முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் தலைக்கேற்ப இட ஒதுக்கீடும் வசமாகுமா? வார்த்தை ஜாலமா !

ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் தலைக்கேற்ப இட ஒதுக்கீடும் 


இது "பாமகவின் முயற்சிக்குக் கிடைத்த பலன்" - என அதன் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் உரிமை கொண்டாடக் காரணம் அவர் மட்டுமே 40 ஆண்டு காலமாக குரல் கொடுத்து வந்த நிலையில் அவருக்கு மட்டுமே  சொந்தம்  கொண்டாட முழு உரிமை உள்ளது.           

சுதந்திர காலத்திற்கு முன்பே மதராஸ் மாகாணத்தில் நடைமுறையிலிருந்த ஜாதி வாரி ஆணையை எதிர்த்து செண்பகம் துரைராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அதன் அடிப்படையில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு ஆணையை ரத்துசெய்தது. மேல்முறை​யீட்டில் அந்தத்தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி​செய்தது. ஜாதி வாரி உரிமையை மீட்டெடுக்க பெரியார் எனும் ஈ.வே.ரா பின்னால் கூடி தமிழ்நாட்டில் திக உள்ளிட்ட சில அமைப்புகள் போராடியது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும், அந்த நாள் முதல்வர் குமாரசாமி ராஜாவும் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த பிரதமர் ஜவஹர்லால் நேருவை வலியுறுத்​தினர்.

விளைவாக, அரசமைப்புச் சட்டம் முதன்​முறை​யாகத் திருத்​தப்​பட்டு, சட்டப்​பிரிவு 15 (4) சேர்க்​கப்​பட்டது. இப்பிரிவு சமூக.     ரீ​தி​யாகவும் கல்வி​யிலும் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்குக் கல்வியில் இடஒதுக்கீடு தரும் அதிகாரத்தை அரசுக்கு பெற்றுத் தந்தது. அதன்படி தமிழ்​நாடு, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் அதிகாரத்​துக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்​களில் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்கு இடஒதுக்கீடு வழங்கின. குறிப்​பிட்ட தொகைக்கு அதிகமாக வருமானம் பெறும் பிற்படுத்​தப்பட்ட பிரிவினரை கிரீமிலேயர் என்று கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என உச்ச நீதிமன்றம் சென்ற இந்திரா சஹானி வழக்கில் 1992 ஆம் ஆண்டில் தீர்ப்​பளித்தது. இதைப் போன்ற வருமான அடிப்​படையிலான கட்டுப்பாடு பட்டியல் ஜாதிகளுக்​கும், பட்டியல் பழங்குடிகளுக்கும் வந்து​விடுமோ என்கிற ஓர் அச்ச உணர்வு இடஒதுக்​கீட்டு ஆதரவாளர்​களுக்கு எப்போதும் உள்ளது.


‘பஞ்சாப் மாநில அரசு எதிர் தவீந்தர் சிங்’ வழக்கில், ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியில் வெளிவந்​துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் ஜாதிகள், பட்டியல் பழங்குடிகளில் பின்தங்கிய பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு தரலாம் என்றும், அதற்காகப் பட்டியலிலுள்ள ஜாதிகளை​யும், பழங்குடிகளையும் துணைப் பிரிவு​களாகவும் பிரிக்​கலாம் என்றும், அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்றும் கூறுகிறது.




இத்தீர்ப்​பானது, சட்டப்​பிரிவு 341ன் கீழ் உருவாக்​கப்பட்ட பட்டியலில் உள்ள ஜாதிகளை கிரீமிலேயர் என்று அறிவித்து, இடஒதுக்​கீட்டுப் பலன்களில் இருந்து அவர்களை முற்றிலும் விலக்கும் தொடக்கக் காரணி​களைக் கொண்டது என்று சில ஆதிதிராவிடர் அமைப்புகள் கருதுகின்றன. அந்த வகையில் கிரீமிலேயரை விட உள்ஒதுக்கீடு ஆபத்தானது என்றும் கருதுகின்றன. ஏனெனில், தற்போது நடைமுறையில் உள்ள கிரீமிலேயர் இடஒதுக்​கீட்டுப் பலன்களில் இருந்து தனிநபர்களை விலக்கு​கிறது. ஆனால், ஒட்டுமொத்த ஜாதியை கிரீமிலேயர் என்று அறிவிக்கும் ஆபத்தை உள்ஒதுக்கீடு கொண்டுள்ளது என்கின்றனர். உண்மையில் உள்ஒதுக்கீடு தருவதன் மூலம் கிரீமிலேயரை வீழ்த்த இயலும். ஏனெனில், இடஒதுக்கீடு என்ற தத்துவம் கிரீமிலேயருக்கு எதிரானது. பல நூற்றாண்டுகளாக முன்னேறிய வகுப்​பினர் வசமிருந்த சமூக வளங்களைப் பங்கிடும் சட்டவடிவமே இடஒதுக்​கீட்டுத் தத்துவம். 1902 ஆம் ஆண்டில் சாகு மகாராஜின் சமஸ்தானத்தில் அறிமுகம் கண்ட இடஒதுக்​கீட்டுத் தத்துவம், கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்​களைக் கண்டுள்ளது. சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்​கீட்டின் பலன்கள் ஓரளவுக்​காவது சென்று சேர்ந்​துள்ளன.


அதன்விளைவாக, இந்தியச் சமூகத்தின் உண்மையான கிரீமிலேயரான முன்னேறிய வகுப்​பினர், குறைந்த சதவீதம் எண்ணிக்கை இருந்த போதிலும் ‘எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்று கோரி, 103 ஆவது அரசமைப்புச் சட்டத்​திருத்தத்தின் மூலம் பொருளாதார அடிப்​படையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று​விட்​டனர். எவ்வளவு குறைவாகச் செயல்​படுத்​தப்​பட்​டாலும் இடஒதுக்​கீட்டின் மூலம் பலன்கள் உண்டு என்பதற்கான சாட்சியமே அது.

இடஒதுக்​கீட்டின் மூலம் பலன்கள் உண்டாகுமெனில், ஏற்படும் பலன்களை அளவிடுவது அவசியம். அவ்வாறு அளவிட்​டால், உண்மைப் பயனாளி​களை​யும், பயன்பெறாதவர்​களையும் கண்டறிய இயலும். கண்டறிந்த தரவுகளின்படி, இடஒதுக்​கீட்டின் பலன் இதுவரை பயன்பெறாதவர்​களுக்குச் சென்று சேரும் வகையில் பகிர்ந்​தளிக்​கப்பட வேண்டும். அதற்காக இடஒதுக்​கீட்டுக் கொள்கையில் தேவையான மாற்றங்களை, குறிப்​பிட்ட கால அவகாசம் வழங்கிய அளவில் செய்து​கொண்டே இருக்க வேண்டும்.

இதன்மூலம் இடஒதுக்​கீட்டுக் கொள்கை நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆன பின்னரும் சமூகத்தில் பிற்படுத்​தப்பட்ட நிலையில் உள்ளோரைத் தூக்கிவிட இயலும். சமூகப் பின்தங்கிய நிலையின் அடிப்​படையில் வழங்கப்​படும் இடஒதுக்​கீட்டை ஒழித்து​விட்டு, தனிநபர் பொருளாதார அடிப்​படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரும் குறைந்த அளவில் உள்ள முன்னேறிய வகுப்​பினரின் குரல்களை அடக்கவும் இயலும். அரசுப் பள்ளி​களில் பயின்​றோருக்கு வழங்கப்​படும் 7.5 சதவீதம் இடஒதுக்​கீடு, பிற்படுத்​தப்பட்ட பிரிவை இரண்டாகப் பிரித்து உருவாக்​கப்பட்ட மிகப் பிற்படுத்​தப்பட்ட வகுப்​பினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பல உள்ஒதுக்​கீடுகள் தமிழ்​நாட்டில் ஏற்கெனவே செயல்​பாட்டில் உள்ளன. மற்ற மாநிலங்​களிலும் வேறு வகையிலான உள்ஒதுக்​கீடுகள் உள்ளன. இவ்வகை உள்ஒதுக்​கீடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளோருக்குச் சமூக வளங்கள் சென்று சேருவதை உறுதி​செய்​கின்றன.


பல ஆண்டுகளாக வருமானத்தை மட்டும் அடிப்​படை​யாகக் கொண்டு கணக்கிடப்பட்ட வறுமைக்கோடு குறியீடு தற்போது சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்​படை​யாகக் கொண்டு கணக்கிடப்​படும் பல பரிமாண வறுமைக் குறியீடாக விரிவடைந்​துள்ளது.

அதேபோல் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட சமூக வளங்களைப் பகிர்ந்​தளிக்கும் இடஒதுக்​கீட்டுத் தத்துவம், ஜாதியை முக்கியக் காரணி​யாகக் கொண்ட பல பரிமாணக் குறியீடு​களின் அடிப்​படையில் வடிவமைக்​கப்​பட்டு, அது தரும் பலன்களைக் குறிப்​பிட்ட கால அளவில் அளவிட வேண்டும். தேவைப்​படின் தரவுகளின் அடிப்​படையில் மாற்றங்​களைச் செய்ய வேண்டும். ஜாதிகளுக்கு இடையே வேறுபாடு​களும் ஏற்றத்​தாழ்வு​களும் இருக்கும் வரை இடஒதுக்​கீட்டுத் தத்து​வத்தின் முக்கியமான அடிப்படை அலகாக ஜாதி இருக்க வேண்டும். 


இவ்வாறு தொடர்ந்து இடஒதுக்​கீட்டுத் தத்து​வத்தை மறுசீரமைப்புச் செய்வதன் மூலம், உண்மையான கிரீமிலேயர் பிரிவினர் இடஒதுக்​கீட்டின் பலன்களைப் பெறுவதைத் தடுக்க இயலும். ஜாதியைப் புறக்​கணித்து​விட்டு, பொருளாதார அடிப்​படையை மட்டுமே தனித்த அலகாகக் கொண்டு உருவாக்​கப்​பட்டு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கிரீமிலேயர் என்ற தாக்கம் பட்டியல் ஜாதிகள், பழங்குடி​யினர் பாதிப்பு தடுக்க இயலும். இவ்வகை​யில், தகுந்த முறையில் உருவாக்​கப்பட்ட உள்ஒதுக்​கீடுகள் கிரீமிலேயர் என்ற ஆபத்தைத் தடுக்க இயலும்​.           மேலோட்டமாக நடத்தப்படும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு மட்டுமே சமூக நீதியை சமநீதியாக நிலைநாட்டிட உதவாது. எந்தெந்தப் பணிகளில் எந்தெந்த ஜாதியினர் உள்ளனர் அவர்கள் இட ஒதுக்கீடுகள் எப்படி அமைந்துள்ளது என்பதையும் விரிவான முறையில் வெளியிட வேண்டும். இவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தான் நம் நாட்டின் இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இட ஒதுக்கீட்டால் ஒவ்வொரு வருடமும் எந்த ஜாதியினர்  பயன் அடைந்தனர் என்ற வெள்ளை அறிக்கையை சமூக நீதி நிலை அறிக்கையாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டு தான் சமூக நீதி எந்த அளவில் உள்ளது, உரிய முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை மக்கள் கண்காணிக்க முடியும். 


(ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தினாலும் எந்தெந்த ஜாதியினர் எந்தெந்த பணிகளில் உள்ளனர் என்ற புள்ளி விவரங்களை மாநில அரசு தான் வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா என்பது இன்று முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டம் முடிந்த பிறகு தான் தெரிய வேண்டும் அது தான் இங்கு எழுவினா ? அது சாத்தியமில்லை என்பதே பலரும் நினைக்கும் நிலையில்.)பிஹார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால் தான், சந்தர்ப்பவாத நடவடிக்கையாக தற்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின், தெரிவித்தார் “திராவிட மாடலின் வழியே சமூக நீதிக்கான எங்கள் பயணத்தில் திமுகவுக்கும், நாம் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும், இது மற்றுமொரு வெற்றியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.முறையாகத் திட்டங்களை வகுப்பதற்கும், மக்கள்நலத் திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்கும், மெய்யான சமூக நீதியை அடையவும் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்றியமையாததாகும். அநீதிக்குத் தீர்வு காணவேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அறிந்தாக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் மத்தியப் பட்டியலில் 69-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை எதிர்த்த பலரும் இப்போது ஆதரிக்க பலவிதமான காரணங்கள் உண்டு,  பலரும் தங்களுக்கு தெரிந்த வடிவத்தில் ஜாதி ஒழிப்பு பற்றி பேசும் நிலையில் இங்கு இதுவரை இரண்டு பிரிவு தான் முதலில் சலுகைகள் பெற்ற ஜாதி இரண்டாவது  சலுகைகள் பெறாத ஜாதி என்ற நிலையில், பிறர் சலுகைகள் பெற்றதை வேடிக்கை பார்த்த ஜாதியினர் மூன்றாம் வகையாக இங்குண்டு. ஆனால் இரண்டுமே தவறு என்பது பிறகுதான் புரிந்தது.

ஏற்றத்தாழ்வு என்பது ஜாதியை அடிப்படையாகக் கொண்டது. எனவே ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று பலரும் அரசியல் காரணங்களுக்காக பேசி எண்ணி இருந்த பலருக்கும் பிறகுதான் புரிந்தது ஜாதிய ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்கான சமூக நீதியும் ஜாதியை அடிப்படையாகக் கொண்டது தான் என்பது. 

ஜாதி ஒழிப்பு சமூக நீதி ஒழிப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. அதனால் தான்  ஜாதி ஒழிப்பை  தலைவர்கள் பலர் இப்போது ஆதரிப்பதில்லை. அதே நேரத்தில் தீண்டாமை ஒழிப்பை மட்டும் அணைவரும் ஆதரிக்கலாம் . என்பதையும் பதிவு செய்கிறேன். 

ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் ஜாதி மறைப்பு செய்து ஒரு சிலர் சலுகைகளைச் சுரண்டி வாழ்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ சிலர் அரசியல் காரணங்களுக்காக அதற்கு ஆதரவளிக்கின்றனர்.இந்தாண்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இந்தியா ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தும்," என அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCPA) கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் வைஷ்ணவ் நேற்றுக் கூறினார். அத்தகைய ஒரு பயிற்சியின் சர்ச்சைக்குரிய அம்சங்களை ஒப்புக்கொண்டவர்,                       மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நியாயமாகவும் இணக்கமாகவும் நடத்தப்படும் என செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், மேலும் “காங்கிரஸ் அரசுகள் எப்போதும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை எதிர்த்துள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட அனைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளிலும் ஜாதி சேர்க்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டில், அப்போதிருந்த பிரதமர் மறைந்த டாக்டர் மன்மோகன் சிங், அமைச்சரவையில் ஜாதி விவகாரம் பரிசீலிக்கப்பட வேண்டுமென்று நாடாளுமன்ற மக்களவையில் உறுதியளித்திருந்தார். இந்த விஷயத்தை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு (GoM) அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தும் படி பரிந்துரைத்தன. இருப்பினும், காங்கிரஸ் அரசு ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்குப் பதிலாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மட்டுமே நடத்த முடிவு செய்தது. ”இந்திய அரசியலமைப்பின் பிரிவு 246 ன் படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் உள்ள மத்தியப் பட்டியலில் 69 ல் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் படி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது மத்தியப் பொருளாகும்," என அவர் வலியுறுத்தினார்.தேசிய அளவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தை விளக்கிய வைஷ்ணவ், "இதுபோன்ற ஆய்வுகள் சமூகத்தில் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன. இந்த உண்மைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, நமது சமூகக் கட்டமைப்பு அரசியலால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கணக்கெடுப்பில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளுக்கு உடன் வெளிப்படையாக சேர்க்கப்பட வேண்டும்" என்றார்.2025 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். 1951 முதல் 2011 வரை சுதந்திர இந்தியாவில் நடந்த ஒவ்வொரு மக்கள் தொகை கொண்ட கணக்கெடுப்பிலும் உள்ள பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டன, ஆனால் மற்ற ஜாதிகள் பற்றிய தரவுகள் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்பு, 1931 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் ஜாதி பற்றிய தரவுகள் இருந்தன.பிரதமர்நரேந்திர மோடி அரசாங்கத்தின் இந்த முடிவு, ஹிந்து மக்கள் வாக்குகளை ஜாதி அடிப்படையில் பிரிக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சியைத் தடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க முடியும் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீதம் இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க வேண்டும் என காந்தி கோரியுள்ளார். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கோரியுள்ளார். தமிழ்நாட்டில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசு ஜாதிவாரிக் கணக்கெப்பை  எடுக்க வேண்டும். Caste Survey எனப்படும் ஜாதிவாரிக் கணக்கெப்பை எடுத்தால் தான் தமிழ்நாடு மக்களின் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு வசதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Caste survey எனப்படும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை எடுப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு மக்கள் நலத் திட்டங்களைத் தீட்டி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வரலாம்.

மத்திய அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது பாமக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே ஆதரவுக் குரல் கொடுத்த நிலையில் .

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரிக் கணக்கெடுப்போடும்  என அறிவித்துள்ளது இதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது என இதனை எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி, ஆயிரக்கணக்கான கடிதங்கள், சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

மருத்துவர் இராமதாஸ் ராஜீவ் காந்தி தொடங்கி வாஜ்பாய் மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடி வரை பலமுறை பிரதமர்களை சந்தித்து ஜாதி நடந்த வேண்டும் என வாரிக் கொடுத்த வழி வந்த வாரிசுகள் கணக்கெடுப்பு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இப்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு காங்கிரசும் திமுகவும் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

ஆட்சி அதிகாரம் இருந்தபோது திமுக,காங்கிரஸ் இதனைச் செய்யவில்லை.

சுதந்திர இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு மட்டும் தான் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

caste cenஎன்பது வேறு..

கேஸ்ட் சர்வே தமிழ்நாடு அரசுதான் எடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களின் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க Caste Survey அவசியம். அதனை தமிழ்நாடு அரசு தான் எடுக்க வேண்டும். 

உலகத்தில் மொத்தம் 377 சமூகங்கள் இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். இதில் எந்தெந்த சமுதாயங்கள் அதிக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள் எந்தந்த சமுதாயங்கள் இன்னும் இட ஒதுக்கீடு முழுமையாக அனுபவிக்காமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த சர்வே அவசியம்.

உதாரணத்திற்கு மலைக் குறவர்களிடம் வீடு உள்ளதா ?அவர்களில் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் ? அவர்களின் பொருளாதார நிலை எப்படி உள்ளது.. மீனவர்களிடம் எத்தனை படகுகள் உள்ளது? அவர்களில் படித்தவர்கள் எத்தனை பேர் அவர்களின் வாழ்வாதார நிலை எப்படி உள்ளது இவற்றையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு திட்டங்களைத் தீட்ட முடியும்.. அதற்கு கேஸ்ட் சர்வே அவசியம் அதனை தமிழ்நாடு அரசு தான் எடுக்க வேண்டும்.

மத்திய அரசு மைக்ரோ லெவலில் எடுக்கும் மாநில அரசு தான் மைக்ரோ லெவலில் எடுக்க வேண்டும்.. 

யதலையை எண்ணும் வேலையை மட்டும் தான் மத்திய அரசு செய்யும்.நாடார்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள்.. முக்குலத்தோர், வன்னியர்கள், கவுண்டர்கள்  ஆதிதிராவிடர் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத்தான் மத்திய அரசு செய்யும் அதே நேரத்தில் அவர்களின் கல்வி நிலை, பொருளாதார நிலை ,வாழ்வியல் நிலை எப்படி உள்ளது என்பதை அறிய தமிழ்நாடு அரசு தான் சர்வே எடுக்க வேண்டும்.

பொதுவாக ஜாதி வாரிக் கணக்கெடுப்பின்போது 5 கேள்விகள் மட்டும் தான் கேட்பார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு, தெலுங்கானா மாநிலம் போல 75 வகையான கேள்விகளைக் கேட்டு மக்களின் வாழ்வியல் பொருளாதாரம் நிலைகளை 'கேஸ்ட் சர்வே' மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு அதிகாரம் இல்லை என பொய் சொல்லக்கூடாது.. 'இந்திய புள்ளியல் விவரச் சட்டம்' மாநில அரசு கணக்கெடுப்பு நடத்த முழு அதிகாரத்தை கொடுத்துள்ளது. அதன் மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பை எந்த நீதிமன்றமும் ரத்து செய்ய முடியாது என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாகவே தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்டுள்ள , பிற்படுத்தப்பட்ட அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சிலர் மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதில் உள்ள முஸ்லிம், அருந்ததியர், உள்ளிட்ட எவருக்குக் கொடுத்த இட ஒதுக்கீட்டுக்கும் தரவுகள் கிடையாது. அதே நேரத்தில் ஜனார்த்தனன் கமிஷன் வன்னியர்களுக்கு 13 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று சொன்னதால் கணக்கெடுப்பு அவசியம் 

பட்டியலின மக்களும் வன்னியர்களும் அதிகம் வாழும் வட மாவட்டங்களில் 15 மாவட்டங்கள் மிக மிகப் பின்தங்கிய நிலையில் உள்ளது. கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் கடைசி இடத்தில் உள்ளது ஆனால் டாஸ்மாக் விற்பனைகள் மட்டும் இந்த மாவட்டங்கள் முதல் இடத்தில் உள்ளது. 

இந்த வட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் நிலை அறிந்து கொள்ளவும் சர்வே அவசியம். அதனை தமிழ்நாடு அரசுதான் எடுக்க வேண்டும்.அப்போதுதான் அதற்கேற்ப மக்கள் நலத் திட்டங்களை கொடுக்க முடியும்.

தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே சமூகநீதி அக்கறை இருந்தால் பட்டியல் இன மக்கள் உட்பட அனைத்து மக்களும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள கேஸ்ட் சர்வே எடுக்க வேண்டும்.

மாநில அரசுகளே எடுத்துக் கொண்டால் குளறுபடிகள் ஏற்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அப்படி மட்டும் கூறவில்லை சில மாநிலங்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சிறப்பாக எடுத்திரக்கிறார்கள் சில மாநிலங்கள் சரியாக எடுக்கவில்லை என்று சொல்லியுள்ளார்.

உதாரணத்திற்கு 

தமிழ்நாட்டில் SC,ST பிரிவில் 114 ஜாதிகள் உள்ளன. அவற்றில் 36 ஜாதி பழங்குடி மலைவாழ்  மக்கள் எஸ்டி பிரிவில் உள்ளனர். மீதமுள்ள 78 ஜாதியினர் எஸ்சி பிரிவில் உள்ளனர்.

 ஒரு நல்ல நிர்வாகி என்ன செய்ய வேண்டும். எஸ்.சி., எஸ்டி பிரிவினருக்கு  19 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுக்கிறோம். இந்த 19 சதவீதத்தில்  எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள் ? எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை..? என்பதை அறிந்து கொள்ள தரவு வேண்டும்.அதற்கு கேஸ்ட் சர்வே எடுக்க வேண்டும். 

MBC/DNC-யில் 115 ஜாதிகள் உள்ளன.அவர்களில் எந்த ஜாதி அதிகமாக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறது எந்த ஜாதிக்கு இட ஒதுக்கீடு மிகக் குறைவாகக் கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ள நமக்கு தரவுகள் வேண்டும் அதை தமிழ்நாடு அரசு தான் எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 377 ஜாதியினர் அனுபவிக்கிறார்கள். அவர்களில் எந்தெந்த ஜாதிகளில் அதிக அளவில் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்கள் இன்னும் எந்தெந்த சமுதாயம் இட ஒதுக்கீட்டை முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்ற விவரங்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசு சர்வே எடுக்க வேண்டும். எடுத்தால் தான் அந்த மக்களின் கல்வி பொருளாதாரம் உள்ளிட்ட நிலைகள் தெரியவரும் அதன் மூலமாக எஸ்ஸி, எஸ் டி மக்களுக்கும் இன்னும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்க முடியும். இதுவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்துஇதில் பொது நீதி யாதெனில்:- ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தும் போது அடிப்படை பொருளாதாரக் கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் அப்போது தான் பாஜகவின் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் கிடைக்கும். இப்போது சலுகைகள் பெறும் ஜாதியினர் மற்றும் சலுகைகள் பெறாத ஜாதியினர் என்ற இரண்டு நிலையில் அதில் உள்ள பல்வேறு பிழைகள் நீக்கப்பட்டால் தான் இந்த தேசத்தின் சமத்துவக் கொள்கை நிலைபெறும் . கல்விக்கு தகுதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வேண்டும் பணிக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வேண்டும் என்பதை எந்த அரசியல் கட்சியும் இங்கு பேசாது என்பதே உண்மையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...