தமிழ்நாட்டில் 77 நீதிபதிகள் பணியிட மாற்றம் நீதிபதிகளை பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாகவும்,
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கும்,
பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாகவும்,
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மாவட்ட நீதிபதியாகவும், அரசு சொத்தாட்சியராகவும் இருந்த டி.லிங்கேஸ்வரன், மயிலாடுதுறை மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதியாக இருந்த டி.சந்திரசேகரன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும்.. ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த பி.முருகேசன், சென்னை 8-வது சிபிஐ நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய எஸ்.ஈஸ்வரன், சென்னை 9-வது சிபிஐ நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை 2-வது பெருநகர கூடுதல் நீதிபதியாக இருந்த எஸ்.தஸ்நீம், திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை 16-வது பெருநகர கூடுதல் நீதிபதியாக இருந்த எல்.ஆபிரகாம் லிங்கன், சிவில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு கூடுதல் நீதிபதியாக இருந்த கே.காயத்ரி, வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை 5-வது குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.காஞ்சனா, திருவண்ணாமலையில் போக்கோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட 3-வது கூடுதல் நீதிபதியாக இருந்த எஸ்.பத்மா, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு குடும்பநல நீதிபதியாக இருந்த எஸ்.மலர்விழி, பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் அங்கு பணியாற்றிய கே.எச்.இளவழகன், கரூர் மாவட்ட அமர்வு நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.கரூர் மாவட்ட நீதிபதியாக இருந்த ஆர்.சண்முகசுந்தரம், சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் (தடா) நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய கே.கீதா ராணி, சென்னை பெருநகர 3-வது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட முதலாவது தடா கூடுதல் நீதிபதியாக இருந்த ஆர்.கே.பி.தமிழரசி, 4-வது கூடுதல் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய வி.பாண்டிராஜ், 6-வது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6-வது நீதிபதியாக இருந்த எஸ்.முருகேசன், தற்போது 7-வது கூடுதல் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நீதிபதிகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்