முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய தேர்தல் ஆணையத்தின் SIR நாளை ஆரம்பம்!

தேசிய தேர்தல் ஆணையத்தின் SIR அடுத்த வாரம் ஆரம்பம்! 

2026 ஆம் ஆண்டில் தேர்தலைச் சந்திக்கும் தமிழ்நாட்டில் நாளை முதல் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் துவங்கும் என தேசிய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை திருத்தம் செய்யும் முன்னெடுப்பு பீகார் மாநிலத்தில் துவங்கி தொடர்ந்து  மேற்கு வங்காளம் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் செயல்ப்படுத்தப்படும். 


இந்தியக் குடியுரிமை உள்ள நபர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இனி வழங்கப்படும்!  என இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது சரியான செயல் தான்தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு திருத்தம்








நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் துவங்கும் தேதியை இன்று அறிவித்தது  இந்தியத் தேர்தல் ஆணையம்

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக இன்று அக்டோபர் மாதம்.27 ஆம் தேதி வெளியானது முக்கிய அறிவிப்பு  

 இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் செய்தியாளர்களை இன்று மாலை சந்தித்தார் 

தீவிரமாக வேலை செய்து வரும் தேசிய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR).

தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் இறுதி நேரத்தில் இந்த நடவடிக்கையை எடுத்து  வேலைகளை எப்படி மேற்கொள்ளும் அது 

எப்படி செய்யப்படும் எனக் காணலாம்:- தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி



ஒரு வாக்குச் சாவடி மையத்தில் ஆயிரம் வாக்காளர்களுக்கு குறையாமல் இருப்பார்கள் 

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் பூத் லெவல் அலுவலர் ஒருவர் பணியில் இருப்பார்

 ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் இருப்பார் 

அந்த அலுவலர் சப் டிவிஷனல் மேஜிஸ்திரேட்டாக இருப்பார்


 இவர் மாதிரி வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பார் அதன் அடிப்படையில் வாக்காளர்களிடமிருந்து வரக்கூடிய கருத்துக்களை அவர் பதிவு செய்வார் அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை தயார் செய்து அதை வெளியிடுவார் 

ஒவ்வொரு தாலுகாவிற்கும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் இருப்பார்கள் 

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்றால் மாவட்ட ஆட்சியரிடம் முதல் முறையீடை சம்பந்தப்பட்டவர்கள் செய்யலாம்

அங்கு நிராகரிக்கப்படுகிறது என்றால் மாவட்ட ஆட்சியரின் முடிவிற்கு எதிராக மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் இரண்டாவது முறையீடை மேற்கொள்ளலாம்.              நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கான பணிகள் தொடங்கும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அணைத்து அரசியல் கட்சிகளுடன் அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு எஸ்.ஐ.ஆர் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப,. தெரிவித்தார் சிறப்புத் தீவிரத் திருத்ததுக்கான தேவை பற்றி முன்னர் பல முறை விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய தேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவது அவசியமென்றார்.

" சில ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலில் குறைபாடு உள்ளதெனப் புகாரளித்தனர். 1951 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை எட்டு முறை தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிரத் திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக சிறப்புத் தீவிரத் திருத்தம் நடத்தப்பட்டு 21 ஆண்டுகளாகிறது." என்றார்.

பிகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அங்கு சிறப்புத் தீவிரத் திருத்தம் அறிவிக்கப்பட்டது. அங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான அவசியம் குறித்து தேர்தல் ஆணையம்  காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.

1.விரைவான நகரமயமாக்கல்மக்கள் இடப்பெயர்வு இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெறுவது

2.வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது





பிகார் மக்கள் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வெளிப்படுத்தியதாக ஞானேஷ் குமார் தெரிவித்தார். இந்தப் பணியின் போது தேர்தல் ஆணையத்துடன் பல தேர்தல் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

 இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் அறிவிப்பு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசியதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் 2-ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார்   இந்த நிலையில் வாக்காளர் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்களாக







அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்டப்படிப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட பல ஆவணங்கள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஆதார் என்பது குடியுரிமை, இருப்பிடம் அல்லது பிறந்த நாளுக்கான சான்று இல்லை எனத் தெரிவித்த ஞானேஷ் குமார், ஆனால் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு அதை ஒரு அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

முக்கியமான நாட்கள்

அச்சிடுதல்/பயிற்சி: அக்டோபர் மாதம் 28 - நவம்பர் மாதம் 3, 2025

வீடு வாரியாகச் சென்று தகவல் சேகரிப்பது: நவம்பர் மாதம் 4 - டிசம்பர் மாதம் 4, 2025

வரைவு வாக்காளர் பட்டியல்: டிசம்பர் மாதம் 9, 2025

ஆட்சேபனை தெரிவிக்கும் காலகட்டம்: டிசம்பர் மாதம் 9, 2025 - ஜனவரி மகதம் 8, 2026

ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு: டிசம்பர் மாதம் 9, 2025 - ஜனவரி மாதம் 31, 2026







இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப்ரவரி மாதம் 7 , 2026 ஆம் தேதியாகும்.         தமிழ்நாட்டில் SIR நடத்துனா இதுவும் இந்தி பேசுற மாநிலமா மாறிடும்-  என திரள்நிதி இலங்கை வாழ் அயல்நாட்டு மக்களிடம் வாங்கி நடத்தும் நிலையில் பயம் காரணமாக நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்புவதில் 

சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்.

வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு. என  செய்தியாளர்களிடம்  அவர் கூறியது:-

வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி பேர் வேலைக்கு என தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் வாக்குரிமை கொடுத்துவிடுவீர்கள். அப்படி வாக்குரிமை கொடுத்துவிட்டால் தமிழ்நாடு இன்னொரு இந்தி பேசும் மாநிலமாக மாறும்.

இங்கு பல்வேறு தரப்பட்டு மக்கள் இருந்தாலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தி என்கிற ஒரே மொழியில் ஒற்றுமையாக நின்று விடுவார்கள். அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள்.

வடமாநிலத்தவர்களை தவிர்க்க முடியாத தொழிலாளியாக இங்கு அமர்த்தி, நம்மை இங்கு இருந்து விரட்டுவார்கள். அவர்களிடம் என்னுடைய அரசியலும், அதிகாரமும் போய்விட்டது என்றால் நான் இந்த நிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அகதியாக மாற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதற்கு முன்பே நாம் எச்சரித்துக் கொள்ள வேண்டும். வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு.. சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் தமிழர் தெருவில்தான் நிற்க வேண்டும்.SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள் தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட

வேண்டிய நேரம் இது என மற்றொரு தரப்பு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்த நிலையில்

மக்களின் வாக்குரிமையை பறித்து வந்த, ஜனநாயக விரோதமாக இயங்கிய போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை, மரணமடைந்தவர்களின் வாக்கு, அயல் நாட்டிலிருந்து ஊடுருவியவர்களின் வாக்குகள் எனும் இதுகாறும் இருந்த பெரும் சதிவலையத் தகர்த்தெறிகிறது SIR. இந்த சீர்திருத்தத்தை ஏற்பதற்கு மனமில்லாமல் புலம்பும் அரசியல் கட்சிகள் அதில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின், திமுகவின் முடிவுரை வெகு விரைவில் எழுதுவார் என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி  கருத்தும் இணைகிறது.

இங்கே என்னென்ன மாறங்கள் வருமோ?

தொடக்கத்திலேயே இவைகளைத் தடுக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்க்க அவர்கள் கூறும் காரணங்கள் பல பர்மாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் முன்பே அகதிகளாக வந்த பலர் தற்போது வாக்குரிமை பெற்ற நிலை உள்ளது. ஆனால் இந்தியா வந்த இந்தியாவில் பிறந்த பலர் மாநிலம் விட்டு மாநிலத்தில் வாழும் நிலையில் இனி பழைய தவறான நபர்கள் நீக்கி புதிய பலர் சேர்க்க இது வழிவகுக்கும் என்பதே.

அனைவரும் ஒன்றுபட்டால் அரண் அமைக்கலாம்! என்பது அக் கட்சிகள் திட்டம்.

பீகாரில்  ஓட்டுரிமை பறிக்கப்பட்டவர்கள் 65 லட்சம் என்றால், திராவிட ஒவ்வாமை கொண்ட தமிழ்நாட்டில் எவ்வளவு பேரை அயல் நாட்டு பிரஜை என வாக்குரிமையை காவு கேட்பார்களோ..? என்ற பயமே.

தமிழ்நாடு அனைத்து கட்சிகளும் – மண்ணின் மைந்தர்கள் என்ற வகையில் -  ஒன்று சேர்ந்து தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்  தேவையில்லை. இருப்பதே போதுமானது என தீர்மானம் நிறைவேற்ற முயன்றால் அதில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக,  தவெக அமமுக பங்கேற்குமா என்பது எழுவினா.? ஆனால் அந்த முன்னெடுப்பை செய்யப் போவது யார்?

என்பதே தற்போதய கேள்வி..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...