முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக


டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை யினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்தக் குற்றப்பத்திரிகை சோனியா காந்தி முதல் குற்றவாளியாகவும், ராகுல் காந்தி இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை யினர் நீதிமன்றத்தில் நிரூபித்தால் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. 


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம் மூலம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தினார். இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. அதோடு அசோசியேட்ஸ் ஜர்னல்ஸ் நிறுவனத்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கைப்பற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.



தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்ட அமைச்சருரும் பொருளாதாரப் பேராசிரியரும் நிபுணருமான வீராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன் பிறகு வருமான வரித்துறையினர் சார்பில் விசாரணையைத் தொடங்கினர். அப்போது சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்ததையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணைக்குள் உள் நுழைந்தது


விசாரணையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீதப் பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீதப் பங்கையும் வாங்கி வைத்துள்ளனர். இதனால் பங்குப் பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூபாய்.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை சாதரணமாக ரூபாய் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.




முதல் முறையாக குற்றப்பத்திரிகை. தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு தொடர்பான சோனியா காந்தி, ராகுல் காந்தியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அமலாக்கத்துறை யினர் தொடங்கியுள்ளனர்.. இதற்கிடையே தான் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை யினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தததில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தான் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்த  தகவல்கள் வெளியாகின. இந்தக் குற்றப்பத்திரிகையில், ‛‛நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் வெளியிட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் ரூபாய்.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குற்ற சதி செய்துள்ளனர். அதன் பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் ‛யங் இந்தியா' நிறுவனத்துக்கு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கைப்பற்றி உள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‛‛தற்போது இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு என்பது உயர்ந்துள்ளது. அதன்படி ரூபாய்.5 ஆயிரம் கோடியாக சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி முதல் குற்றவாளி என்றும், ராகுல் காந்தி இரண்டாவது குற்றவாளி'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் 

சோனியா காந்தி - ராகுல் காந்திக்கு சொந்தமான ரூபாய்.661 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்து நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை யினர் அதிரடி காட்டிய நிலையில் 




இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டப்பிரிவு (PMLA) 4வது பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கான சிறை தண்டனை என்பது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது சோனியா காந்தி, ராகுல் காந்தி மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினருக்கு தற்போது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...