தங்க நகைக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.
விதிமுறைகளை வெளியிட்டது. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பலரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு இப்பொழுது ரிசர்வு வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் வருமாறு;
1.தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.
2.ரூபாய்.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85 சதவீதம் ஆக உயர்த்தப்படும்.
3.ரூபாய்.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
4.முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.
இது எளிய மக்கள் நலனுக்கான நடவடிக்கை தான்
முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துகள்