பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர்,
மனைவியும் காலஞ்சென்ற பிரபல மூத்த நடிகைமான சிவகாசி ஏ. ஸ்ரீ தேவி 1988 ஆம் ஆண்டு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) வாங்கிய நிலத்தின் மீது சம்மந்தமே இல்லாமல் மூன்று நபர்கள் சட்டவிரோதமாக உரிமை கோருவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் திங்கட்கிழமை ஆகஸ்ட் 25, 2025 மூன்று பேருக்கும் ஆதரவாக மோசடியாக பெறப்பட்ட சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழை ரத்து செய்ய திரைப்படத் தயாரிப்பாளர் சோனிக் கபூர் தாக்கல் செய்த மனு மீது நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு போலியாக சான்றிதழ் வழங்கிய தாம்பரம் வருவாய் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி, ஏப்ரல் மாதம் 22, ஆம் தேதி 2025 அன்று தாம் அளித்த மனுவைத் தீர்த்து வைக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தாம்பரம் வருவாய் வட்டாட்சியர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் சோனிக் கபூர் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்யும் போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.வழக்கின் பின்னணியை செய்தியாளர்களிடம் விளக்கிய போனி கபூர் நீதிமன்றத்தில், அவரது மனைவி ஸ்ரீ தேவி ஏப்ரல் மாதம் 19, ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு அன்று அந்த சொத்தை வாங்கியதாகவும், அதன் பின்னர், அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தற்போது பண்ணை வீடாகப் பயன்படுத்தப்படும் சொத்தை முழுமையாகக் கையகப்படுத்தி அனுபவித்து வருவதாகவும் கூறினார்.
இந்த நிலம் முதலில் எம்.சி. சம்பந்த முதலியார் என்ற நபருக்குச் சொந்தமானதென்றும், அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்ததாகவும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடும்ப உறுப்பினர்கள் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, 1960 ஆம் ஆண்டு அன்று சொத்தைப் பிரிப்பது தொடர்பாக ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீதேவி சொத்தை வாங்கி விற்பனைப் பத்திரத்தை முறையாகப் பதிவு செய்தார். இருப்பினும், திடீரென்று, மூன்று நபர்கள், முதலியாரின் மூன்று மகன்களில் ஒருவரின் இரண்டாவது மனைவி என்றும் இரண்டு குழந்தைகள் என்றும் கூறி, சொத்தில் தங்களுக்கும் பிரிக்கப்படாத பங்கு இருப்பதாக வாதிடத் தொடங்கினர். 2005 ஆம் ஆண்டு தாம்பரம் தாசில்தாரிடமிருந்து உரிமை கோருபவர்கள் சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழைப் பெற்றதாகக் கூறி, அசல் நில உரிமையாளரின் குடும்பத்தினர் தாம்பரத்தில் இல்லாமல் மைலாப்பூரில் வசிக்கும் போது, அத்தகைய சான்றிதழை வழங்க வருவாய் அலுவலரின் அதிகார வரம்பைக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இரண்டாவது மனைவி பிப்ரவரி மாதம் 5, ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு அன்று திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவதை சுட்டிக்காட்டிய மனுதாரர், முதல் மனைவி ஜூன் மாதம் 24, ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு அன்று இறந்துவிட்டதால், அதை சட்டப்பூர்வத் திருமணமாகக் கருத முடியாது என்று கூறினார். எனவே, மூன்று நபர்களையும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் வகுப்பு-1 அல்லது வகுப்பு-2 சட்டப்பூர்வ வாரிசுகளாக வகைப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழின் மோசடி அடிப்படையில் சொத்துக்கு உரிமை கோருவதற்காக, பல சிவில் வழக்குகளைத் தொடுத்து, வருவாய் அலுவலர்களை அணுகி, மூவரும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருவதாக புகார் அளித்த போனி கபூர், அந்தச் சான்றிதழை விரைவில் ரத்து செய்யுமாறு அலுவலர்களை வலியுறுத்தினார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கினார். கடந்த, 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என்று கூறி வருகின்றனர். முதல் மனைவி உயிரோடு இருந்த போது, தன்னை திருமணம் செய்து கொண்டதாக, சந்திரசேகரின் இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால், மூவரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாகக் கூற முடியாது. முதல் மனைவி உயிருடன் உள்ள போது இரண்டாம் மனைவி திருமணம் செல்லாது எனவே, சிவகாமி, நடராஜன்,
சந்திரா பானு, ஆகிய மூவரும் மோசடியாகப் பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் வருவாய் தாசில்தார் ஆகியோரிடம் அளித்த விண்ணப்பத்தை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். என கூறப்பட்டுள்ளது.இந்த மனு, WP/32169/2025 நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டு, மனுவை, நீதிபதி முடித்து வைத்தார் போலி ஆவணங்கள் மூலம் போனி கபூர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்துள்ளார்" - என சிவகாமி என்பவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் சிவகாமி என்பவர் அளித்துள்ள பேட்டியில், காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவி வாங்கிய நிலத்தை விற்க போனி கபூருக்கு தடை விதிக்க வேண்டும் என் தாத்தாவின் 5 வாரிசுகளில் ஒருவரான ராணியம்மாளின் வாரிசுகள், பிற வாரிசுகளுக்குத் தெரிபடுத்தாமல், சென்னை இ.சி.ஆரில் உள்ள 1.34 ஏக்கர் நிலத்தை 1988-ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவிக்கு விற்றுள்ளனர். இதில் முறையாக ஆவணங்கள் இல்லாததால் ஸ்ரீதேவியால் 35 ஆண்டுகளாக பட்டா மாற்ற முடியவில்லை.
ஸ்ரீதேவி காலமான பின் போலி ஆவணங்களை பயன்படுத்தி போனி கபூர் பட்டா மாற்றியுள்ளார் என அவருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவர், செய்தியாளர்களிடம் கூறினார்.



கருத்துகள்