரியானா மாநிலத்தில் சிறப்பு படை காவல் துறையினருடன் இணைந்து அப்துல் ரகுமானை பரிதாபாத்தில் கைது செய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் ஒரு பென் டிரைவ் மீட்கப்பட்டதில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ள இடங்களின் வரைபடம், தாக்குதல் நடத்துபவர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆகியவை இருந்தன. அந்தத்தகவல்களை ஆராய்ந்த போது விரைவில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது. அங்கு இரண்டு கையெறி குண்டுகளும் மீட்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டதையடுத்து. இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன. ஃபரிதாபாத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள பாலி கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட வீட்டில் அப்துல் ரெஹ்மான் இவற்றை மறைத்து வைத்திருந்தார். அந்த இரண்டும் குண்டும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
இதன் பின்னர் ஏடிஎஸ் குழு அவரை குஜராத்துக்கு அழைத்துச் சென்றது, அங்கு அவர் விசாரிக்கப்படுவார். குஜராத்தின் உளவு அமைப்பு உளவுத் தீவிரவாதத் தடுப்பு பிரிவு அலுவலர்களை உடனே டெல்லி வரும்படி உத்தரவிடப்பட்டது. அவர்கள் உளவுத்துறை தீவிரவாதத்தடுப்புப் பிரிவு உயர் அலுவர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். தீவிரவாத சதியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என மத்திய உளவுத்துறை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. உள்ளூரில் அப்துல் ரகுமானுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் ஹரியானா மாநிலத்தின் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சதியில் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலைத் தகர்க்க சதி நடந்ததாகத் தகவல் வெளியான நிலையில், ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பிலிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட செய்தியும் வெளியானது. ரயில்வேயில் பணிபுரியும் பிகானீரைச் சேர்ந்த பவானி சிங்கை, ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் பொறி வைத்து ஹனி டிராப் பாணியில் தொடர்பு கொண்ட நிலையில். அவரிடம் மயங்கிய பவானி சிங், பாக்கிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு பல்வேறு தகவல்களைக் கொடுத்துள்ளார். நிம்மி என்ற புனைப் பெயரில் பவானி சிங்குக்கு அறிமுகமாகி அவரிடமிருந்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார் அந்த பெண் உளவாளி. உளவு அமைப்பை சேர்ந்தவர்கள், ஒருவரை கவர்ந்து மயக்கி அவரிடமிருந்து தகவல்களை பெற்று தங்கள் உளவு நிறுவனத்துக்கு கொடுப்பதை `ஹனி டிராப்' என்கின்றனர். நீண்ட நாட்களாக உளவு சொல்லி வந்ததாக அண்மையில் இராஜஸ்தான் மாநிலத்தின் காவல்துறை பவானி சிங்கை கைது செய்துள்ளனர்.
கருத்துகள்