"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்....,
மற்றும் "ஏடு தந்தானடி தில்லையிலே...' "அம்பிகையே ஈஸ்வரியே எனை ஆளவந்த .....என பக்தி மனம் கமழும் அற்புத பாடல்களை தந்த பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன், இன்று காலமானார் சென்னையில் முதலில் அவர் வசித்து வந்த எல்டாம்ஸ் சாலை இல்லத்தில் நாம் பலமுறை சந்தித்த நம் பகுதி பாடலாசிரியர் காலமானார். அவருக்கு வயது 90.
சிவகங்கை மாவட்டம், ஆரூர் வட்டகை நாட்டில் மாசாத்தியார் வாழ்ந்த ஒக்கூர் அருகில் கீழப்பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவரின் பெயர் முருகவேல் காந்தி. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். ஊர் பெயரையும் முன்னால் இணைத்து... பூவை செங்குட்டுவன் என்ற பெயர் கொண்டார். 1967 ஆம் ஆண்டு முதல் பாடல்கள் எழுதி வந்தார். அதில் பெரும்பாலானவை பக்தி பாடல்கள். ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.சென்னை, பெரம்பூர், ரமணா நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு பூவை தயா, ரவிச்சந்திரன் என்ற இரு மகன்களும், கலை செல்வி, விஜய லக்ஷிமி என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர். அவர் எழுதிய பாடல்கள் வரிசையில் தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்) ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்) இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா) நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி ) ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா) - அனைத்துப் பாடல்கள்காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)காலம் எனக்கொரு (பௌர்ணமி), வானம் நமது தந்தை (தாகம்)திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை)திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம்)வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி)அவர் பெற்ற விருதுகள்கலைமாமணி விருதுகண்ணதாசன் விருது 2010- கவிஞர்கள் திருநாள் விருது2021- மகாகவி பாரதியார் விருது பெற்ற முக்குலத்தில் பிறந்த பக்குவமும் நிறைந்த எக்குலமும் போற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் பழைய இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கை தாலுகா கீழ்ப்பூங்குடியில்
இராமையாஅம்பலம் - லட்சுமி அம்மாள் தம்ப திக்கு மகனாகப் பிறந்தவர் முருகவேல் காந்தி.
கீழப்பூங்குடி திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆரம்பக் கல்வியையும், அதன்பின் ஓராண்டுகள் ரங்கூனில் உள்ள வெள்ளைச்சாமி பள்ளியிலும், நமது பெறிய தாத்தா மேட்டுப்பட்டி அ.நடராஜன் நண்பராக விளங்கினார்
அதன்பின் சிவகங்கை மன்னர் மேனிலைப் பள்ளியிலும் முருகவேல் காந்தி பயின்றார்.
சிவகங்கை மன்னர் மேனிலைப் பள்ளிக்கு மிகச் சிறந்த வரலாறு உண்டு.
பேராசிரியர் நா.தர்மராஜன், கவிஞர் முத்துலிங்கம் போன்ற பிற்காலத்தில் பிரபலமடைந்த பலரும் சிவகங்கை மன்னர் மேனிலைப் பள்ளியில் பயின்றவர்கள்தான்.
முருகவேல் காந்தி தமிழ்ப் பற்றினால்,
தனக்கு ஊரின் பெயர் இணைத்து 'பூவை செங்குட்டுவன்' என்ற புனைபெயரைச் சூடிக் கொண்டார்.
திரையுலகில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன், ஆரம்ப காலங்களில் நாடகங்களை எழுதினார்.
இவருடைய நாடகங்களுக்கு அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் மு. கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இயக்குனர் ஏ.பி.நாகராஜன், கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் தலமையேற்று வாழ்த்தினர்.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை - இது
ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை"
- படம் : புதிய பூமி
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின்எல்லை" - படம் : அகத்தியர்
"இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்"
- படம் : வா.ராஜா வா
"திருப்பரங்குன்றத்தில் நீசிரித்தால் - முருகா
திருத்தணிமலைமீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும் - உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்"
- படம் : கந்தன் கருணை
"திருப்புகழைப் பாடப்பாட
வாய்மணக்கும்
எதிர்ப்புகளை முருகாஉன்
வேல்தடுக்கும்"
- படம் : கௌரி கல்யாணம்
"வணங்கிடும் கைகளின்
வடிவத்தைப் பார்த்தால்
வேல்போல் இருக்குதடி!"
- படம் : கற்பூரம்
ஏடு தந்தானடி தில்லையிலே - அதைப்
பாட வந்தேன்அதன் எல்லையிலே"
- படம் : இராஜராஜ சோழன்
போன்ற ஆயிரக்கணக்கான அற்புதப்
பாடல்களைத் திரைப் படங்களுக்கும்
இசைத் தட்டுகளுக்கும் எழுதிக் குவித் தவர் கவிஞர் பூவை செங்குட்டுவன்.
தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருது,
'மகாகவி பாரதியார் விருது' ஆகிய விருதுகள் கவிஞர் பூவை செங்குட்டுவன் பெற்ற விருதுகளில் குறிப்பிடத் தக்க விருதுகளாகும்.
இன்று 12. ஆம் தேதி பிப்ரவரியில் ஆண்டு தோறும் பிறந்தநாள் கவிஞர் பூவை செங்குட்டவன் அவர்கள் இன்று காலமானாலும் பல தெய்வீகப் பாடல்கள் மூலம் காலத்தால் வாழ்வார் அவரை நாம் மாலைப் செய்தி அலுவலகத்தில் சந்தித்த இறுதி அனுபவம் மூலம் இப்பூவுலகில் இருந்து காலமான இப் பூவை கவிஞருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அஞ்சலி



கருத்துகள்