அனைத்து வித விசாரணையும் தீவிரமாக மேற்கொண்டு தான் ஜாதிச் சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
பாங்க் ஆப் பரோடா வங்கியின் உதவிப் பொது மேலாளர் ஜீவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எங்கள் வங்கியில் இடஒதுக்கீடு
அடிப்படையில் ஏராளமான ஊழியர்கள் ஜாதிச் சான்றிதழ்களைக் கொடுத்து வேலைக்கு சேர்கின்றனர். அவர்கள் தரும் ஜாதிச் சான்றிதழ்கள் பல போலியாக உள்ளன எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் விதமாக போலி ஜாதிச் சான்றிதழ் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் நடத்தி விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பாங்க் ஆய்வுக் குழு ஆனால் இந்த குழு இது பற்றி குறித்து காலத்துக்குள் விசாரித்து, உறுதி செய்வது கிடையாது. இதன் காரணமாக, எங்கள் வங்கியின் ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே, ஜாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய கால அளவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்" என பாங்க் ஆப் பரோடா வங்கியின் மேலாளர் ஜீவன் கூறிய மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அமர்வில் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரை பொறுத்தவரை, போலிச் ஜாதிச் சான்றிதழ் கொடுத்து இட ஒதுக்கீடு இடத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள்
மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம் ஜாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மையை மாநில அளவிலான குழு உறுதி செய்வதில்லை. அந்த விசாரணைக்கு போலியான ஜாதிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பது கிடையாது. இதனால் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது. விசாரணையை முடிக்கும் காலத்தை நிர்ணயிக்க இந்த உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. அது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்திருக்கிறோம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, இடஒதுக்கீட்டுக் கொள்கையின் புனித்தன்மையையும், பொதுநலனையும் பாதுகாக்கும் விதமாக, போலி ஜாதிச் சான்றிதழ் புகாரை குறித்த நேரத்தில் விரைவாக விசாரித்து முடிக்க மாநில ஆய்வுக்குழுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும்.மேலும், போதுமான எண்ணிக்கையில் மாநில ஆய்வுக்குழுக்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உருவாக்க வேண்டும். அதுமட்டுமல்ல அனைத்து விதமான விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு, இறுதியில் தான் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதனால், இந்த விவகாரம் குறித்து தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர் பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்" இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தெரிவிக்கிறது.
கருத்துகள்