தபால் துறையில் நவீனமாக்கலின்
ஒரு பகுதியாக செப்டம்பர் மாதம்.,
முதல், பதிவுத் தபால் ஒப்புதல் அட்டை சேவை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு, தபால் ஊழியர்கள் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனதபால் துறையில் சாதாரண தபால் அனுப்பும் போது அது போய் சேர்ந்ததா, இல்லையா என உறுதிசெய்ய முடியாது. அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுத் தபால் முறை நல்ல வரவேற்பை பெற்றது.இந்த முறையின்படி, தபால் உரியவரிடம் சேர்ந்ததும், அவர் கையெழுத்துடன் ஒப்புகைச் சீட்டு நம் கைக்கு வந்துவிடும். தபாலின் எடையைக் கணக்கிட்டு பதிவுத் தபாலுக்கு கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, உடனடியாக 'டெலிவரி' என்ற அடிப்படையில் ஸ்பீடு போஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும், பதிவு தபால் போன்றது என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.பதிவுத் தபாலை விட ஸ்பீடு போஸ்ட் முறைக்கு தான் தற்போது வரவேற்பு அதிகம் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாதம் முதல் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. அதுபோல் ரயில் மெயில் சேவையும் ரத்தாகிறது.
இனி, இந்தியாவிற்குள் தரை வழியாக மட்டுமே தபால்கள் பிற மாநிலங்களுக்கு பட்டுவாடா செய்யப்பட உள்ளது. பதிவு தபால், ஆர்.எம்.எஸ்., சேவை ரத்துக்கு தபால் ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பரிவர்த்தனை இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், பயன்பாட்டில் உள்ள மென்பொருளை, புதிய தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தும் பணிகள் ஆகஸ்ட் மாதம்., 2 ஆம் தேதி முதல் நடக்கவுள்ளன.
அன்று ஒரு நாள், அனைத்து தபால் அலுவலகங்களிலும், சிறுசேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பது, முதலீடு செய்வது போன்ற எந்தவிதமான பணப் பரிவர்த்தனைகளும், விரைவு தபால், பதிவு தபால், ஆதார் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் செய்ய இயலாது என, தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சேவைகளுக்குத் தான் அரசு ஆனால் சமீப காலமாக கல்வி, மருத்துவம், சாலை வசதி, குடிநீர் எல்லாம் விலையான நிலையில் அஞ்சல் வசதியும் மாறுகிறது... மக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், அலுவலகத்தில் நடக்கும் மோசடி நீதிமன்றத்தில் அம்பலப் படுத்தல் போன்ற நிகழ்வுகளில் இதுவரை பதிவுத் தபால் மிகவும் உபயோகமாக இருந்த நிலையில் தற்போது தந்தி மற்றும் அஞ்சல் அட்டை போல மறைந்து போவது தான் மக்கள் பக்கம் அரசு இல்லை என்பது தெளிவாகிறது. அரசாங்கம் என்பது மக்களின் அங்கம் அது வாங்கவும் விற்கவும் வந்த கிழக்கிந்தியக் கும்பெனி அல்ல இது மக்கள் அரசாங்கத்தின் செயல் என்பது பலருக்கும் வேதனை.
கருத்துகள்