முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகவேல் எம் ஆர். ராதாவின் 6 வது மனைவியும் நடிகை ராதிகா மற்றும் நிரோஜா தாயாருமான கீதா காலமானார்

நடிகவேல் எம் ஆர். ராதாவின் 6 வது மனைவியும் நடிகை ராதிகா மற்றும் நிரோஜா தாயாருமான கீதா காலமானார்.


நடிகை ராதிகாவின் அம்மா கீதா ராதா  இலங்கையைச் சேர்த்தவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) இரவு 9.20 மணிக்கு காலமானார்.இறுதி சடங்குகள் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் அபார்ட்மெண்டில் தொடங்கி பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு சரஸ்வதி, தனலட்சுமி, பிரேமாவதி, ஜெயம்மாள்,பேபிராதா, கீதா என 6 மனைவிகள்  மொத்தம் 12 குழந்தைகள் அதில் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு, நடிகர் ராதாரவி, நடிகை ராதிகா, மற்றும் நடிகை நிரோஷா ஆகியோர் பிரபலமாக அறியப்பட்டவர்கள்  குழந்தைகள்:



எம்.ஆர்.ஆர்.வாசு, ராதா ரவி, ராதிகா, நிரோஷா, ராணி, ராஜூ, மோகன், தமிழரசு, ராசியா,ஜெயவள்ளி, ரதிகலா, உள்ளிட்ட பிள்ளைகள் உண்டு,

எம்.ஆர்.ராதாவின் குடும்பம் பெரிய கலை சார்ந்த குடும்பம்,பலரும் தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவர்கள். எம். ஆர். ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சென்னையில் பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் நாயுடு ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம். ஆர். ராதா. இவர் ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாளுக்கு 2ஆவது மகனாகப் பிறந்தாா்.  ராஜகோபாலன் ரஷ்யாவில்  ராணுவவீரராகப் பணிபுரிந்த போது ரஷ்யாவின் எல்லையான பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார். ராதாவிற்கு ஜே. ஆர். நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா எனும் தம்பியும் இருந்தனர்.



1967 ஆம் ஆண்டு, ஜனவரி  மாதம் 12 ஆம் தேதி எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்தக் கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் 12 ஆம் தேதி முதல் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் 27 ஆம் தேதி வரை சிறையிலிருந்தார். அப்பொழுது இராதாவின் மகளான ராணி (என்ற) ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் கலந்துகொள்ள முடியவில்லை. கு. காமராஜரின் தூண்டுதலின் பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, உறவினர் என்பதால் ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.இராதாவிற்கு சரஸ்வதி, தனலட்சுமி, பிரேமாவதி, ஜெயமால், பேபி அம்மாள் ஆகிய மனைவிகளுக்கு பிறகு இலங்கைக்கு சென்று ஆறாவதாக கீதா என்பவரைத் திருமணம் செய்தார் இவர்களுக்குப் பிறந்தவர் தான் நடிகை ராதிகா மற்றும் நடிகை இவரது  தற்போதய கணவர் நடிகர் சரத்குமார்,  நடிகை நிரோஜா இவருடைய கணவர் நடிகர் ராம்கி ஆவார்.



நடிகவேல்  
எம்.ஆர்.ராதா பேரனும் நடிகருமான வாசு விக்ரம்  சென்னையில் 20 ஆண்டுக்கு முன்பிருந்தே நம்முடைய நண்பர் ஒரு கருத்தைக் கூறுவார். அது ஆச்சரியமல்ல. உண்மை

, "என் தாத்தாவுக்கு 8 மனைவிகள். எல்லாரும் 2 கட்டிக்கிட்டே திண்டாடுறாங்க. அதுவும் ஒரே வீட்ல வச்சிப் பார்த்துக்கிட்டாரு. 20 பசங்கள பெத்து ஒரே வீட்டுல வச்சி சமாளிச்சார் 100 பேருக்கு  சர்கஸ் கூடாரம் போல தினமும் சமையல் நடக்கும். 6 கார், 2 வேன் இருந்தது. தாத்தா பிள்ளைகளுக்கு சொத்தை சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தார்.



திருச்சிராப்பள்ளியில் 43 வீடுகளை ஒரே இடத்தில் கட்டினார். அவற்றை எல்லாம் பராமரிக்க முடியாததால விற்றுவிட்டோம். சித்தப்பா ராதாரவி வீடு தான் எங்களுக்கு தலைமையிடம்.  தாத்தா இறந்த 5 வருஷத்துல அப்பாவும் இறந்துட்டாரு. தாத்தா பற்றி எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வந்த அப்புறம் தான் தெரிஞ்சிக்கிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.மறைந்த நடிகர் எம் ஆர் ராதா  அவர்களின் ஆறாவது துணைவியார் கீதா இலங்கை பரதவர் (srilanka bharatha) சமூகத்தைச் சேர்ந்தவர். ராதிகாவின் சகோதரர் ராஜு. இவர்  இலங்கையின் வெண்ணப்புவா(Wennappuwa,) பகுதியைச் சார்ந்தவர் .


நடிகை ஜோஸ்னா பெர்னாண்டோ வின் தந்தை, ஸ்டான்லி பெர்னாண்டோ, எம். ஆர். ராதாவின் மனைவியின் சகோதரர்( ராதிகாவின் தாய் மாமன் மகள்), எனவே ஜோஷ்னா ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் உறவினர்.

ராதிகாவின் டெலி திரைப்படமான சிறகுகள் (1999) படத்தில் ஜோஷ்னா தனது நான்கு வயதில் அறிமுகமானார்.


கே.பாலசந்தரின் மரோ சரித்ரா (1978) மற்றும் வாலியின் வடமலை (1982) ஆகியவற்றில் தோன்றிய முன்னாள் நடிகை சரோஜா இவரது தாய்

இலங்கை பரதா சமூகமும் தமிழகத்தில் உள்ள பரதவர் சமூகமும் ஒரே இனக்குழு என்று 1947 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை எண்ணிக்கை பதிவு உறுதி செய்கிறது! இலங்கை சிங்களத் திரைப்படத்தில் ஆரம்ப காலத்தை  வண்ணமயமாக்கிய  நடிகை  தான் ரீட்டா டோரின் பெர்னாண்டோ எனும் கீதா, 

1953 ஆம் ஆண்டு "புதும லெலி" எனும்


சிங்களத்  திரைப்படத்தில் அறிமுகமான ரீட்டா டோரின் பெர்னாண்டோ எனும் கீதா  "எகமத் எக ரடக"  படத்தில் முக்கிய கதாநாயகி வேடத்தில்  நடித்தார் மற்றும் "தஸ்கோன், சன்சாரே என்ற திரை படங்களில் நடித்தார். 

ரீட்டா டோரின் பெர்னாண்டோ தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகரான எம்.ஆர். ராதாவை மணந்தார். ரீட்டா டோரின் பெர்னாண்டோ ஒரு இலங்கைத் தமிழ் பெண்.

ரீட்டா டோரின் பெர்னாண்டோ எனும் கீதா  

இலங்கை சினிமாவின் ஆரம்ப காலத்தை வண்ணமயமாக்கிய திரைப்பட நட்சத்திரம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...