பொன். மாணிக்கவேல் உடன் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு
என மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கில் CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை எதிர்த்த வழக்கில் பொன். மாணிக்கவேலுக்கு ஆதரவாக மார்ச் மாதம் 13 ஆம் தேதியன்று CBI விசாரணைக்குத் தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
எதிர்த்து ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர் காதர் பாட்ஷாவின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தடை நீக்கம் செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம் பொன்.மாணிக்கவேல் மீதான விசாரணையை CBI தொடர்ந்து நடத்தலாம். சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து இரயில்வே பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேல், மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கே சிறப்பு அலுவலராக நியமித்தது நீதிமன்றம். 2018 ஆம் ஆண்டு பொன். மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்ற பின்னரும் நீதிமன்றம் அவருக்கு பணி நீட்டிப்பும் வழங்கியது. நீதிமன்ற உத்தரவை தனக்கு சாதமாக வைத்துக்கொண்டு பொன். மாணிக்கவேல். ஒரு கட்டத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த SP ஒருவர், DSP ஒருவர், ஆய்வாளர் 4 பேர், சார்பு ஆய்வாளர் 6 பேர் என்று மொத்தம் 12 அலுவலர்கள் கூட்டாகச் சேர்ந்து பொன். மாணிக்கவேலுவுக்கு எதிராக காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனுவை அளித்தனர். தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக இந்த அவலம் நடந்தது. புகார் மனுவில், "பொன். மாணிக்கவேல் பொய்யாக வழக்கு பதிவு செய்ய வற்புறுத்துவதாகவும், மறுத்தால் மிக மோசமாகத் திட்டுவதாகவும் அதனால் எங்களை வேறிடத்துக்குப் பணி மாற்றம் செய்யுங்கள்” என அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவராக நீதிமன்றங்களின் துணையோடு பொன்.மாணிக்கவேல் செயல்பட்ட காலக்கட்டத்தில், அவரால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளில் முக்கியமானவர் அதே துறையில் பணிபுரிந்த DSP காதர் பாட்ஷா. 2005ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில். 2006 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சேர்ந்த காதர் பாட்ஷா. ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் தீவிர புலன் விசாரணைக்கு பின்னர், தீனதயாளன் என்ற சிலை கடத்தல் கும்பலின் தலைவனைக் கைது செய்து, அவனிடமிருந்து 4 சிலைகளை மீட்டனர். பழவூர் வழக்கில் 2008 ஆம் ஆண்டே இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் நடைபெற்றது.
2017 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பணிப் பொறுப்பேற்றார் பொன். மாணிக்கவேல். தமிழ்நாட்டில் சிலை கடத்தலில் மிக முக்கியக் குற்றவாளியான தீனதயாளன் மீதான வழக்கை நடத்தி அவருக்கு தண்டனை வாங்கி தந்திருப்பார் என்று நாம் நினைத்தால், அது தான் இல்லை.
தீனதயாளனை கைது செய்து சிலை கடத்தல் கும்பலை முடக்கி வைத்த ஜீவானந்தம், காதர் பாட்சா ஆகியோருக்கு எதிராக தீனதயாளனிடமிருந்தே 'வாக்குமூலம்' பெற்று, அவரை அப்ரூவராக மாற்றி, அந்த காவல் அலுவலர்களுக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்தார் பொன்.மாணிக்கவேல்.
அதாவது பழவூர் சிலைகளை தீனதயாளன் வெளிநாட்டில் உள்ள சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுபாஷ் கபூரிடம் விற்று விட்டார். அந்த சிலை பல நாடுகளுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு 2008 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பியதாக பொன்.மாணிக்கவேல் சொல்லிய சிலைகளை, 2007ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் ஜீவானந்தம் மற்றும் காதர் பாட்ஷா குழுவினர் அதிகாரப்பூர்வமாக மீட்டு 2008ஆம் ஆண்டே தீனதயாளன் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
கடத்தல் கும்பல் தலைவன் தீனதயாளன், 2007ஆம் ஆண்டு தன்னை கைது செய்த அலுவலர்களுக்கு எதிராக அதுவும் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில், சம்பவ,ம் நடைபெற்ற 12 ஆண்டுகளுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு ஒரு குற்றச்சாட்டை வாக்குமூலமாகக் கொடுக்கிறார். அதனை ஏற்று தீனதயாளனை அனைத்துக் குற்றங்களிலிருந்து விடுவித்து 'அப்ரூவராக' அறிவித்து தப்பிக்க வைத்துள்ளார் பொன். மாணிக்கவேல். இந்த நபர் தான் நீதிமன்றங்கள் கொண்டாடும் 8 யோக்கியன் இந்த கதை அவ்வளவு வலுவானதாக இல்லை என்று பொன். மாணிக்கவேலுவுக்கு தோன்றியதால் என்னவோ, இன்னொரு ஜோடிக்கப்பட்ட வழக்கை DSP காதர் பாட்ஷா மீது பதிவு செய்கிறார்.
2007ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு பக்கத்தில் விவசாய நிலத்தில் சிவன், பார்வதி மற்றும் சிவகாமி உள்ளிட்ட மூன்று சிலைகள் அந்த நிலத்தின் உரிமையாளர்களால் கண்டெடுக்கப்படுகின்றன. அவர்கள் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், அந்த சிலைகளை ஒரு போட்டோகிராபர் கொண்டு படமெடுத்து விட்டு தங்கள் ஷெட்டிலேயே வைத்து விடுகின்றனர்.
2008 ஆம் ஆண்டு இந்த மூன்று சிலைகளையும் விலை கொடுத்து வாங்குகிறோம் என்ற பெயரில் அவற்றை மீட்க இரகசியமாகச் சென்ற DSP காதர் பாட்சா தலைமையிலான காவல்துறையினர், சிலைகளை கண்டெடுத்த நிலத்தின் உரிமையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவற்றை கொள்ளையடித்துவிட்டதாக வழக்கு. இதுவரை பொன்.மாணிக்கவேல் சொல்வது ஓரளவு நம்பும்படியாகவே இருக்கும்.
அடுத்து இந்த மூன்று சிலைகளையும் கடத்திய DSP காதர்பாட்ஷா அவற்றை சிலை கடத்தல் தலைவன் தீனதயாளனிடம் 15 லட்சத்துக்கு விற்றுவிட்டாராம். அதுவும் தீனதயாளன் அவற்றை வாங்க மறுத்த போதும், வலுக்கட்டாயமாக அவரது காரில் காதர் பாட்சா வைத்துவிட்டுச் சென்றாராம். அந்த சிலைகளில் இரண்டை டெல்லியை சேர்ந்த ஒருவரிடம் 20 லட்சத்துக்கு விற்றுவிட்டார் தீனதயாளன்.
சரி, இவ்வளவு பயங்கரமான குற்றச் சம்பவம் எப்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தெரிய வந்தது?
2016 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைவருக்கு வந்த அனாமதேயமான மர்மக் கடிதத்ததில் தான் இந்தக் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தது. அதுவும் 2008 ஆம் ஆண்டு கடிதம் எழுதிய நபர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்ததாகவும் கடித்தத்தில் சொல்கிறார்.
அடடா இப்படி ஒரு 'தெளிவான' 'விரிவான' மர்மக் கடிதத்தை நாம் எங்கேயாவது பார்த்திருக்க முடியாது. இந்த ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் தான் DSP காதர்பாட்ஷாவை அடுத்தடுத்துக் கைது செய்து 90 நாட்கள் பிணையை மறுத்து சிறையில் வைத்தார் பொன்.மாணிக்கவேல்.
சர்வதேச சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுபாஷ் கபூரை தாம் தான் ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வந்தேன் என ஊடகம் மூலம் பெருமை பேசிய பொன். மாணிக்கவேல். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் தீனதயாளனை அப்ரூவர் எனச் சொல்லி தப்பிக்க விட்டதைப் போல, சுபாஷ் கபூரிடமும் கூட்டுச் சேர்ந்து அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்றார் பொன்.மாணிக்கவேல்.பல்வேறு கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் கபூரை 2012 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குக் கொண்டு வந்தது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு. ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டதால், சுபாஷ் கபூரை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ எந்த விதமான தடையும் இல்லை. ஆனால் வழக்கு விசாரணைக்கு மட்டும் ஜெர்மன் அரசின் அனுமதி வேண்டும். அதனால் அவன் மீது குற்றப்பத்திரிகை மட்டும் இப்போதைக்கு தாக்கல் செய்யலாம் என 2017ஆம் ஆண்டு பழவூர் வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் போது தெரிவித்தார் பொன்.மாணிக்கவேல். இதனை அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனை பெற்று தாக்கல் செய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் அந்தர் பல்டி அடித்து பொன். மாணிக்கவேல். அதாவது சுபாஷ் கபூர் மீதான வழக்குகளை காரணம் காட்டி ஜெர்மன் அரசு இந்திய அரசுடனான மற்ற நாடு கடத்தல் விவகாரங்களில் பிரச்சினை உருவாக்குவதாகவும், இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சிக்கல் எழுவதாகவும், அதன் காரணமாக தமிழ்நாடு அரசு இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுபாஷ் கபூர் மீதான பழவூர் மற்றும் விக்ரமங்கலம் வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசாணை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு 'அறிவுறுத்தினார்'மற்ற கடத்தல் வழக்குகளில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற சுபாஷ் கபூர் 2022ஆம் ஆண்டே தண்டனைக் காலம் முடிந்து இன்னும் சிறையிலுள்ளார். அவரை தங்கள் நாடுகளில் உள்ள வழக்குகளுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி வருகிறது அமெரிக்காவும், ஜெர்மனியும். தண்டனையின் ஒரு பகுதியான அபராத தொகையை கட்டாமல் இந்திய சிறையிலேயே காலம் கடத்தி வருகிறார். 600 கோடி அளவுக்கு சிலைகளை கடத்தியதாக சுபாஷ் கபூர் மீது பொன். மாணிக்கவேல் குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் பொன். மானிக்கவேலுவின் அதிரடியால் வெறும் 10 ஆண்டு சிறை தண்டனையோடு தப்பவிடப்பட்டார்.
சிலை கடத்தல் கும்பல் தலைவர் தீனதயாளனுடன் கூட்டு சேர்ந்து, அவனை தப்பிக்க வைத்ததுடன், அவனிடமிருந்தே வாக்குமூலம் பெற்று பொன்.மாணிக்கவேல் தமக்கு இழைத்த கொடுமைகளை பட்டியலிட்டு 2019 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்ககா கோரினார் காதர் பாட்சா. இது தொடர்பாக சிபிசிஐடி போன்ற தமிழ்நாடு காவல்துறையின் தனிப்பிரிவு ஏதேனும் விசாரிக்க உத்தரவிடக்கோரி காதர் பாட்சா தொடுத்த வழக்கில் 2022ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. காதர் பாட்சா சிபிசிஐடி விசாரணை தான் கோரினார், ஆனால் வழக்கை விசாரித்த நீதியரசர் ஜெயச்சந்திரன் தனது 76 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் CBI விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் காதர் பாட்ஷா அளித்த புகார் மனுவை விசாரிப்பது மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு பழவூர் வழக்கிலும் ஏதேனும் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அதிலும் தனியே சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் நீதியரசர் ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதில் பொன்.மாணிக்கவேல் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துள்ளார் நீதிபதி. அது எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பில் தம்மை பற்றி கூறப்பட்டுள்ளவற்றை நீக்கக்கோரி உச்சநீதிமன்றம் சென்றார் பொன்.மாணிக்கவேல். உச்சநீதிமன்றமோ அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து, சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தியது. மேலும், தன் மீதான CBI விசாரணைக்குத் தடை கேட்ட மனுவையும் தள்ளுபடி செய்து நீதியரசர் ஜெயச்சந்திரனின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
2022ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பல தடைகளைத் தாண்டி காதர் பாட்ஷாவின் புகாரை விசாரித்த சிபிஐ., கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பொன்.மாணிக்கவேல் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததில் பொன்.மாணிக்கவேலுவுக்கு எதிரான காதர்பாட்ஷாவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை முகாந்திரம் இருப்பதாகவும், பொய்யான கிரிமினல் வழக்கை DSP காதர் பாட்ஷா மீது பதிவு செய்து, சட்டவிரோதமாக அவரைக் கைது செய்ததாகவும், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க போலி ஆவணங்களை தயாரித்ததாகவும்மொத்தம் 13 பிரிவுகளில் CBI வழக்கு பதிவு செய்தது. மேலும், அவரது இல்லத்திலும் CBI உயர் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். பொன். மாணிக்கவேலுவை கைது செய்வதற்கு CBI முனைப்புக் காட்டியபோது, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் முன் பிணை பெற்று தப்பித்தார். முன்பிணை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரமிருப்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொன். மாணிக்கவேலைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால் தான், அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்துத் தெரிய வரும். எனவே முன்பிணை வழங்கக்கூடாது' என்றும், 'உயர் நீதிமன்ற உத்தரவுபடியே பொன். மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றும் CBI தரப்பில் வாதிடப்பட்டது.
CBI பிடி இறுகிய நிலையில், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் CBI தாக்கல் செய்த விசாரணை நகலைக் கேட்டு தாக்கல் செய்தார் பொன். மாணிக்கவேல் மற்ற ஆவணங்கள் தந்தால் விசாரணை பாதிக்கப்படும், முதல் தகவல் அறிக்கை மட்டுமே பகிர முடியும் என நீதிபதி உத்தரவிட, அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தார். நீதிபதி பி.புகழேந்தி வழக்கை விசாரித்து வந்தார்.
நிபந்தனை பிணையிலுள்ள பொன்.மாணிக்கவேல் சாட்சிகளை மிரட்டி வருகிறார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம் என நீதிமன்றத்தில் CBI தெரிவித்தது. மேலும், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாலேயே வழக்கு. அதில் பல அதிரடிக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, உயர்நீதிமன்றத்தில் 'முறையாக பணியாற்றும் அலுவலர்களைப் பாதுகாக்க வேண்டும். முறையான விவரங்களின்றி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல' என்று 13.3.2025 ஆம் தேதி விசாரணைக்கு தடை விதித்தார். இந்த நிலையில் தான் தற்போது உச்சநீதிமன்றத்தில் தடை நீக்கப்பட்டது இனி விசாரணை துரிதமாக நடைபெறும்.
கருத்துகள்