தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கவிதா (வயது 50) ஆசிரியர்.
இவர் சிக்கார்த்தனஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக தொடர்ந்து பணியை மேற்கொள்வதில் ஆசிரியை கவிதாவுக்கு சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து . மருத்துவக் குழு பரிந்துரைப்படி கவிதா (VRS) விருப்ப ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தனக்குச் சேரவேண்டிய வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடை ரூபாய்.29 லட்சத்து 22 ஆயிரத்து 384-ஐ பெறுவதற்கு தர்புமரி மாவட்ட கருவூலத்துறையில் விண்ணப்பித்தார்.
இந்தத் தொகையை வழங்குவதற்கு சென்னை முதன்மை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால் பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் பணப் பலன்கள் பெறுவதற்கு அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கவிதாவின் மகன் அவினாஷ், அங்கு கூடுதல் சார்நிலை கருவூல அலுவலராகப் பணிபுரியும் ராமச்சந்திரன் (வயது 42) என்பவரை சந்தித்து பணப் பலன்கள் கிடைக்க உரிய அனுமதி விரைவில் வழங்குமாறு கேட்டுள்ளார். அப்போது ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனுமதி அளிப்பதாக அவர் கூறியதனால் அதிர்ச்சியடைந்த அவினாஷ் லஞ்சம் கொடுக்க விரும்பாததால். இது குறித்து அவர் தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார். அதையடுத்து அவினாஷ் கொண்டு வந்த ரூபாய் நோட்டுகள் அரசு சாட்சிகள் முன்னிலையில் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய நிலையில் ரூபாய் நோட்டுகளை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவினாஷிடம் கொடுத்தனர். நேற்று அந்த அலுவலகத்திற்குச் சென்ற அவினாஷ்
கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் இராமச்சந்திரனிடம் அந்த ரூபாய். பத்தாயிரத்தை கொடுத்திருக்கிறார்.அப்போது அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜ், ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் லஞ்சம் பெற்ற இராமச்சந்திரனை பணம் பெற்ற கையுடன், பிடித்தனர். அதைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். லஞ்சம் பெற்ற வழக்கில் பாலக்கோடு கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
கருத்துகள்