சிவகங்கை பா.ஜ.க.கட்சி சார்ந்த நபர் கொலை 4 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர் பின்னர் ஏழு நபர்கள் கைது.
சிவகங்கை நகர் காவலர் குடியிருப்பு அருகில் உள்ள யாரச்சந்தை அருகே மெக்கானிக் கடை நடத்தியவருக்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார் பாஜகவில் சதீஷ் குமார் நகர் வர்த்தகப் பிரிவில்
தலைவர் பொறுப்பை இவருக்கு தகுதி இல்லாத நிலையிலும் கொடுத்துள்ளனர். தினமும் இலரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மது குடிக்கும் வழக்கம் கொண்டவர். நேற்றிரவு வேலை முடித்துவிட்டு சதீஷ்குமார் அவரது கூட்டாளிகள் மெக்கானிக் கடையில் மது குடித்தனர். அதே பகுதியில் இறந்த வீடுகளில் தாரை தப்பட்டை வாசித்து பிழைக்கும் கும்பல் சிலர் தங்கியிருந்தனர். அவர்களும் மது குடித்தனர் போதை முற்றிய நிலையில் அந்தக் கும்பல் சேர்ந்த சிலர் சதீஷ் தரப்பைச் சேர்ந்தவர்களிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர்
இது கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.
இதில் சதீஷின் நண்பரான
மனிபாரதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அந்த கும்பல் தாக்கியபோது சதீஷ் குமார் தடுக்க முற்பட்டார். உடனே எதிர்தரப்பினர் அவரைக் கீழ தன்னியதில் விழுந்த போது அவர் மயக்கமடைந்தார். இந்த மோதல் குறித்து தகவலறித்த சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைநதிருந்த மணி பாரதி மற்றும் சதீஷை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது சதிஷ் குமார் எனும் நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிபாரதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவாங்கை நகர் காவல் நிலையத்தில்
வழக்குப்பதிவு செய்து சிலரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இவர்களது அறைக்கு அருகில் உள்ள அறையில் டிரம்செட் வாசிக்கும் ஏரியூர் வடவன்பட்டி சேகர் மகன் செந்தமிழ்செல்வன் (வயது 19), திருப்புத்துார் தாலுகா புதுக் காட்டாம்பூர் கல்லுவெட்டி மேடு அருகில் குறிஞ்சிநகர் குணசேகரன் மகன் ஆனந்த் (வயது 19), மதுரை மாவட்டம், பட்டூர் மாயழகன் மகன் அன்பரசன் (வயது 25), கருப்பையா மகன் பூபதி என்ற வாண்டு (வயது19), இவரது சகோதரர் கண்ணன்( வயது 20), ஆகியோர் தங்கி உள்ளனர். தலைமறைவான ஒருவரைத் தேடுகின்றனர். இந்த நிலையில் தற்போது ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அவர் கட்சி பணிக்காக கொல்லப்பட்டாரா என்றால் மட்டுமே இதில் கட்சி பெயர் அணைத்து இதழ்களில் ஊடகங்களில் வரவேண்டும் அவர் குடித்து தகராறு காரணமாக கொலை நடந்த நிலையில் இது தனிப்பட்ட நிகழ்வாகவே தெரிகிறது தான்.
இது குறித்து காவல்துறை வெளியிட்ட சிறப்பு அறிவிப்பில் சிவகங்கை நகர் காவல் நிலைய சரகததில் சிவகங்யைச் சேர்ந்த மெக்கானிக்
சதீஷ் குமார் கொலை குறித்து விசாரணை நடந்து
வருகிறது. இது தொடர்பாக சந்தேக நபர்களை காவல்துறை அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிப்படையான மேற்படி சம்பவத்தில் எந்தவொரு ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை என முதவ் கட்ட விசாரணையில் தெரிய வருவதாகவும்
இந்த சம்பவத்தில் எந்தவொரு தனிப்பட்ட கட்சி, மதம் மற்றும் ஜாதி ரீதியான நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை.
விசாரணை முடிவிலும் பிரேதப் பரிசோதனையின் முடிவிலும் மேற்படி இறந்த நயரின் இறப்பு குறித்த உண்மைத் தன்மை வெளிவரும் என தெரியப்படுத்தப்படுகிறது
. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கை உட்கோட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து முழுமையான தகவல் அளிக்கும் வரை இது தொடர்பான தகவல்கள் எதும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதையடுத்து செந்தமிழ்செல்வன், ஆனந்த், அன்பரசன், வாண்டு, கண்ணன் ஆகியோரை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணையில் தற்போது ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கருத்துகள்