முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாண்டிய மாமன்னர் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் அவதார நாள்

பாண்டிய மாமன்னன் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன்


பொது ஆண்டு . 1251 முதல் 1271 வரை மதுரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னன். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்ட மன்னர்.

"மஹாராஜாதி ராஜ ஸ்ரீபரமேஸ்வரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன்"போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றவனது காலத்தில் மதுரை பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் இன்று பிறந்தவர் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கிய மாமன்னர்.             
வரலாற்று நிகழ்வுகளின் காலக் கணிப்பை உறுதி செய்யும் வானியல் தரவுகள் அனைத்தும் சித்திரை மாதத்தை முதலில் வைத்துத் துவங்கும்.

கடந்தகாலங்களில் உள்ள கல்வெட்டு சாசனங்களில் ஏராளமான வானியல் குறிப்புகளும் உள்ளன.

சக , கலி வருஷம், மாதம், நாள், நட்சத்திரம், திதி, அமாவாசை, பௌர்ணமி, சூரியகிரகணம் , மற்றும் பல விபரங்கள் ஒன்றோ இரண்டோ அனைத்துமோ இருக்கும். 

இதைக்கொண்டு வரலாற்றுக் காலத்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


துல்லியமான தமிழர்களின் வானவியல் கணக்கீடு முறையைக் கொண்டு தான் 1500 ஆண்டுகள் கால வரலாற்று நிகழ்வுகளை கணித்து ஆவணப்படுத்தியுமுள்ளனர்

மாமன்னர் ஸ்ரீ இராஜராஜ சோழரின் கல்வெட்டு  சாசனம் 

சக வருஷம் மற்றும் சில வானியல் குறிப்புகள். இதை பார்த்திப என்னும் தமிழ் தொடராண்டாக  மாற்றி  மேலும் சில சாசனங்களுடன்

 ஒப்பீடு செய்து.



ஸ்ரீ இராஜராஜ சோழர் பதவியேற்ற நாள்.

985 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 ஆம் தேதி புனர்பூசம் நட்சத்திரம் எனக் கணித்துள்ளார்கள்.

சக , கலி வருடம் இல்லாத வானியல் குறிப்புகளைக் கொண்டு

தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள்.

1010 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 10 நாள் சனிக்கிழமை என ஆவணப்படுத்தியுள்ளார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று நிகழ்வுகளின் காலத்தை .

வருஷம், மாதம், நாள், கிழமை, நட்சத்திரம். என துல்லியமாகக் கொண்டு கணிக்கப்பட்டது தமிழர்களின் வாழ்வியல் வரலாற்று திகழ்வுகள் மட்டுமே.  


இந்தக் கணக்கீடு முறையில் 

ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முக்கிய குறிப்பு.

" Chittrai 

Which is the first month of the tamil solar year."

ஆகவே தான் சித்திரையை தமிழர்களின் ஆண்டுத் துவக்க மாதமாக யுகயுகமாக அதாவது காலகாலமாகக் கருதுகிறோம். இதில் மாற்றம் கண்டால் ஒட்டு மொத்த வரலாறும் பிழையாகும்.

அதேபோல் பாண்டிய நாட்டின் அரசன்.

முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் 

அவதாரம் செய்தருளிய நாள் இன்று.

சித்திரை மாதத்து மூல நட்சத்திரம்.

வரலாற்று உலகில் உச்சம் தொட்ட பாண்டிய மன்னன். பார்புகழும் பாண்டியர் பெருமையை மீட்டெடுத்த பாண்டியன்.




தமிழ் நாட்டில் சோழர்களையும் சேரர்களையும் வென்று வடக்கே நெல்லூர் முதல் தெற்கே குமரி வரை கைப்பற்றி 

வடவேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழக நிலப்பரப்பு முழுவதையும் பாண்டியரின் ராஜ்யமாக கைக்கொண்டு மதுரையில் செங்கோல் செலுத்தி

" எம் மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியத் தேவர்"

என்னும் பட்டம் பெற்ற பாண்டிய மன்னன் பிறந்த நாள்.

பொது ஆண்டு.1251 ல் பாண்டிய வேந்தனாக முடிசூட்டப்பட்டார்.

சேரநாட்டை அரசாண்ட

வீர ரவி உதய மார்த்தாண்டன் என்பவரை வீழ்த்தி தற்போது உள்ள மலையாளத்தை அதாவது கேரளாவைக் கைப்பற்றினார்.


சோழநாட்டின்  அரசனான மூன்றாம் இராஜேந்திரனையும் வென்று சோழத்தை தனதாக்கினார்.

சிதம்பரம் கல்வெட்டு இந்த வெற்றியை இவ்வாறு கூறும்..

" காரேற்றத் தண்டலை காவிரி நாடனை கானுலவுந் தேரேற்றி விட்ட செழுந்தமிழ் தென்னவன் "

சோழநாட்டில் முகாமிட்டிருந்த போசாளர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் நீக்கி பாண்டியத்தை நிலை நிறுத்திய தென்னவன். வானர்களின் மகதநாடு கொங்கு மன்னர்களின் கொங்குநாடு இவற்றையும் கைப்பற்றிய பாண்டியன்.

இலங்கையை வென்றதால் சுந்தரபாண்டியனுக்கு 

இலங்கையை வென்ற இரண்டாம் ஸ்ரீ ராமன்  என்னும் பெயரும் உண்டு.

 விஜயகண்ட கோபாலனைக் கொன்று காஞ்சிபுரம் கைப்பற்றி பிறகு வடக்கே சென்று  வாராங்கல் காக்காதீய மன்னனான கணபதியை வென்று நெல்லூரைக் கைப்பற்றி 

அங்கே வீராபிசேகம் செய்தார்.


" வாக்கியல் செந்தமிழ் சுந்தரபாண்டியன் வாளமரில் வீக்கிய வன்கழற் கண்ட கோபாலனை விண்ணுலகிற் போக்கியபின் "

மொத்த தமிழ் நிலத்தையும் இலங்கையையும் கைகொண்டு.

எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியத்தேவர்

என்றும் செந்தமிழ் சுந்தரபாண்டியன் என்றும். செழுந்தமிழ் தென்னவன் என்றும் தமிழோடு இவரது  பெயர் கல்வெட்டில் காணப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இவர் பெற்ற  ஒரு சிறப்புப் பெயர்.

"எல்லா தலையான பெருமாள் "

சேந்தமங்கலம் வானிலை கண்ட ஈஸ்வரர் கோவில் கல்வெட்டில் இப்பெயரைக் காணலாம்.


இப்பெயரில்..

" எல்லாம் தலையான் " என்ற எழுத்துப்பொறிப்பில் நாணயங்களையும் வெளியிட்டார்.

சிதம்பரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பாண்டியன் அளித்த அறக்கொடைகள் ஏராளம். பொன்னால் வேய்ந்து.

 பொன் வேய்ந்த மகிபதி என்று பெயர் பெற்றார். தில்லை அதாவது சிதம்பரம் மேற்கு கோபுரத்தை எடுத்தவரும் இவரே. சுந்தரபாண்டியன் கோபுரம் என்றே அது அழைக்கப்படுகிறது.

மதுரைக்கு அரசி ஸ்ரீ மீனாட்சி அம்மன் கிழக்குக் கோபுரம் எடுத்தவரும் இவரே.

அவனி வேந்தராமன் திருக்கோபுரம் என்பது கல்வெட்டுப்பெயர்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவர் அளித்த படகு துலாபாரம்  உலகளவில் சிறப்பான வரலாற்று நிகழ்வு.

கடிகைகளில் தமிழ் பாடம் கற்பிக்க .

" முத்தமிழ் ஆசிரியரான தமிழ் கரைகண்ட சாத்தனார் " என்பவரை ஆசிரியராக நியமித்து அக்கடிகைக்கு பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊரை தானமாக அளித்த பாண்டியன்.

சிதம்பரம் கோவில் சரசுவதி மஹால் பண்டாரத்திலுள்ள அதாவது (தற்போது ஓலைச்சுவடிகள் நூலகம்) ஏட்டுச்சுவடிகளை மறுபிரதி எடுக்க 20 பண்டிதர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியமாக மானியமாக நிலம் வழங்கிய பாண்டியன்.

ஆலயப்பணியும் அறப்பணியும் ஒருங்கேயாற்றி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த இப் பாண்டிய மன்னன் பிறந்த நாள் சித்திரை மாதத்தில் மூல நட்சத்திரம் இன்று 

திருவானைக்காவல் கோவில் கல்வெட்டு.

இவர் பிறந்த சித்திரை மாதத்து மூல நட்சத்திர நாள் " சேரனை வென்ற திருநாள் " என்ற பெயரில் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

இவர் பிறந்த நாளுக்கான வாழ்த்துப்பா ஒன்றை திருப்புட்குழி திருமால் கோவில் கல்வெட்டு இவ்வாறு பதிவு செய்கிறது.

" வாழ்க கோவில் பொன்வேய்ந்த மகிபதி. வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன். வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன். வாழ்க சுந்தர மன்னவன் தென்னவனே.."செழுந்தமிழ் தென்னவன். செந்தமிழ்  பாண்டியன்.எனறென்றுமுள தமிழோடு தன்னை அடையாளப்படுத்தும் எல்லாருக்கும் தலையான சுந்தர பாண்டியன். அவதார தினம் அதாவது பிறந்தநாள் இன்று இது எமது வரலாற்றுத்துறை வழிகாட்டி  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ். சர்வேஸ்வரன் அவர்களால் சீராய்வு செய்யப்பட்டது.

இன்று ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்தநாள். 

வரலாற்று உலகில் உச்சம் தொட்ட பாண்டிய  பேரரசன். ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட தமிழ் நிலத்து வேந்தன்.

ஆனால்.

இங்கே தமிழ் நாட்டில்.

தற்போது அயல் நாட்டு சித்தாந்தம் கொண்ட ஸ்டாலின், லெனின், 

காரல்மார்க்ஸ்க்கு, சிலை என்கிறார்கள். சர் ஜான் மார்சல் கொண்டாடப்படுகிறார். ஆனால் அந்த நிகழ்வுகள் மதுரை மண்ணில் நடக்கிறது.

ஆனால் தமிழ் நிலத்து வேந்தன் ஒருவரின் திருநாள் பற்றி அறிந்தவர் சிலரே.

ஏன் இந்த வரலாற்றுச் சோகம்.?

இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர்  மிகச்சிறந்த வரலாற்றாய்வாளர்கள் . தீவிரமான மொழிப்பற்றாளர். மதுரை மண்ணின் மைந்தர்.ஏதாவது செய்யலாம்

குறைந்த பட்சம் சுந்தரபாண்டியன் திருநாளை அரசு விழாவாக அறிவிக்க ஏற்பாடு செய்யலாம் அப்போது 

தமிழ் கூறும் வரலாற்றுலகம் அமைச்சரை நன்றியுடன் நினைவு கூறும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...