முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதம் மாறிய பின்னர் ஜாதிச்சலுகை பெற்ற பேருராட்சித் தலைவர் பதவி பறிப்பு செல்லும் உயர் நீதிமன்றம் அமர்வில் தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் சுசீந்திரம் அருகிலுள்ள


தேரூர் பேரூராட்சி மன்றம்


சுமார்.9.64 ச.கி.மீ. பரப்பளவும், 15 வார்டுகளையும், 35 தெருக்களையும் கொண்டது கன்னியாகுமரி சட்டமன்றபேரவைத் தொகுதி க்கும், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2,148 வீடுகளும், 7,615 மக்கள்தொகையும் கொண்டது. இந்த பேரூராட்சிக்கு கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கைப்பற்றிய நிலையில் அதன் தலைவரான இரண்டாம் வார்டு (தனி) போட்டியிட்டு அமுதாரானி பிறப்பால் பட்டியல் ஜாதி சார்ந்த நபர் வெற்றி பெற்றார் மதம் மாறிய நிலையில் பட்டியல் ஜாதி என மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மதம் மாறிய பின்னர் பட்டியல் சார்ந்த ஜாதிச் சான்றிதழை ஏற்று பதவி ஏற்ற நிலையில் அது சட்ட ரீதியாக செல்லாது என்பதால் 

தேரூர் பேரூராட்சி மன்றத் தலைவியை  தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 

2022-ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி வார்டு எண் 2 -ல் (பட்டியல் ஜாதி தனி) அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அவர், தான் ஒரு பட்டியல்  சார்ந்த ஜாதிச் சான்றிதழ் வழங்கி பேரூராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏற்றார்.




2005-ஆம் ஆண்டில் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளார் கிறிஸ்தவ மத  முறைப்படி திருமணம் செய்தார். எனவே அவர் பட்டியல் சமுதாயத்தவருக் கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது. அமுதா ராணியை தேரூர் பேரூராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட வேண்டும் என எட்டாவது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந் தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, ஒரே நேரத்தில் இரு வேறு சலுகை களை அனுபவிப் பது அரசியலமைப்புச் சட்டத்தை ஏமாற்றும் செயல். எனவே தேரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து அமுதா ராணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அமுதாராணி, மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநா தன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது இதை சுயாதீன வழக்காக மாற்றி. SUO MOTU TR(MD)1501/2025 ஆக விசாரணை நடத்தி முடிவில் நீதிபதிகள் 




அமுதா ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டு ஞானஸ்தானம் பெற்று உள்ளார். ஒருவர் தனது மதத்திலிருந்து வேறொரு மதத்துக்கு மாறுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. அதே நேரம் அவர் சலுகைகளை அனுபவிப்பதற் காக பட்டியல் ஜாதியைச் சேர்ந்தவர் என சான்றிதழ் வழங்கியது ஏற்புடைய தல்ல. செல்லத்தக்கதல்ல 

இந்த விவகாரத்தைப் பொறுத்த வரை தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டு இந்த மேல்முறையீட்டு மனு தள்ளு படி செய்யப்படுவதாக

 நீதிபதிகள் உத்தரவிட்டனர்.   மதம் மாறிய பின்னர் பட்​டியலினப் பிரி​வினருக்​கான இடஒதுக்​கீட்​டுப் பலனைப் பெற முடி​யாது இந்த ​நிலை​யில், கிறிஸ்​தவ​ரான அமு​தா​ராணி, தான் ஹிந்து பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர் என கூறி சான்றிதழ் கொடுத்து தேர்​தலில் போட்​டி​யிட்​டு, வெற்றி பெற்​றார். இது சட்​ட​விரோத​மானது. எனவே, தேரூர் பேரூ​ராட்​சித் தலை​வ​ராக உள்ள அமு​தா​ராணி​யின் பட்​டியலின சாதிச் சான்​றிதழை ரத்து செய்​து, அவரைத் தலை​வர் பதவி​யிலிருந்து தகுதி நீக்​கம் செய்து உத்​தர​விட வேண்​டும். என அய்யப்பன் மனு​வில் கூறி​யிருந்​தார்.இந்த மனுவை தனி நீதிபதி விக்​டோரியா கௌரி விசா​ரித்​து, “இந்து பட்​டியல் வகுப்​பைச் சேர்ந்த ஒரு​வர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்​தவர் ஒருவரை திரு​மணம் செய்​து​கொண்​டதற்கு அனைத்து ஆவணங்​களும் உள்ள நிலை​யில், பட்​டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என்று கூறி வேட்​பு

மனுத் தாக்​கல் செய்​த​போதே, அவரது வேட்​புமனுவை தேர்​தல் அலுவலர் தகுதி நீக்​கம் செய்​திருக்க வேண்டும். ஒரு​வர் ஒரே நேரத்​தில் இரு சலுகைகளை அனுபவிக்​கக் கூடாது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்தை ஏமாற்​றும் செய​லாகும். எனவே, அமு​தா​ராணியின் தலை​வர் பதவி தகுதி நீக்​கம் செய்​யப்பட வேண்​டும்” என்று உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து அமுதா​ராணி மேல்​முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமி​நாதன், கே.​ராஜசேகர் மர்வில் 

இந்த வழக்​கின் உண்​மை​யான பிரச்​சினை அமு​தா​ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்​றுக்​கொள்​கிறா​ரா, அவர் ஞானஸ்​நானம் பெற்​றாரா என்​பது​ தான். மனு​தா​ரர் ஞானஸ்​நானம் பெற்​றுக்​கொண்​டது உறு​திப்​படுத்​தப்​படு​கிறது. ஒரு​வர் ஒரு மதத்​திலிருந்து மற்ற மதத்​துக்கு மாறு​வது என்​பது அரசி​யலமைப்​பின் அடிப்​படை உரிமை​யாகும்.




ஆனால், ஞானஸ்​தானத்​துக்​குப் பிறகு புதிய அடையாளத்தை மறைத்​து, அரசி​யலமைப்​புச் சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​களை அனுபவிக்​கும் நோக்​கத்​துக்​காக, பட்​டியல் இன சமூக நிலை​யில் தொடரும்​ போது சிக்​கல் ஏற்​படு​கிறது.

இந்த வழக்​கில் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர் கிறிஸ்தவ மதத்​தைத் தழுவியுள்​ளார் என்​பது ஆதா​ரங்​களு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, தனி நீதிப​தி​யின் உத்​தரவு உறுதி செய்​யப்​பட்​டு, மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​வதாக உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்.ஆனால் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் பேர் அமுதாராணி போல போலி சான்றிதழ் பெற்று பணியில் இருக்கும் நிலையில் இந்த உத்தரவு அணைவருக்கும் பொருந்துமா என ற நிலை வந்தால் தான் இதுபோன்ற தவறுகள் தொடராது.மதம் மாறிய பின்னர் எந்தவொரு உண்மையான நம்பிக்கையும் இல்லாமல், பெரும்பாலும் இடஒதுக்கீட்டுப் பலன்களை மட்டுமே பெறுவதற்காக பொய் கூறி இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூக நெறிமுறைகளைத் தோற்கடிப்பதாகவும்,




அரசியலமைப்பை ஏமாற்றுவதாகவும் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச கிறிஸ்துவப் பெண்மணி, தான் ஹிந்து மதத்தைத் தழுவியதாகக் கூறி, பட்டியல் ஜாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.


பட்டியல் ஜாதி ஒதுக்கீட்டில் அரசு வேலை பெறுவதற்கான ஒரு மறைமுக நோக்கத்தால், ஹிந்து மதத்திற்கான அவரது கூற்று தூண்டப்பட்டதென்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.  இருப்பினும், நீதிமன்றம் ஒரு கள ஆய்வு சரிபார்ப்பை நம்பியிருந்தது, அது மேல்முறையீட்டாளரின் பெற்றோரின் திருமணப் பதிவு 1872 ஆம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் கீழ் தெளிவாகவே வெளிப்படுத்தியது. அவர் கிறித்தவ ஞானஸ்நானம் பெற்று தொடர்ந்து தேவாலயத்திற்குச் சென்று வந்தார்.

ஹிந்து மதத்தைப் பின்பற்றுவதாக அவர் கூறுவது அதிகபட்சமாக "சாந்தமானது" என்று நீதிமன்றம் கூறியது. அவர் ஹிந்துவாக மாறியதாகக் கூறுவதை நிரூபிக்க, ஆர்ய சமாஜம் மூலம் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி மதமாற்றம் செய்வது உள்ளிட்ட, ஒரு நேர்மறையான செயல் கூட இல்லை. வாய்மொழி அல்லது ஆவண ஆதாரங்கள் அவளை ஆதரிக்கவில்லை.

"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அரசியலமைப்பின் 25 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதன் படி, ஒவ்வொரு குடிமகனும் தனக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றவும், அதை அறிவிக்கவும் உரிமை உண்டு. ஒருவர் வேறு மதத்திற்கு மாறுகிறார், அதன் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் ஆன்மீக எண்ணங்களால் அவர்கள் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டால். இருப்பினும், மதமாற்றத்தின் நோக்கம் பெரும்பாலும் இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவதாக இருந்தால், ஆனால் மற்ற மதத்தின் மீது உண்மையான நம்பிக்கையுடன் இல்லாவிட்டால், அதை அனுமதிக்க முடியாது, ஏனெனில் அத்தகைய மறைமுக நோக்கத்தைக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்களை நீட்டிப்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூக நெறிமுறைகளை மட்டுமே தோற்கடிக்கும்," என்று நீதிபதி பங்கஜ் மித்தல் தலைமையிலான அமர்வு கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது நீதிபதி ஆர். மகாதேவன்.கடந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பட்டியல் ஜாதிச் சான்றிதழையும் ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோருவதற்காக மதமாற்றம் செய்வதும் சமூகத்தின் மீது செய்யப்படும் மோசடி தான் எனக் கூறியது.

கேரளா உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு, நீதிபதி மகாதேவன், ஒரு நீதிமன்றத்தால் மத நம்பிக்கையின் நேர்மையை சோதிக்கவோ அல்லது அளவிடவோ முடியாது அல்லது ஒரு நபரின் நம்பிக்கையின் ஆழத்தை அளவிடவோ முடியாது அல்லது அது ஒரு அறிவார்ந்த நம்பிக்கையா அல்லது அறியாமை மற்றும் மேலோட்டமான கற்பனையா என்பதை அளவிட முடியாது என்று மேற்கோள் காட்டினார்.

"ஆனால், ஒரு நீதிமன்றம் தங்கள் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் ஆண்களின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய முடியும், மேலும் ஒரு வழக்கின் சூழ்நிலையிலிருந்து ஒரு போலி மதமாற்றம் உண்மையில் மேலும் சில நோக்கங்களுக்கான வழிமுறையாக இருந்ததா என்பதைக் கண்டறிய முடியும்" என நீதிபதி மகாதேவன் தீர்ப்பில் எழுதினார்.2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உற்பத்தி ஆன சீக்கிய , பௌத்தம், சமணம், வைகுந்தர் வழி, மெய் வழிச்சாலை வழி உள்ளிட்டவை  அல்லாத பிற மதங்களுக்கு மாறிய வர்களுக்கு பட்டியல் ஜாதிகள் கொண்ட (SC) அந்தஸ்தை நீட்டிக்க முடியுமா என்பதை ஆராய, முன்னாள் இந்திய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ்  டாக்டர். ரவீந்திர குமார் ஜெயின் மற்றும் யுஜிசி உறுப்பினர் பேராசிரியர். சுஷ்மா யாதவ் ஆகியோர் அடங்கிய இந்த ஆணையம், இரண்டு ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் பணியை மேற்கொண்டது.

மத மாற்றத்திற்குப் பிறகு பட்டியல் ஜாதிகள் சந்திக்கும் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு ஆகியவற்றை ஆய்வு செய்வது ஆணையத்தின் பணிகளில் அடங்கும். இந்த மாற்றங்கள் அவர்களை SC பிரிவில் சேர்ப்பதை நியாயப்படுத்துகின்றனவா என்பதையும் இது ஆராயும். கூடுதலாக, மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தொடர்புடைய பிற பிரச்சினைகளையும் ஆணையம் ஆராயலாம். தற்போது, ​​அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, 1950, ஹிந்து, சீக்கிய மற்றும் பௌத்த சமயங்களுக்கு மட்டுமே SC அந்தஸ்தை வழங்குகிறது. ஆரம்பத்தில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட இந்த உத்தரவு, 1956 ஆம் ஆண்டில்  சீக்கியர்களையும், 1990 ஆம் ஆண்டில் பௌத்தர்களையும் சேர்க்கத் திருத்தப்பட்டது.


பட்டியல் ஜாதி முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை எஸ்சி பிரிவில் சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 1996 ஆம் ஆண்டில், ஒரு அரசாங்க மசோதா வரைவு செய்யப்பட்டது, ஆனால் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக ஒருபோதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பட்டியல் பிரிவு கிறிஸ்தவர்கள் பட்டியல் சாதி (SC) பிரிவிலிருந்து விலக்கப்படுவது வரலாற்று மற்றும் சட்ட விளக்கங்களிலிருந்து உருவாகிறது. இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தின் (RGI) படி, பாரம்பரியமாக ஹிந்து மற்றும் சீக்கிய சமூகங்களுடன் தொடர்புடைய தீண்டாமை நடைமுறையால் சமூக குறைபாடுகளை எதிர்கொள்ளும் ஜாதிகளுக்கு SC அந்தஸ்து குறிப்பாக வழங்கப்படுகிறது. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு SC அந்தஸ்தை விரிவுபடுத்துவது நாடு முழுவதும் SC மக்கள்தொகையை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று RGI எச்சரித்துள்ளது.

2001 ஆம் ஆண்டில், RGI 1978 ஆம் ஆண்டு ஒரு குறிப்பை மேற்கோள் காட்டியது, அதில் பட்டியல் பௌத்தர்களைப் போலவே இஸ்லாமியம் அல்லது கிறிஸ்தவத்திற்கு மாறிய பட்டியல் ஜாதிகளும் ஒற்றை, ஒருங்கிணைந்த ஜாதியை விட பல்வேறு ஜாதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை, அவர்களை "ஒற்றை இனக்குழு" என்று வகைப்படுத்துவதைத் தடுக்கிறது என்று RGI வாதிட்டது, இது அரசியலமைப்பின் பிரிவு 341 ன் பிரிவு (2) இன் கீழ் SC பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான ஒரு தேவையா எனவும் 

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட போதிலும், இந்த சட்ட மற்றும் நிர்வாக நிலைப்பாடு, பட்டியல் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எஸ்சி அந்தஸ்திலிருந்து விலக்கப்படுவதை நிலைநிறுத்தியுள்ளது.மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அதற்கான நடவடிக்கைகளை அணைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் துவங்க வேண்டும் இதில் பொது நீதி யாதெனில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு தாக்கல் ஆனால் தீர்ப்பு இன்னும் சட்டரீதியாக அமையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...