முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீனா அதிபருடன் பாரதப் பிரதமர் இருதரப்பு சந்திப்பு

சீனா அதிபர் ஜி ஜின்பிங்குடன் பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு 


சீனாவின் தியான்ஜினில் இன்று (2026 ஆகஸ்ட் 31)  நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

அக்டோபரில் கசானில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல எனவும் வளர்ச்சி கூட்டாளிகள் என்றும், வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் அவர்கள் கூறினர். பரஸ்பர மரியாதை, பரஸ்பர ஆர்வம், பரஸ்பர உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு நிலையான உறவும் ஒத்துழைப்பும் உள்ளது எனவும், இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும், 21-ம் நூற்றாண்டின் போக்குகளுக்கு ஏற்ப ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு, எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். கடந்த ஆண்டு வெற்றிகரமாக படைகள் விலக்க நடவடிக்கை நடைபெற்றதையும், அதன் பின்னர் எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவி வருவதையும் இரு தலைவர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். இருதரப்பு உறவுகளும் இரு நாட்டு மக்களின் நீண்டகால நலன்களும் முக்கியம் என அவர்கள் கூறினர். அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண உறுதிபூண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளும் தங்கள் பேச்சுவார்த்தைகளில் எடுத்த முக்கியமான முடிவுகளை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். தொடர்ச்சியான முயற்சிகளை ஆதரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரையையும், சுற்றுலா விசா நடைமுறையையும் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நேரடி விமானங்கள், விசா வசதிகள் மூலம் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். பொருளாதார, வர்த்தக உறவுகளில், உலக வர்த்தகத்தை வலுப்படுத்துவதில் இரு நாடுகளின் பொருளாதாரங்களின் பங்கை அவர்கள் அங்கீகரித்தனர். இருதரப்பு வர்த்தக, முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் அரசியல் ரீதியாகவும், உத்திசார் முறையிலும் முயற்சிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இந்தியாவும் சீனாவும் உத்திசார் சுயாட்சியைப் பின்பற்றுகின்றன என்றும், அவற்றின் உறவுகளை மூன்றாம் நாடுகளின் பார்வையில் பார்க்கக்கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதம் எதிர்ப்பு, நியாயமான வர்த்தகம் போன்ற பலதரப்பு விஷயங்களிலும், இருதரப்பு, பிராந்திய, உலகளாவிய சவால்கள் தொடர்பாகவும் பொதுவான நிலையை விரிவுபடுத்துவது அவசியம் என்று இரு தலைவர்களும் கூறினா்.

சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவத்திற்கும் தியான்ஜின் உச்சிமாநாட்டிற்கும் பிரதமர் ஆதரவு தெரிவித்தார். 2026-ம் ஆண்டு இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பிற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த சீன அதிபர் திரு ஜி ஜின்பிங், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்திற்கு சீனாவின் ஆதரவை வழங்குவதாகக் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவின் நிலைக்குழு உறுப்பினர் திரு காய் குய்-அவர்களையும் பிரதமர் சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்த தமது தொலைநோக்குப் பார்வையை திரு காய் குய்-யுடன் பிரதமர் பகிர்ந்து கொண்டார். மேலும் தொலைநோக்குப் பார்வைகளை நனவாக்க அவரது ஆதரவைக் கோரினார். இரு தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்கு ஏற்ப இருதரப்பு பரிமாற்றங்களை விரிவுபடுத்தவும், உறவுகளை மேலும் மேம்படுத்தவும் சீனத் தரப்பு விரும்புவதாக திரு காய் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...