காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை யினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்தக் குற்றப்பத்திரிகை சோனியா காந்தி முதல் குற்றவாளியாகவும், ராகுல் காந்தி இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை யினர் நீதிமன்றத்தில் நிரூபித்தால் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம் மூலம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தினார். இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. அதோடு அசோசியேட்ஸ் ஜர்னல்ஸ் நிறுவனத்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கைப்பற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்ட அமைச்சருரும் பொருளாதாரப் பேராசிரியரும் நிபுணருமான வீராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன் பிறகு வருமான வரித்துறையினர் சார்பில் விசாரணையைத் தொடங்கினர். அப்போது சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்ததையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணைக்குள் உள் நுழைந்தது
விசாரணையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீதப் பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீதப் பங்கையும் வாங்கி வைத்துள்ளனர். இதனால் பங்குப் பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூபாய்.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை சாதரணமாக ரூபாய் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
முதல் முறையாக குற்றப்பத்திரிகை. தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு தொடர்பான சோனியா காந்தி, ராகுல் காந்தியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அமலாக்கத்துறை யினர் தொடங்கியுள்ளனர்.. இதற்கிடையே தான் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை யினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தததில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்த தகவல்கள் வெளியாகின. இந்தக் குற்றப்பத்திரிகையில், ‛‛நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் வெளியிட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் ரூபாய்.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குற்ற சதி செய்துள்ளனர். அதன் பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் ‛யங் இந்தியா' நிறுவனத்துக்கு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கைப்பற்றி உள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‛‛தற்போது இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு என்பது உயர்ந்துள்ளது. அதன்படி ரூபாய்.5 ஆயிரம் கோடியாக சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி முதல் குற்றவாளி என்றும், ராகுல் காந்தி இரண்டாவது குற்றவாளி'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
நேஷனல் ஹெரால்டு வழக்கில்
சோனியா காந்தி - ராகுல் காந்திக்கு சொந்தமான ரூபாய்.661 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்து நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை யினர் அதிரடி காட்டிய நிலையில்
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டப்பிரிவு (PMLA) 4வது பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கான சிறை தண்டனை என்பது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது சோனியா காந்தி, ராகுல் காந்தி மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினருக்கு தற்போது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
கருத்துகள்