இளநிலை மருத்துவக் கல்விக்கு நடந்த நீட் தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடந்தது. மருத்துவப் படிப்புக்கு
சேர் வேண்டுமென்றால் நீட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும். இளநிலை மருத்துவர் படிப்பு, முதுநிலை மருத்துவர் படிப்பு ஆகியவற்றுக்கு தனித்தனியாக நீட் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும்
மொத்தம் 23 லட்சம் மாணவ, மாணவியரும் தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியரும் நீட் நுழைவுத் தேர்வை எழுதினர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி காரைக்குடி உள்ளிட்ட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதில் சென்னையில் 40 மையங்கள் அமைக்கப்பட்டன. தென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மட்டும் நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.
மாலையில் 5 மணிக்கு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவ-மாணவிகளின் கருத்து இது :- "கடும சோதனைக்குப். பிறகு தான் மாணவ-மாணவிகள் நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வு கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த முறை நீட் தேர்வு என்பது கடினமாக இருந்ததாகவும், இந்த முறை இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மாணவர் ஒருவர் கூறும்போது, ‛‛நான் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளேன். இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது. உயிரியல் பாடத்திட்டம் தொடர்பான கேள்விகள் எளிமையாக இருந்தது. வேதியியல் பாடத்திட்டம் தொடர்பான கேள்விகள் ஓரளவு தெரிந்து இருந்தது. கடந்த முறையை விட இந்த முறை கடினமாக தான் இருந்தது'' என்கிறார்.
மாணவி ஒருவர் கூறுகையில், ‛‛நான் முதல் முறையாக நீட் தேர்வு எழுதினேன். எனக்கு இயற்பியல் கஷ்டமாக இருந்தது. வேதியியலும் ஓரளவு கடினமாக தான் இருந்தது. உயிரியல் பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. அந்த கேள்விகள் எளிமையாக இருந்தது'' என்றார். அதேபோல் பெரும்பாலான மாணவ-மாணவிகள் இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். விதிமுறைகள் சரியாக படித்து அதன் படி வந்த மாணவமணிகள் கடும் சோதனை எதுவும் இல்லை, விதிமுறைகள் குறித்து சரியான விபரம் படிக்காமல் வந்த நிலையில் நகை மற்றும் உடைக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகினர்.
மருத்துவர் பணி சேவைத் தொழிலாக இருந்த காலத்தில் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு ஆர்வம் காட்டவில்லை தற்போது மருத்துவர்கள் கார்ப்பரேட் லெவலில் பணம் குவிக்கும் நிலையில் மக்களில் பலரும் தங்கள் பிள்ளைகளை மருத்துவம் படிக்கத் தூண்டும் நிலையில் தான் இந்த போட்டி நடக்கிறது அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரி பல இப்போதே பேரத்தைத் துவங்கி நடத்தும் நிலை வருகிறது போட்டி அதிகரித்தது உள்ள நிலையில் வியாபாரம் எனும் முறையில் லஞ்ச ஊழல் அதிகரிக்கும் இது எதார்த்த நிலை. இன்று தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை விட அவர்கள் பெற்றோர் தான் அதிகம் ஆர்வம் காட்டியதை நாம் உணர்ந்தோம். கல்வி வியாபாரம் தடுக்க வந்த நீட் சாமானிய மக்கள் கனவு நீட் தேர்வு மையங்களில் நடக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது."கல்வி என்பது லாபம் ஈட்டும் தொழில் அல்ல. கல்விக் கட்டணம் எப்போதும் மலிவு விலையில் இருக்க வேண்டும்": தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை ஏழு மடங்கு உயர்த்த வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அட்வான்ஸ் புக்கிங் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை ஏழு மடங்கு அதிகரித்து ஆண்டுக்கு ரூ.24 லட்சமாக ஆந்திரப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் போது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அளித்த பிரதிநிதித்துவங்களின் பேரில் கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற அரசு உத்தரவு 'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது
கருத்துகள்