சி.பி.ஐ., விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் த.வெ.க., வினர் தாக்கல் செய்த மனு மீது அக்டோபர்., 3 ஆம் தேதி விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் மக்கள் பலியான சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்
த.வெ.க., வினர் தாக்கல் செய்த மனு மீது அக்டோபர்., 3 ஆம் தேதியில் பட்டியலிடப்பட்டு விசாரணை நடத்தும்.
தவெக தரப்பு சி.பி.ஐ., விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க த.வெ.க.,வின் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு நேற்று வந்தனர். தசரா விடுமுறை காரணமாக மனுவை அவசரம் மனுவாக முன் கூட்டி விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுத்தது.
மனுவில் கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த இச்சம்பவம், 'திட்டமிட்ட சதி' என த.வெ.க., தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
அக்கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கரூர் கூட்டத்தில் காவலர்கள், அரசியல் கட்சியினர் துணையுடன், குண்டர்கள் திட்டமிட்டு இச்சம்பவத்தை நடத்தியுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொண்டர்கள் மீது செருப்பு, கற்கள் வீசப்பட்டன. தடியடி நடத்தினர்.
கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நோயாளி இல்லாத ஆம்புலன்சை வேண்டுமென்றே கூட்டத்தின் நடுவே செல்ல காவலர் அனுமதித்தனர்.
பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். துயர சம்பவம் நடப்பதற்கு முன்பே மருத்துவமனை தயாராக இருந்துள்ளது.
இவை அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சம்பவம் நடந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பாக வைக்க உத்தரவிட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்க வேண்டும். உண்மையைக் கண்டறிய வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
இவ்வழக்கை அவசர வழக்காகவும், நீதிமன்றம் தாமாக முன்வந்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் வழக்கறிஞர் அறிவழகன் நேற்று முன்தினம் நீதிபதி எம்.தண்டபாணியிடம் முறையிட்டார்.
சம்பவம் நடந்த இடம் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு உட்பட்டதால் அங்கு மனுதாக்கல் செய்தால், செப்டம்பர்.,மாதம் 29 ஆம் தேதி மதியம், 2:15 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்ததையடுத்து, த.வெ.க., வழக்கறிஞர்கள் நேற்று மதுரை கிளைக்கு வந்தனர். ஆனால்
அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை தசரா விடுமுறை உள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய மனுக்களை மட்டும் செப்டம்பர் மாதம்., 30 ஆம் தேதி காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றின் மீது அக்டோபர் மாதம்., 3 ஆம் தேதியில் விடுமுறைக்கால அமர்வால் விசாரணை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மனுதாக்கல் செய்தால், வழக்கு பட்டியலிடப்பட்டு அக்டோபர்.,3ஆம் தேதியில் விசாரிக்கப்படும் என, பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தவெக வழக்கறிஞர் அறிவழகன் கூறியது:
"உடற்கூராய்வை மாலை, 6:00 மணிக்கு மேல் மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், கரூரில் அன்று ஒரே இரவில் அவசர, அவசரமாக 39 பேருக்கு உடற்கூராய்வு செய்துள்ளனர்.
இது எவ்வாறு சாத்தியம். இவற்றை மேற்கொள்ள டாக்டர்கள் எங்கிருந்து வந்தனர். அவர்கள் உடற்கூராய்வு செய்வதற்கான தகுதி படைத்தவர்களா? குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் எதற்காக காலி ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன உள்ளிட்ட சந்தேகங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.
த.வெ.க.,வுக்கு எதிராகவும், அதன் தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு எதிராகவும் சதி வலை பின்னப்படுகிறது. பிரசார வாகனத்தை தொண்டர்கள் பின் தொடர்ந்ததால் அவரது வாகனம் மெதுவாக வந்தது. மதியம், 3:00 முதல் இரவு, 10:00 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளித்தனர்.
அதன் அடிப்படையில் தான் அவர் வந்தார். ரோட்டின் இருபுறமும் மக்கள் கூடியிருந்ததால் வாகனத்தை வேகமாக இயக்க முடியவில்லை. பாதுகாப்புப் பணியில் 500 காவலர்கள் ஈடுபடுத்தப்படவில்லை". எனக் கூறினார்.
சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இரவில் உடற்கூராய்வு செய்யலாம்
2021ஆம் ஆண்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் பட்சத்தில் இரவில் அதனை மேற்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத நிலையில், கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த உடல்கள், சந்தேகிக்கப்படும் குற்றங்களில் இரவில் உடற்கூராய்வு செய்யக்கூடாது. சந்தேகங்களுக்கு இடமளிக்காத வகையில் இரவில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வுகளை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முன்னர்
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.
கருத்துகள்