உச்சநீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்
தொடர்பாக ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா எழுதிய கடிதத்தில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமிக்கலாம் எனப் பரிந்துரை செய்தார். அதன் காரணமாக உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாயை நியமித்து நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து பிஆர் கவாய் மே மாதம் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அதன்பிறகு 6 மாதம் வரை தலைமை நீதிபதியாக 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை இந்தப் பொறுப்பில் செயல்படுவார். அதன்பிறகு பணி ஓய்வு பெறுவார்.பிஆர் கவாயின் முழுப்பெயர் பூஷண் ராமகிருஷ்ணா கவாய். அதன் சுருக்கம் பிஆர் கவாய் என அழைக்கப்படுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியைச் சேர்ந்தவர். 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். தந்தை ஆர்.எஸ் கவாய். இவர் அரசியல்வாதி அதோடு பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் செயல்பட்டார். இவர் பீகார், கேரளா மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றினார் . அவர் காலமானார். பிஆர் கவாய் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமகிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி நிரந்தர நீதிபதியானார். அதன்பிறகு 15 ஆண்டுகள் வரை மும்பை, நாக்பூர், ஔரங்காபாத், பானஜி நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.
பிஆர் கவாய் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இதற்கு முன்பு பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் பொறுப்பு வகித்தார். அதற்குப் பிறகு 2வது நபராக பிஆர் கவாய் அந்தப் பொறுப்பை ஏற்கிறார். பிஆர் கவாய் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகச் செயல்படத் தொடங்கினர். இப்போது அவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பை எட்டியுள்ளார். இவர் பல முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது எனும் தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகள் வழங்கிய அமர்வில் பிஆர் கவாய் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்