முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமாவளவன் சென்ற கார் மோதிய வழக்கறிஞர் மீதே தாக்குதல் நடத்திய அவரது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தல்

சென்னை பாரிமுனை உயர்நீதிமன்றத்தின் வளாகம் அருகில் வி.சி.கட்சி தலைவரான


திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், வண்டியில் சென்ற வழக்கறிஞர், திருமாவளவன் கார் ஓட்டுநருடன் இந்த தவறு குறித்து பேசியதால் அவருடன் வந்த ஒரு கும்பல் திருப்பித் தாக்குதல் நடத்தும் காணொளிக் காட்சி  வெளியாகியுள்ளது. சென்னை உயர்  உயர் நீதி மன்ற வழக்கறிஞர் மு.ராஜீவ் காந்தி MA. BL இரு சக்கர வாகனம் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கார் இடித்துள்ளது





வழக்கறிஞர் திரும்பிப் பார்த்து ஓட்டுனரிடம் கவனமாக வரக் கூடாதா? எனக் கேட்டுள்ளார் அதற்கு  அவரது கட்சியை சேர்ந்த  சில நபர்கள் மூர்க்கத்தனமாக அடித்துள்ளார்கள் அவர் சென்ற இரு சக்கர வாகனத்தை அடித்துத் தள்ளி நொறுக்கியுள்ளனர் அந்த வழக்கறிஞர் பாதுகாப்பு வேண்டி தமிழ் நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் அலுவலகம் உள்ளே செல்கிறார் அங்கேயும் உள்ளே புகுந்த  விசிக நபர்கள் உள்ளே புகுந்து  வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை  கொடூரமாகத் தாக்கி உள்ளார்கள் தற்போது  மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வருகிறார் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அவர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி  ஆப்பனூர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்றும் அவரது தந்தை முத்து ராமலிங்கம் என்றும் அவர் எம்ஜிஆருக்கு உதவியாளராக இருந்தவர் என்றும்  சென்னை இராமாவரம் தோட்டத்தில் வசித்து வருவதாகவும் தகவல் வருகிறது. வழக்கறிஞர் ராஜீவ் காந்தி சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞரை கொடூரமாக தாக்கிய விசிக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்தோர் சட்டப் பாதுகாப்பு மையம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது தமிழ் நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் அலுவலகம் உள்ளே புகுந்து வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி  நபர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலகட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறனர். அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிலையில், ஆர்ப்பாட்டம் முடிந்து, அவரது காரில்  புறப்பட்டுள்ளார்.



அப்போது சென்னை பாரிமுனையில், காரில் சென்றுகொண்டிருக்கும் போது வழக்கறிஞரின் பைக்கில்  மோதியுள்ளது. ஆத்திரமடைந்தவர்,  திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால், விசிகவினர், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  உடன் காவலர் ஒருவரும் சேர்த்து நடந்த இந்த தாக்குதலில் சிலர் பைக்கை சாலையில் தள்ளிவிட்ட நிலையில், இதனால் பயந்த வழக்கறிஞர் சாலையில் ஓடியபோது அவரை விடாமல் துரத்திச் சன்று வி.சி.க.வினர் தாக்கியுள்ளனர்.


மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த காணொளிக் காட்சிகள் பதிவு சமூக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் வி.சி.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். தன் மீதான தாக்குதல் குறித்து அவர் பார் கவுன்சிலில் வாய்வழிப் புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பைக் மீது கார் மோதிய விபத்தில், வழக்கறிஞர் மீது வி.சி.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் வழக்கறிஞர் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அராஜகம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, உங்கள் கூட்டணி கட்சியினராக உள்ள காரணத்தால், சென்னையின் இதயமாம், பாரிமுனையில் நடைபெற்ற இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறீர்களா? நான் அனைவருக்கும் முதல்வர் என்று நெஞ்சை நிமிர்த்தி கூறினீர்களே? இப்போது இப்படிப்பட்ட ரௌடி கும்பல் ஒரு தனிமனிதனை தாக்கும் போது நடவடிக்கை எடுக்க இதயம் இல்லாது மௌனம் காக்கிறீர்களே? நியாயமா? இது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு வழக்கறிஞரை அடிப்பாங்களாம்.





பின் வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தை தள்ளி உடைப்பார்களாம்.  பார்ப்போம். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை என்ன செய்கிறதென்று? என பலரும் பேசும் நிலையில்

மனசாட்சி உள்ள, மனித உரிமை அமைப்புகள் யார் தான் வழக்குத் தொடுக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...