முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சி.பி.ஐ., விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் த.வெ.க., வினர் தாக்கல் செய்த மனு மீது அக்டோபர்., 3 ஆம் தேதி விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் மக்கள் பலியான சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில்


த.வெ.க., வினர் தாக்கல் செய்த மனு மீது அக்டோபர்., 3 ஆம் தேதியில் பட்டியலிடப்பட்டு விசாரணை நடத்தும்.




தவெக தரப்பு சி.பி.ஐ., விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்க த.வெ.க.,வின் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு நேற்று வந்தனர். தசரா விடுமுறை காரணமாக மனுவை அவசரம் மனுவாக முன் கூட்டி விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுத்தது.

மனுவில் கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த இச்சம்பவம், 'திட்டமிட்ட சதி' என த.வெ.க., தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

அக்கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கரூர் கூட்டத்தில் காவலர்கள், அரசியல் கட்சியினர் துணையுடன், குண்டர்கள் திட்டமிட்டு இச்சம்பவத்தை நடத்தியுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தொண்டர்கள் மீது செருப்பு, கற்கள் வீசப்பட்டன. தடியடி நடத்தினர்.






கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில், அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நோயாளி இல்லாத ஆம்புலன்சை வேண்டுமென்றே கூட்டத்தின் நடுவே செல்ல காவலர் அனுமதித்தனர்.

பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். துயர சம்பவம் நடப்பதற்கு முன்பே மருத்துவமனை தயாராக இருந்துள்ளது.










இவை அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சம்பவம் நடந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பாக வைக்க உத்தரவிட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி வழங்க வேண்டும். உண்மையைக் கண்டறிய வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வழக்கை அவசர வழக்காகவும், நீதிமன்றம் தாமாக முன்வந்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் வழக்கறிஞர் அறிவழகன் நேற்று முன்தினம் நீதிபதி எம்.தண்டபாணியிடம் முறையிட்டார்.

சம்பவம் நடந்த இடம் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு உட்பட்டதால் அங்கு மனுதாக்கல் செய்தால், செப்டம்பர்.,மாதம் 29 ஆம் தேதி மதியம், 2:15 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்ததையடுத்து, த.வெ.க., வழக்கறிஞர்கள் நேற்று மதுரை கிளைக்கு வந்தனர். ஆனால்

அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை தசரா விடுமுறை உள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய மனுக்களை மட்டும் செப்டம்பர் மாதம்., 30 ஆம் தேதி காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றின் மீது அக்டோபர் மாதம்., 3 ஆம் தேதியில் விடுமுறைக்கால அமர்வால் விசாரணை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மனுதாக்கல் செய்தால், வழக்கு பட்டியலிடப்பட்டு அக்டோபர்.,3ஆம் தேதியில் விசாரிக்கப்படும் என, பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தவெக வழக்கறிஞர் அறிவழகன் கூறியது:

"உடற்கூராய்வை மாலை, 6:00 மணிக்கு மேல் மேற்கொள்ள மாட்டார்கள். ஆனால், கரூரில் அன்று ஒரே இரவில் அவசர, அவசரமாக 39 பேருக்கு உடற்கூராய்வு செய்துள்ளனர்.

இது எவ்வாறு சாத்தியம். இவற்றை மேற்கொள்ள டாக்டர்கள் எங்கிருந்து வந்தனர். அவர்கள் உடற்கூராய்வு செய்வதற்கான தகுதி படைத்தவர்களா? குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் எதற்காக காலி ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன உள்ளிட்ட சந்தேகங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.

த.வெ.க.,வுக்கு எதிராகவும், அதன் தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு எதிராகவும் சதி வலை பின்னப்படுகிறது. பிரசார வாகனத்தை தொண்டர்கள் பின் தொடர்ந்ததால் அவரது வாகனம் மெதுவாக வந்தது. மதியம், 3:00 முதல் இரவு, 10:00 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளித்தனர்.

அதன் அடிப்படையில் தான் அவர் வந்தார். ரோட்டின் இருபுறமும் மக்கள் கூடியிருந்ததால் வாகனத்தை வேகமாக இயக்க முடியவில்லை. பாதுகாப்புப் பணியில் 500 காவலர்கள் ஈடுபடுத்தப்படவில்லை". எனக் கூறினார்.

சில சந்தர்ப்பங்களில் மட்டுமே இரவில் உடற்கூராய்வு செய்யலாம் 

 2021ஆம் ஆண்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் பட்சத்தில் இரவில் அதனை மேற்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாத நிலையில், கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த உடல்கள், சந்தேகிக்கப்படும் குற்றங்களில் இரவில் உடற்கூராய்வு செய்யக்கூடாது. சந்தேகங்களுக்கு இடமளிக்காத வகையில் இரவில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வுகளை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முன்னர்     





கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...