பாண்டிய மாமன்னன் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன்
பொது ஆண்டு . 1251 முதல் 1271 வரை மதுரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னன். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்ட மன்னர்.
"மஹாராஜாதி ராஜ ஸ்ரீபரமேஸ்வரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன்"போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றவனது காலத்தில் மதுரை பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் இன்று பிறந்தவர் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கிய மாமன்னர். வரலாற்று நிகழ்வுகளின் காலக் கணிப்பை உறுதி செய்யும் வானியல் தரவுகள் அனைத்தும் சித்திரை மாதத்தை முதலில் வைத்துத் துவங்கும்.
கடந்தகாலங்களில் உள்ள கல்வெட்டு சாசனங்களில் ஏராளமான வானியல் குறிப்புகளும் உள்ளன.
சக , கலி வருஷம், மாதம், நாள், நட்சத்திரம், திதி, அமாவாசை, பௌர்ணமி, சூரியகிரகணம் , மற்றும் பல விபரங்கள் ஒன்றோ இரண்டோ அனைத்துமோ இருக்கும்.
இதைக்கொண்டு வரலாற்றுக் காலத்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
துல்லியமான தமிழர்களின் வானவியல் கணக்கீடு முறையைக் கொண்டு தான் 1500 ஆண்டுகள் கால வரலாற்று நிகழ்வுகளை கணித்து ஆவணப்படுத்தியுமுள்ளனர்
மாமன்னர் ஸ்ரீ இராஜராஜ சோழரின் கல்வெட்டு சாசனம்
சக வருஷம் மற்றும் சில வானியல் குறிப்புகள். இதை பார்த்திப என்னும் தமிழ் தொடராண்டாக மாற்றி மேலும் சில சாசனங்களுடன்
ஒப்பீடு செய்து.
ஸ்ரீ இராஜராஜ சோழர் பதவியேற்ற நாள்.
985 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 ஆம் தேதி புனர்பூசம் நட்சத்திரம் எனக் கணித்துள்ளார்கள்.
சக , கலி வருடம் இல்லாத வானியல் குறிப்புகளைக் கொண்டு
தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள்.
1010 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 10 நாள் சனிக்கிழமை என ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று நிகழ்வுகளின் காலத்தை .
வருஷம், மாதம், நாள், கிழமை, நட்சத்திரம். என துல்லியமாகக் கொண்டு கணிக்கப்பட்டது தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று திகழ்வுகள் மட்டுமே.
இந்தக் கணக்கீடு முறையில்
ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முக்கிய குறிப்பு.
" Chittrai
Which is the first month of the tamil solar year."
ஆகவே தான் சித்திரையை தமிழர்களின் ஆண்டுத் துவக்க மாதமாக யுகயுகமாக அதாவது காலகாலமாகக் கருதுகிறோம். இதில் மாற்றம் கண்டால் ஒட்டு மொத்த வரலாறும் பிழையாகும்.
அதேபோல் பாண்டிய நாட்டின் அரசன்.
முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன்
அவதாரம் செய்தருளிய நாள் இன்று.
சித்திரை மாதத்து மூல நட்சத்திரம்.
வரலாற்று உலகில் உச்சம் தொட்ட பாண்டிய மன்னன். பார்புகழும் பாண்டியர் பெருமையை மீட்டெடுத்த பாண்டியன்.
தமிழ் நாட்டில் சோழர்களையும் சேரர்களையும் வென்று வடக்கே நெல்லூர் முதல் தெற்கே குமரி வரை கைப்பற்றி
வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழக நிலப்பரப்பு முழுவதையும் பாண்டியரின் ராஜ்யமாக கைக்கொண்டு மதுரையில் செங்கோல் செலுத்தி
" எம் மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர்"
என்னும் பட்டம் பெற்ற பாண்டிய மன்னன் பிறந்த நாள்.
பொது ஆண்டு.1251 ல் பாண்டிய வேந்தனாக முடிசூட்டப்பட்டார்.
சேரநாட்டை அரசாண்ட
வீர ரவி உதய மார்த்தாண்டன் என்பவரை வீழ்த்தி தற்போது உள்ள மலையாளத்தை அதாவது கேரளாவைக் கைப்பற்றினார்.
சோழநாட்டின் அரசனான மூன்றாம் இராஜேந்திரனையும் வென்று சோழத்தை தனதாக்கினார்.
சிதம்பரம் கல்வெட்டு இந்த வெற்றியை இவ்வாறு கூறும்..
" காரேற்றத் தண்டலை காவிரி நாடனை கானுலவுந் தேரேற்றி விட்ட செழுந்தமிழ் தென்னவன் "
சோழநாட்டில் முகாமிட்டிருந்த போசாளர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் நீக்கி பாண்டியத்தை நிலை நிறுத்திய தென்னவன். வானர்களின் மகதநாடு கொங்கு மன்னர்களின் கொங்குநாடு இவற்றையும் கைப்பற்றிய பாண்டியன்.
இலங்கையை வென்றதால் சுந்தரபாண்டியனுக்கு
இலங்கையை வென்ற இரண்டாம் ஸ்ரீ ராமன் என்னும் பெயரும் உண்டு.
விஜயகண்ட கோபாலனைக் கொன்று காஞ்சிபுரம் கைப்பற்றி பிறகு வடக்கே சென்று வாராங்கல் காக்காதீய மன்னனான கணபதியை வென்று நெல்லூரைக் கைப்பற்றி
அங்கே வீராபிசேகம் செய்தார்.
" வாக்கியல் செந்தமிழ் சுந்தரபாண்டியன் வாளமரில் வீக்கிய வன்கழற் கண்ட கோபாலனை விண்ணுலகிற் போக்கியபின் "
மொத்த தமிழ் நிலத்தையும் இலங்கையையும் கைகொண்டு.
எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியத்தேவர்
என்றும் செந்தமிழ் சுந்தரபாண்டியன் என்றும். செழுந்தமிழ் தென்னவன் என்றும் தமிழோடு இவரது பெயர் கல்வெட்டில் காணப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இவர் பெற்ற ஒரு சிறப்புப் பெயர்.
"எல்லா தலையான பெருமாள் "
சேந்தமங்கலம் வானிலை கண்ட ஈஸ்வரர் கோவில் கல்வெட்டில் இப்பெயரைக் காணலாம்.
இப்பெயரில்..
" எல்லாம் தலையான் " என்ற எழுத்துப்பொறிப்பில் நாணயங்களையும் வெளியிட்டார்.
சிதம்பரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பாண்டியன் அளித்த அறக்கொடைகள் ஏராளம். பொன்னால் வேய்ந்து.
பொன் வேய்ந்த மகிபதி என்று பெயர் பெற்றார். தில்லை அதாவது சிதம்பரம் மேற்கு கோபுரத்தை எடுத்தவரும் இவரே. சுந்தரபாண்டியன் கோபுரம் என்றே அது அழைக்கப்படுகிறது.
மதுரைக்கு அரசி ஸ்ரீ மீனாட்சி அம்மன் கிழக்குக் கோபுரம் எடுத்தவரும் இவரே.
அவனி வேந்தராமன் திருக்கோபுரம் என்பது கல்வெட்டுப்பெயர்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவர் அளித்த படகு துலாபாரம் உலகளவில் சிறப்பான வரலாற்று நிகழ்வு.
கடிகைகளில் தமிழ் பாடம் கற்பிக்க .
" முத்தமிழ் ஆசிரியரான தமிழ் கரைகண்ட சாத்தனார் " என்பவரை ஆசிரியராக நியமித்து அக்கடிகைக்கு பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊரை தானமாக அளித்த பாண்டியன்.
சிதம்பரம் கோவில் சரசுவதி மஹால் பண்டாரத்திலுள்ள அதாவது (தற்போது ஓலைச்சுவடிகள் நூலகம்) ஏட்டுச்சுவடிகளை மறுபிரதி எடுக்க 20 பண்டிதர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியமாக மானியமாக நிலம் வழங்கிய பாண்டியன்.
ஆலயப்பணியும் அறப்பணியும் ஒருங்கேயாற்றி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த இப் பாண்டிய மன்னன் பிறந்த நாள் சித்திரை மாதத்தில் மூல நட்சத்திரம் இன்று
திருவானைக்காவல் கோவில் கல்வெட்டு.
இவர் பிறந்த சித்திரை மாதத்து மூல நட்சத்திர நாள் " சேரனை வென்ற திருநாள் " என்ற பெயரில் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
இவர் பிறந்த நாளுக்கான வாழ்த்துப்பா ஒன்றை திருப்புட்குழி திருமால் கோவில் கல்வெட்டு இவ்வாறு பதிவு செய்கிறது.
" வாழ்க கோவில் பொன்வேய்ந்த மகிபதி. வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன். வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன். வாழ்க சுந்தர மன்னவன் தென்னவனே.."செழுந்தமிழ் தென்னவன். செந்தமிழ் பாண்டியன்.எனறென்றுமுள தமிழோடு தன்னை அடையாளப்படுத்தும் எல்லாருக்கும் தலையான சுந்தர பாண்டியன். அவதார தினம் அதாவது பிறந்தநாள் இன்று இது எமது வரலாற்றுத்துறை வழிகாட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ். சர்வேஸ்வரன் அவர்களால் சீராய்வு செய்யப்பட்டது.
இன்று ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்தநாள்.
வரலாற்று உலகில் உச்சம் தொட்ட பாண்டிய பேரரசன். ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட தமிழ் நிலத்து வேந்தன்.
ஆனால்.
இங்கே தமிழ் நாட்டில்.
தற்போது அயல் நாட்டு சித்தாந்தம் கொண்ட ஸ்டாலின், லெனின்,
காரல்மார்க்ஸ்க்கு, சிலை என்கிறார்கள். சர் ஜான் மார்சல் கொண்டாடப்படுகிறார். ஆனால் அந்த நிகழ்வுகள் மதுரை மண்ணில் நடக்கிறது.
ஆனால் தமிழ் நிலத்து வேந்தன் ஒருவரின் திருநாள் பற்றி அறிந்தவர் சிலரே.
ஏன் இந்த வரலாற்றுச் சோகம்.?
இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் மிகச்சிறந்த வரலாற்றாய்வாளர்கள் . தீவிரமான மொழிப்பற்றாளர். மதுரை மண்ணின் மைந்தர்.ஏதாவது செய்யலாம்
குறைந்த பட்சம் சுந்தரபாண்டியன் திருநாளை அரசு விழாவாக அறிவிக்க ஏற்பாடு செய்யலாம் அப்போது
தமிழ் கூறும் வரலாற்றுலகம் அமைச்சரை நன்றியுடன் நினைவு கூறும்.
கருத்துகள்