தமிழ்நாட்டில் காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால்
நாளைஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். மற்றொரு இயக்குனராக உள்ள, தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தின் தலைவரான சைலேஷ் குமார் யாதவும் நாளை பணி ஓய்வு பெறுகிறார்.
இருவருக்கும் பணிநிறைவுப் பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழாவாக சென்னையில் நேற்று நடைபெற்றது. காவல்துறை உயர் பொறுப்பினர் மற்றும் ஓய்வு பெற்ற உயர் காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றுப் பாராட்டினர். இருவரும் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதை ஏற்றுக் கொண்ட பின்னர் சங்கர் ஜிவால் நன்றி தெரிவிததுப் பேசினார்.
நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குனர்கள், பிரமோத்குமார், சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியப் பெருமாள், வெங்கடராமன், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் அருண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஓய்வு பெறும் தலைமைக் காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர், பொறியியல் படிப்பை முடித்தவர் 1990 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள ஐபிஎஸ் ஆவார்.
முதலில் மன்னார்குடி உதவிக் காவல் கண்காணிப்பாளர் சேலம், மற்றும் மதுரை மாவட்டக் கண்காணிப்பாளர், திருச்சிராப்பள்ளி மாநகரில் காவல் ஆணையர், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர், உளவுப்பிரிவு இயக்குனர், காவல்துறை த்தலைவர், சிறப்பு அதிரடிப்படை கூடுதல் இயக்குனர் என காவல்துறையில் பல விதமான பொறுப்புக்களை வகித்தவர். அயல் பணியாக மத்திய அரசிலும் 8 ஆண்டுகள் பணியாற்றினர் .சென்னையில் 108-வது காவல் துறை ஆணையராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றி சிறந்த பணிக்காக இரு முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகள் இரண்டு முறை காவல்துறை இயக்குநர் பொறுப்பு வகித்த சங்கர் ஜிவால் நாளையுடன் பணிஓய்வு பெறும் நிலையில் தீ மற்றும் உயிர் மீட்பு பணிகளில் புதிய தொழில் நுட்ப நுணுக்கங்களை செயல்படுத்தும் நோக்கமாக தீ பரவல் தடுப்பு ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அதற்கு தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்து அரசு உத்தரவு வந்துள்ளது.
அவர் வகித்த டிஜிபி பணிக்காலம் இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் நிர்வாகப் பிரிவு டிஜிபியான வெங்கடராமன், நாளை முதல் சட்டம்-ஒழுங்கு பொறுப்பையும் கூடுதலாகக் கவனிக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
HOPF சங்கர் ஜிவால் திடீரென வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு பணி முடித்து விட்டு போகவில்லை. அவர் ஆகஸ்ட் மாத இறுதியில் ஓய்வு பெற போவது முன்பே தெரியும். உச்ச நீதிமன்றம் பிரகாஷ் சிங் வழக்கில் சொன்ன வழிகாட்டுதல் படி புதிய HOPF தேர்வுக்கான அங்கிகரிக்கப்பட்டவர்களின் பட்டியலை 3 மாதம் முன்னரே UPSC க்கு அனுப்பி வைத்திருக்கவேண்டும்.
ஆனால் மாநில அரசு இதுவரை அனுப்பாமல் இப்போது தான் பட்டியலை அனுப்ப போகிற நிலையில். அது நிறைவடைய ஒரு மாத காலமாகும் அதுவரை பொறுப்பு HOPF ஐ நியமிக்க உள்ளதாகவும்
1990 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள சீமா அகர்வால்,
1992 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள ரத்தோர், ராஜிவ்குமார், வன்னிய பெருமாள்,
1994 ஆம் ஆண்டு பட்டியலில் உள்ள மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் உள்ளனர்.
இந்த 8 பேர் வரிசைப் பட்டியலைத்தான் அனுப்ப வேண்டும் சங்கர் ஜிவால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது புது HOPF நியமித்தே ஆகவேண்டும் என்கிற நடைமுறை செயல்பாட்டுக்கு வரவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்த போது ப்ராசஸ் ஆன் கோயிங் என சொல்லிய அரசு.
ஆனால் வெங்கட்ராமன் தான் பொறுப்பு டிஜிபின்னு ஒரு மாதம் முன்னரே செய்தி ஊடகங்களில் தகவல் கிளப்பி விடப்பட்டு அதற்கு ஊடகங்கள் தயாராகிறார்கள். எங்கள் இதழ் தான் முதலில் செய்தி வெளியிடப் பட்டது எனச் சொல்கிறார்கள். அதில்தான் பெருமையே. ஆனால் ஊடகங்கள் யாரும் இந்த நடைமுறை மீறல் குறித்து வாய்த்திறக்கவே இல்லையே ஏன்? நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் முதலமைச்சருடன் டிஜிபி சங்கர் ஜிவால் சந்திப்பு நடந்தது இதையடுத்து புதிய பதவி வழங்கப்பட்டது. அடுத்த காவல்துறை இயக்குநர் யார் என்பது குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக யூகத்தின் அடிப்படையில் தற்போது டிஜிபிக்களில் சீனியர்களாக உள்ள சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ்குமார், அபய் குமார் சிங் உள்ளிட்டோர்களில் ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறி வந்தனர்.
வழக்கமாக டிஜிபியை நியமிக்க வேண்டும் என்றால் 3 மாதத்திற்கு முன்பு, தகுதியான 10 பேரின் பட்டியலை ஒன்றிய உள்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎஸ் உயர் அலுவலர்களாக உள்ளவர்களின் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். பின்னர் உள்துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தற்போதைய டிஜிபி ஆகியோர் கலந்து கொள்வார்கள். அந்தக் கூட்டத்தில் தகுதி வாய்ந்த 3 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு அரசு அந்த 3 பேரில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும்.
தற்போது டிஜிபி அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டியில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வாங்கடே, சஞ்சய்குமார் மாத்தூர், டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகிய 10 பேரின் பட்டியல் தமிழ்நாடு உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்துறையில் விளக்கம் தேவைப்படுவதால் நிறுத்தி வைக்கப்பட்டது
இதனால் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை மத்திய அரசு தேர்வு செய்ய வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு பட்டியல் மத்திய உள்துறைக்கு அனுப்பாததால், அவர்கள் தேர்வு செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், சீமா அகர்வால் நேர்மையானவர். ஆனால் சட்டம் ஒழுங்கு பதவியில் நீண்ட நாட்கள் இல்லாதவர். ஆனால் ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் சட்டம் ஒழுங்கை சரியாக கையாளாமல் சரிய விட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதனால், நிரந்தர டிஜிபிக்கள் நியமிக்கப்படாமல், தற்காலிக டிஜிபியாக ஒரு நேர்மையான, நிர்வாகத்தில் திறமை வாய்ந்த ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய முடிவு செய்தது.
அதன்படி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி பதவிக்கு வருவது யார் என்பது குறித்து வெளியான அனைத்து யூகங்களையும் பொய்யாக்கும் வகையில், தற்போது தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பூர்வீகமானவர்வெங்கட்ராமன். 8.5.1968 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். பிஏ (பொருளாதாரம்), எம்ஏ (பொது நிர்வாகம்) முடித்துள்ளார். பின்னர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு கேடரில் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் உயர் அலுவலராகத் தேர்வானார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழி சரளமாகப் பேச மற்றும் எழுதக்கூடியவர்.
வெங்கட்ராமன், காவல் துறையில் சிறந்த அனுபவத்தைக் கொண்டவர். சைபர் குற்றம், கண்காணிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர் என அறியப்படுகிறது. நாளையே புதிதாக தற்காலிக டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின்றன. மேலும் முதல்வர் 30 ஆம் தேதி இன்று வெளிநாடு செல்கிறார். இதனால் அதற்கு முன்னதாக அதாவது 29 ஆம் தேதி புதிய டிஜிபி பதவி ஏற்பார் எனத் தெரிகிறது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.
. அதேநேரம், தற்போது டிஜிபிக்களாக உள்ளவர்களில் அபய்குமார் சிங் வருகிற ஜனவரி மாதம் ஓய்வு பெறுகிறார்.31.08.2023 ஆம் ஆண்டிலேயே சிபிசிஐடி தலைவராக ஜி வெங்கட்ராமன் ஐபிஎஸ் பொறுப்பில் இருந்தார். சட்டவிரோத மெத்தனால் கடத்தலின் ஆபத்துகள் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த சட்டவிரோத மதுபானக் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு, ஜூலை 2024 ல் வெங்கட்ராமன்
சிபிசிஐடியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.“ தமிழ்நாட்டில் டிஜிபி பொறுப்பேற்று பார்த்திருப்பீங்க.. பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்று பார்த்திருக்கீங்களா..? ” சீனியாரிட்டியில் 9-வதாக உள்ள ஒருவருக்கு எப்படி இந்த பதவி வழங்க முடியும்..? அவருக்கு முன்னாடி உள்ள 8 போலீஸ் அதிகாரிகளும் அந்த பதவி ஏற்பு விழாவுக்கு போகவில்லை.. இப்படி இருந்தால் காவல்துறை எப்படி விளங்கும்..? என பாஜக தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார்











கருத்துகள்