முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோத்தி மஹா தீப ஆராத்தி கின்னஸ் சாதனை

தீபாவளிக்கு முன்னதாகவே பத்து மணி நேரம் முன் அயோத்தியில் நடைபெற்ற மஹா தீப உற்சவத்திற்காக சரயு நதிக்கரையில் 2100 பக்தர்கள் ஓரே நேரத்தில் ஆரத்தி எடுத்தனர்


இந்த ஆண்டு அயோத்தி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தது  அயோத்தியாவில் நடைபெற்ற தீபாவளி மஹாதீபோற்சவ விழா இந்த முறை மேலும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில், இராமாயணத்தின் அத்தியாயங்களை மையமாக


26 லட்சம் வண்ணமய விளக்குகளால், ஜெகஜோதியாக ஜொலித்த அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில். உத்திரப்பியதேச மாநிலம் அயோத்தியாவில் நடைபெற்ற தீபாவளி மஹா தீபோற்சவ விழா இந்த முறை மேலும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், இராமாயணத்தின் அத்தியாயங்களை மையமாகக் கொண்ட பல்வேறு அம்சங்கள் முக்கிய ஈர்ப்பாக இருக்குமெனத் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ இராமரின் வாழ்க்கை, சீதையின் பாத்திரம், ஹனுமான் சேவை போன்ற முக்கிய அத்தியாயங்கள் ஒளி, ஒலி, கலை வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தார்கள், 




அயோத்தியை முழுமையாக ஒளிரச் செய்யும் இந்த மஹா தீபோற்சவ் விழா உத்திரபிரதேசத்தின்  அக்டோபர் மாத சிறப்பம்சமாக உள்ளது   இந்த நிலையில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு செருப்பு, டர்பன் அணிந்த சூரிய வம்ச சத்திரியர்கள்! உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான நபர்கள் முன்னர் நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர் என்பதை அணைவரும் அறிவார்கள்.



22.01.2024 அன்று அயோத்தியில் ஸ்ரீ ராமர் பிறந்த அதே இடத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று வேறொரு முக்கியமான சம்பவம் நடந்தது.

அயோத்தியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சத்து 50ஆயிரம் சூரிய வம்ச சத்திரியர்கள், 500 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக செருப்பு மற்றும் டர்பன் அணிந்தனர்

இஸ்லாமிய மன்னர் பாபர் ஆட்சியில், ராமஜென்ம பூமி ஆலயம் இடிக்கப்பட்ட போது, அதை காப்பாற்ற வீரமாக போரிட்ட இந்த சூரிய குல சத்திரிய வம்ச வீரர்கள், தங்களது வீரத்தை மீறி கோவில்




இடிக்கப்பட்டதால் மிகவும் மனம் வருந்தினர்.

மீண்டும் இதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் வரை, நாங்கள் டர்பன், செறுப்பு அணிய மாட்டோம், குடை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து சூரிய வம்ச சத்திரியர்களும் சபதம் செய்தனர்

தங்கள் முன்னோர்கள் போட்ட சபதத்தை மீறாமல், 500 ஆண்டுகளாக அதாவது ஜந்து

நூற்றாண்டுகளாக இந்த சூரிய வம்ச  சத்திரியர்கள், கல்யாணக் காலங்களில் கூட

செருப்பு டர்பன் குடை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டினர் இப்போது அனைத்து கிராமங்களிலும்


சூரியவம்சம்சத்திரியர்களுக்கு 22 ஆம் தேதி அணிந்து கொள்வதற்காக புதியதாக டர்பன் தயாரிக்கப்பட்டு கிராமம் கிராமமாக கும்பாபிஷேகம் டந்த போது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாரானது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து அற்புதமான படங்கள் வெளிவந்தன, இது தற்போது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.


ராம ஜென்மபூமி 2025 தீபாவளிக்கு தயாரான நிலையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி மந்திரின் முதல் தளத்திலிருந்து முதன்முதலில் காட்சிகளாக பிரமாண்டமான ஸ்ரீ ராமர் தர்பாரின் காட்சியை வழங்குகிறது. தெய்வீக மரியாதையை ஊக்குவிக்கவும் கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த தளம், ஸ்ரீ ராமரின் அரசவையை அழகாக பிரதிபலிக்கிறது.


முதல் தளத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஐந்து அரங்குகள் உள்ளன: நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் இதில் உள்ளது. மையத்தில், ஸ்ரீ ராமர், மாதா சீதா, ஹனுமான் மற்றும் ராமரின் சகோதரர்களான பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருகன் ஆகியோரின் பளிங்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ ராமரும் சீதையும் தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள், ஹனுமானும் பரதனும் அவர்களின் காலடியில் இருக்கிறார்கள், லட்சுமணனும் சத்ருகனும் அவர்களுக்குப் பின்னால் மரியாதையுடன் நிற்கிறார்கள். இந்த காட்சிகள் பக்தர்ளை மெய்சிலிர்க்க வைத்ததுடன், கட்டிடக்கலை அழகை எடுத்துக்காட்டுகின்றன. இந்தாண்டு தீபாவளி சிறப்பு வழிபாடு  அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும், தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இன்று முக்கிய மஹா தீப உற்சவம் நடைபெற்றது அயோத்தி மாநகரம் 28 லட்சம் தீபங்களால் ஒளிரச் செய்யப்பட்டது .29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்றத் திட்​ட​மிடப்​பட்​டதன்​ முலம் 2024 ஆம் ஆண்டு (26 லட்​சம் அகல் விளக்​கு​கள்) என்ற சாதனை முறியடிக்​கப்பட்டது. இவ்​விளக்​கு​கள் சரயு நதி​யின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களில் ஒளிர உள்​ளன. தீபாவளிக்கு தமிழ்நாட்டில்  நரகாசுர வதம் காரண​மானதைப் போல், உத்திரப்பிரதேசில் ஸ்ரீ ராமர் போருக்​குப் பின் அயோத்தி திரும்பியதன்

நினை​வாக தீபாவளிப் பண்​டிகை கொண்​டாடப்​படு​கிறது. மேலும் தற்போது 1,100 டிரோன்​கள் வானில் தீபாவளிக்​காக பறக்​க​விடப்பட்டன. இவற்​றில் இராமாயணத்​தின் காட்​சிகள் ஒளிப்​படங்​களாக சித்​தரிக்​கப்பட்டன. இதுகுறித்து மாநில சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கூறிய போது, “அயோத்​தி​யின் வெறும் தீபாவளித் திரு​நாள் விழா​வாக அன்றி ஆன்​மிகம், நம்​பிக்​கை, கலாச்​சா​ரம் உள்​ளிட்​ட​வற்​றின் மெகா விழா​வாக கொண்​டாடப்பட உள்​ளது. இந்த வருட​மும் தீபாவளிக்கு வரும் வெளி​நாட்​ட​வர்​கள் இடையே இது சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வின் கலாச்​சா​ரத்தை வெளிப்​படுத்​தும். இதைக் காண வரும் லட்​சக்​கணக்​காக பொது​மக்​களுக்​காக அயோத்​தி​யில் சிறப்பு போக்​கு​வரத்​துடன் பாது​காப்​பு​களும் பலப்​படுத்த உள்​ளன” என்​றார்.அயோத்​தி​யின் தீபாவளி நிகழ்ச்​சிக்​காக அரசு வழக்​கம் போல், தன்​னார்​வலர்​கள் உதவியைப் பெற முடிவு செய்​துள்​ளது. இப்​பணிக்கு வர விரும்​புபவர்​கள் மாநில அரசின் இணை​யதளத்​தில் சுய​விவரங்​களைப் பதிவு செய்​ய​லாம். இதில் தமிழ்​நாட்​டிலிருந்​தும் பலர் தன்​னார்​வலர்​களாகப் பணி​யாற்ற விருப்​பம் தெரி​வித்து பதிவு செய்​து சென்றுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...