முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடி போதையில் ஓட்டி வந்தவனது மோட்டார் சைக்கிளே ஆம்னிப் பேரூந்தின் தீ விபத்துக்குக் காரணம்

தெலுங்கானா மாநிலம்





ஹைதராபாத்திலிருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு வி காவேரி எனும் தனியார் படுக்கை வசதி சொகுசு ஆம்னிப் பேருந்து 41 பயணிகளுடன் ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கர்னூல் மாவட்டம், 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்ன டேக்கூரு எனுமிடத்தில், நேற்று அக்டோபர் .25 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த குடிபோதை நபரின் மோட்டார் சைக்கிள் மீது சொகுசுப் பேருந்து வேகமாக மோதியதில், மோட்டார் சைக்கிளில் குடி போதையில் வந்தவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஆனால், பேருந்தின் அடியில் அந்த மோட்டார் சைக்கிள் மட்டும் சிக்கிக் கொண்டது. பேருந்தின் ஓட்டுநர் அதைக் கவனிக்காமல் வந்த அதிவேகத்தில் பேருந்தை சுமார் 350 மீட்டர் வரை பிரேக் நிற்காமல்  ஓட்டியுள்ளார். அதில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் நிரப்பி வெடித்ததில், பேருந்தில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியது.

அதிகாலை தூங்கி கொண்டிருந்த பயணிகளில் கீழ் வரிசையில் உள்ள படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே பேருந்தில் இருந்து இறங்கி உயிர் பிழைத்தனர். மேல் படுக்கையில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து கீழே இறங்குவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது. தீ மற்றும் புகையினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் பேருந்தில் இருந்த 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.





தகவல் அறிந்த கர்னூல்  காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர், மற்றும் ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் மீட்புந் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்து சாலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம்  கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருக்கையில் இருந்தபடியே பலர் உயிருடன் எரிந்து இறந்துள்ளனர். ஆதலால் எலும்புக் கூடுகளாக இருக்கும் இவர்கள் யார் யார் என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படுகிறது. இறந்தவர்கள் சிலரின் உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தி அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் வருகிறது. கர்னூல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுனரைக் கைது செய்யத் தேடி வருகின்றனர். எரிந்த பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களால் தீயின் தீவிரம் அதிகரித்ததா? என்ற கோணத்தில் முதலில் விசாரணை நடந்து வந்த நிலையில் தான் குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த நபர் மூலம் என முடிவானது 




சொகுசுப் பேருந்துகளில் பயணிகளை ஏற்றி விழாக்காலத்தில் விமானக் கட்டணம் போலவே வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக உள்ளனர் ஆம்னி பேருந்து நடத்தும் உரிமையாளர்கள் ஆனால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதில்லை இதை லஞ்ஞ ஊழலில் மிதக்கும் போக்குவரத்துத் துறையும் கண்டு கொள்வதில்லை. விபத்து ஏற்பட்டால் நான்கு புறமும் அவசர வாயில்கள் தப்பிக்க ஏதுவாக அமைக்கப்பட வேண்டும் கண்ணாடிகளை உடைக்க சுத்தியல்கள் இருக்க வேண்டும் இதையெல்லாம் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் எந்த மாநிலத்திலும் பரிசீலிக்கவில்லை. போக்குவரத்துத் தற்காலிக உரிமம் மற்றும் துறையின் அலட்சியமும் பேருந்து உரிமையாளரின் அலட்சியமும்  மதுக்கடை இருக்கும் நிலையில் போதை நபர் சேர்ந்து பல உயிர்களைப் பலி வாங்கியுள்ளது.44 பேருடன் நேற்று சென்று கொண்டிருந்த போது, கர்னூல் நகரருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் பேரூந்தின் கீழே இழுத்து செல்லப்பட்டதில், அதன் எரிபொருள்  நிரப்பி மீது மோதியுள்ளதால் அது வெடித்துள்ளது. சம்பவம் நிகழ்ந்த போது, பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். தீ விபத்தின் போது ஏற்பட்ட மின்கசிவால், பேரூந்தில் ரிமோட் கதவுகள் பூட்டி கொண்டு திறக்க முடியாமல் போனதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.விபத்தின்போது, ஜன்னல்களை உடைத்து 20 பயணிகள் உயிர் தப்பினர். எனினும், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆம்னி பேரூந்து விபத்தில் பலர் பலியான சம்பவத்திற்கான காரணம்  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 234 ஸ்மார்ட்போன்கள் இருந்துள்ளன ரூபாய் 46 லட்சம் மதிப்பிலான இந்த செல்போன்கள் மங்காநாத் என்ற ஐதராபாத் நகரை சேர்ந்த மார்வாடி தொழிலதிபரால் பார்சலாக அனுப்பப்பட்டுள்ளது.









 தடயஅறிவியல் நிபுணர்கள் கூறும்போது, அதிலிருருந்த பேட்டரிகள் வெடித்து, அது தீ பரவுதலில் பெரும் பங்காற்றியிருக்கக் கூடும் எனத் தெரிவித்தனர். அந்த செல்போன்கள் மேலும் ஆய்வுக்கு பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அலட்சியம் மற்றும் அதிவேகம் ஆகியவை ஓட்டுநருக்கு எதிரான முக்கியக் குற்றச்சாட்டாக  உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.நமது பாரதக் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விபத்து குறித்து ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ஏற்பட்ட ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.   விபத்து குறித்துப் பேசிய தீயணைப்புத் துறை அலுவலர், "தீ விபத்துக்குப் பிறகு கண்ணாடியை உடைக்க சுத்தியல்கள் எதுவும் பேருந்தில் இல்லை. மோட்டார் சைக்கிள் மோதிய பிறகு பேருந்தின் ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. பேருந்தின் டீசல் தொட்டி தீப்பிடிக்கவில்லை. ஆனால், பேருந்து முற்றிலும் சேதமடைந்து விட்டது. இது குறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார். பாரதப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூபாய். 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய். 50,000 வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூரு கிராமத்துக்கு அருகில் ஹைதராபாத் - பெங்களூரு வழித்தடத்தில் நடந்த துயரமான பேருந்து தீ விபத்து குறித்து கவலையும் வேதனையும் அடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி உள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கர்னூல் மாவட்டத்தில் சின்ன தேகூர் கிராமத்துக்கு அருகே நடந்த பேருந்து விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதகி்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள்" என தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "கர்னூல் மாவட்டத்தில் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்குச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திரப் பிரதேச உயர் அலுவலர்களிடம் பேசி நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி மற்றும் பிற நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் வழங்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஜோகுலாம்பா கட்வால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுமாறு உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.                     





சென்னை மண்னடி, ஜார்ஜ் டவுன் சௌகார்பேட்டை,  பகுதிகளில் பெரும்பாலான வீடுகளுக்குள் சகலவித வசதிகளுமிருக்கும்..

ஆனால் அந்தப் பழங்காலக் கட்டிடங்களுக்கு  இடைவெளியே இல்லாதது, தெருக்களாக இல்லாமல் சந்துகளாக மட்டுமே இருப்பது போன்றவற்றால் தீ விபத்து போன்றவை அங்கு ஏற்பட்டால் அவசரத்துக்கு அவர்கள் தப்பிக்கவே முடியாது.

அதே போலத் தான் முற்கால பாண்டிநாட்டு மக்கள் வணிகம் செய்த பாண்டி பஜார் மற்றும் தியாகராயநகர்,  ரங்கநாதன் தெரு ராமநாதன் தெரு டைப் வணிக வளாகங்கள்.

அவசரக் காலங்களில் மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத பகுதிகள், 

அந்த அடிப்படையில்  தான் சொகுசுப் பேருந்துகளும். உள்ளே உட்காரவோ படுக்கவோ சகல வசதிகளுமிருக்கும். ஆனால்

அதற்குள் அமர்வதற்கு முன்பு போதிய இடமின்மையால் அவ்வளவு நெருக்கடிகளைப் பயணிகள் சந்திக்க வேண்டியதிருக்கும்.

பயணிகள் சுலபமாக நடமாடுவதற்கே இடமில்லாத போது தீ பரவல் போன்ற அவசரக் காலங்களில் எப்படி தப்பிப்பது?

அதனால் தான் சொகுசு பேருந்துகளில் விபத்து என்றால் தப்பிப் பிழைப்பது பெரும் கஷ்டம்


1995 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரம்- பொடவூர் விபத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் கூட தப்பிக்க முடியாமல் அப்படியே கருகிப்போன JJTC எலும்புக்கூடு  பேருந்தை,  பணிமனைக்கு  போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு உதவி செய்து  இழுத்துச் சென்றதை யாரும் மறந்திருக்க வாய்ப்பேயில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...