காஞ்சிபுரம் காவல் துணைக் கணகாணிப்பாளருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட முதன்மை நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்ததாக இருக்காது' எனத், தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்,
அவர் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் விசாரணை அறிக்கையை, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கொண்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் (விஜிலன்ஸ்) குழுவுக்கு அனுப்பும் படி உத்தரவிட்டது. காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காவலராகப் பணிபுரியும் லோகேஷ்வரன் ரவி. அவரது மாமனார் சிவகுமார் பூச்சிவாக்கம் கிராமத்தில், அடுமனைக்' கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியல் இணத்தின் முருகன் என்ற நபருக்கும் இடையே, ஜூலை மாதத்தில் தகராறு ஏற்பட்ட சம்பவத்தில், முருகன் அடுமனைக் கடையின் கண்ணாடி மீது கல் எறிந்த நிலையில் சிவகுமாரின் மருமகனான லோகேஷ்வரன் முருகனிடம் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக வாலஜாபாத் காவல் நிலையத்தில் சிவகுமார், லோகேஷ்வரன் ரவி உட்பட, நான்கு பேர் மீது புகார் செய்யப்பட்டது
.பழங்குடி மற்றும் பட்டியல் சமூக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை. என்பதையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.செம்மல், துணைக் கண்காணிப்பாளர், சங்கர் கணேஷை கைது செய்ய பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக, காவலர் லோகேஷ்வரன் ரவி, காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பணி ஆய்வாளர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், துணைக் கண்காணிப்பாளரை சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவு, காவலர் லோகேஷ்வரன் ரவியை ஊருக்குள் நுழையக் கூடாது என பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் (விஜிலன்ஸ்) பதிவாளர் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அறிக்கையை பார்வையிட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மாவட்ட முதன்மை நீதிபதிக்கு எதிராக காவல்துறை சார்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, இது உறுதிப்படுத்துகிறது. எனவே, விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட விஜிலன்ஸ் குழுவின் நடவடிக்கைக்காக, உயர்நீதிமன்ற பதிவுத் துறை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி, தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவது உகந்ததாக இருக்காது என்பதால், அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்க, விசாரணை அறிக்கையை பணியிட மாற்றக் குழுவுக்கும் அனுப்ப வேண்டும். என நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் நீதிபதி செம்மல்
கவிஞர் பழமலய், மகனாவார் பிப்ரவரி மாதம் 3,ஆம் தேதி 1943 ஆம் ஆண்டு அன்று, விழுப்புரம் அருகே உள்ள குழுமூரில், தங்கவேல் படையாட்சி-குஞ்சம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை குழுமூர் ஊராட்சி மன்றத் தொடக்கப் பள்ளியில் படித்தார். சிதம்பரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் (எம்.பில்) பட்டம் பெற்றார். கவிஞர்
பழமலய், கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய நகரங்களில் உள்ள அரசுக் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து, 2001-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். மனைவி உமா ஆசிரியை. பிள்ளைகளில் ப.உ. லெனின்; ப.உ. செம்மல்; ப.உ. தென்றல் (மகள்). ஆகியோர் ஆகும்




கருத்துகள்