முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலை குண்டு வீசித் தகர்க்க பாக்கிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு சதி உ.பி ஆட்டோ ஓட்டுனர் கையெறி குண்டுகளுடன் கைது

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலை குண்டு வீசித் தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு சதி உ.பி ஆட்டோ ஓட்டுனர்  கைது.         


அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலில் தாக்குதல் நடத்த, அயோத்தி மாவட்டம் பைசாபாத் நகரின் மில்கிபூர் பகுதி அப்துல் ரகுமான் அபுபக்கர் (வயது 19) என்ற நபரை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் தேர்வு செய்ததாகவும் இவர் ஹரியானாவின் பரிதாபாத்தில் ஆள்மாறாட்டம் செய்து சங்கர் எனும் பெயரில், உணவு விடுதியில் பணியாற்றுகிறார். பகுதி நேரமாக தொழிலாக ஆட்டோவும் ஓட்டுகிறார்.


அவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் 500 ஆண்டுகள் கடந்து புணரமைப்பு செய்து புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முதல்  நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதுமிருந்து வந்து தரிசனம் செய்கின்றனர்.


இங்கு 1529-ஆம் ஆண்டு முகலாயர் ஆட்சியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சர்ச்சைகுறிய மசூதி 1992-ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் கரசேவகர்கள் மூலம் இடிக்கப்பட்ட வழக்கில்  2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கவும், அயோத்தியில் தானிப்பூர் என்ற இடத்தில் புதிய மசூதி கட்ட நிலம் ஒதுக்கும்படியும் உத்தரவிட்டதையடுத்து 2020-ஆம் ஆண்டு ராமஜென்ம பூமியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால், இங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்ததாக தெரிகிறது.


அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில், உத்தர பிரதேசத்திலுள்ள அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை உளவு பார்க்கும் பணி அப்துல் ரகுமானுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு தீவிரவாத அமைப்பின் நெட்வொர்க் ஒன்றின் மூலம் இரண்டு கையெறி குண்டுகளை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பினர் வழங்கியுள்ளனர்.இறைச்சி கடை நடத்தி வந்தவரும், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டியவருமான ரெஹ்மான், தனது அடையாள அட்டையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸால் அவர் தயார்படுத்தப்பட்டதாக காவல்துறை விசாரணை மூலம் தெரிகிறது.

இது குறித்த தகவல் குஜராத் மாநிலத்தில் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்தது. அவர்கள் ஹரியானா மாநிலத்தில் சிறப்பு படை காவல் துறையினருடன் இணைந்து அப்துல் ரகுமானை பரிதாபாத்தில் கைது செய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் ஒரு பென் டிரைவ் மீட்கப்பட்டதில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ள இடங்களின் வரைபடம், தாக்குதல் நடத்துபவர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆகியவை இருந்தன. அந்தத்தகவல்களை ஆராய்ந்த போது விரைவில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது. அங்கு இரண்டு கையெறி குண்டுகளும் மீட்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டதையடுத்து.  இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன. ஃபரிதாபாத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள பாலி கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட வீட்டில் அப்துல் ரெஹ்மான் இவற்றை மறைத்து வைத்திருந்தார். அந்த இரண்டும் குண்டும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.


இதன் பின்னர் ஏடிஎஸ் குழு அவரை குஜராத்துக்கு அழைத்துச் சென்றது, அங்கு அவர் விசாரிக்கப்படுவார்.  குஜராத்தின் உளவு அமைப்பு உளவுத் தீவிரவாதத் தடுப்பு பிரிவு அலுவலர்களை உடனே டெல்லி வரும்படி உத்தரவிடப்பட்டது. அவர்கள் உளவுத்துறை தீவிரவாதத்தடுப்புப் பிரிவு உயர் அலுவர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். தீவிரவாத சதியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என மத்திய உளவுத்துறை அமைப்புகள் விசாரித்து வருகின்றன. உள்ளூரில் அப்துல் ரகுமானுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் ஹரியானா மாநிலத்தின் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சதியில் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலைத் தகர்க்க சதி நடந்ததாகத் தகவல் வெளியான நிலையில், ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பிலிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட  செய்தியும் வெளியானது. ரயில்வேயில் பணிபுரியும் பிகானீரைச் சேர்ந்த பவானி சிங்கை, ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் பொறி வைத்து ஹனி டிராப் பாணியில் தொடர்பு கொண்ட நிலையில். அவரிடம் மயங்கிய பவானி சிங், பாக்கிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு பல்வேறு தகவல்களைக் கொடுத்துள்ளார். நிம்மி என்ற புனைப் பெயரில் பவானி சிங்குக்கு அறிமுகமாகி அவரிடமிருந்து பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார் அந்த பெண் உளவாளி. உளவு அமைப்பை சேர்ந்தவர்கள், ஒருவரை கவர்ந்து மயக்கி அவரிடமிருந்து தகவல்களை பெற்று தங்கள் உளவு நிறுவனத்துக்கு கொடுப்பதை `ஹனி டிராப்' என்கின்றனர். நீண்ட நாட்களாக உளவு சொல்லி வந்ததாக அண்மையில் இராஜஸ்தான் மாநிலத்தின் காவல்துறை பவானி சிங்கை கைது செய்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...