ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக கோவிலுர் மடதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை
தமிழ்நாட்டில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினராக கோவிலுர் மடலாயத்தின் ஸ்ரீலஸ்ரீ நாராயண தேசிக சுவாமிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது
ஆகம விதிகள் கொண்ட கோவில்களைக் கண்டறியும் குழுவின் உறுப்பினர் ஜெ.முருகவேலின் நியமனத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகம விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கோரி அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோவில்களையும், ஆகமமற்ற கோவில்களையும் கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவுக்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்தது. அத்துடன் ஆகமம் அல்லாத கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஆகம விதிகளைப் பின்பற்றும் மற்றும் பின்பற்றாத கோவில்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற ஜெ.முருகவேலின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை முடிவில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்தக்குழு உறுப்பினராக ஜெ. முருகவேலின் நியமனத்துக்கு மனுதாரர் மட்டுமின்றி குழுவின் தலைவரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளதால் அவரது நியமனத்தை நாங்களும் நிராகரிக்கிறோம். எனவே முருகவேலுக்குப் பதிலாக அக்குழுவின் உறுப்பினராக காரைக்குடி கோவிலூர் மடாலயத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயணஞான தேசிக சுவாமிகளை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்கிறோம்’’ என உத்தரவிட்டுள்ளனர். சைவமும் தமிழும் உயர்ந்து விளங்கிய சிவநெறி வளர்த்த நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில்(சோழநாட்டில் இருந்து பாண்டியநாட்டில் புலம் பெயர்ந்த தமிழ் வழி மகுட வைசியர்) 1818-ஆம் ஆண்டில் வேதாந்தத்தை தமிழில் பயிற்றுவிக்க ஒரு வேதாந்த மடத்தை சீர்வளர்சீர் முக்தி ராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் பழைய மதுரை ஜில்லா அமராவதி தாலுகாவாக கோவிலூர் இருந்த போது உறுவான மடாலயம் அதன் பின்னர் இராமநாதபுரம் ஜில்லா எழுவன் கோட்டை தாலுகா அதன்பின் திருப்பத்தூர் தாலுகா இப்போது காரைக்குடி தாலுகா கோவிலூரில் உருவாக்கினார். ஞானமார்க்கத்தில் ஈடுபட மனப்பக்குவமே தகுதி எனவும், வேதாந்தத்தில் நிறைவு பெற ஜாதி, மதம், குலம் சம்பிரதாயங்கள் தடையில்லை என்றும்,கூறப்பட்ட போதும் (நகரத்தார் வழி வந்த துரவறம் பெற்றவரே மடாதிபதி) இருந்த போதும் பக்தியே முக்திக்கு வழி என்றும் உபதேசித்தார். இவர் மூலம் பல அன்பர்கள் வேதாந்தம் கற்றுத் தேர்ந்தனர். இவர் அனைவராலும் ஆண்டவர் என்று அன்புடன் அழைக்கப்பெற்றார். வேதாந்த வடமொழி நூல்களை எல்லோரும் எளிதாகப் படித்துப் பக்குவம் பெறவேண்டும் என விரும்பினார், எனவே அவரே வடமொழி நூல்களை யெல்லாம் தமிழில் மொழி மாற்றம் செய்து எளிய தமிழில் பாடம் சொல்லும் முறையை ஏற்படுத்தினார்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இது திருவுடையார்பட்டி அல்வது "கழனிவாசல்" என்று அழைக்கப்பட்டது. இங்கே பாண்டிய மன்னர் திருப்பணி செய்து காலம் கடந்து பாழடைந்த நிலையில் இருந்த திருநெல்லை நாயகி உடனாய கொற்றவாளீசுவரர் திருக்கோயிலை1818- ஆம் ஆண்டில் கோவிலூர் ஆண்டவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ முக்தி ராமலிங்க ஞானதேசிக சுவாமிகள் சீர்திருத்தி, புணரமைத்து வேதாந்த மடாலயத்தையும் நிறுவி தமிழில் வேதாந்த நூல்களையும் ஞான வாசிட்டம் முதலியவற்றையும் கற்பிக்கத் தொடங்கினார். கோவிலை மையமாக வைத்து ஊர் உருவானதால் அது முதல் இது கோவிலூர் என அழைக்கப்படுகிறது]கோவிலூர் மடாலயம்
வேதாந்தத்தை தமிழில் கற்பிப்பதன் மூலம், ஞான மார்க்கத்தில் உள்ள கோவில் அமைந்துள்ள பகுதியில் கல்வி நிலையங்களும் இயங்கி வருகின்றது




~2.jpg)
கருத்துகள்